கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து - கி.வெங்கட்ராமன்

முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க 21.12.2011 அன்று கூடலூர் பகுதியில் கட்சி சார்பற்றுப் பேரணியாகச் சென்ற உழவர்களையும், பொதுமக்களையும் தமிழகக் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி காயப்படுத்தியுள்ளது. கண்ணீர் புகை வீசியுள்ளது. காவல்துறையின் இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஐ.ஜி இராஜேஷ் தாஸ் ஆணைப்படி தமிழகக் காவல்துறை தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் உச்சமாக டிசம்பர் 21 அன்று  மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது

மலையாள இனவெறியோடு நடந்து கொள்ளும் கேரள அரசின் தமிழின பகைக்கு எதிராக தேனி மாவட்டத்து தமிழ் மக்கள் கொந்தளித்து போய் கடந்து இரண்டு வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நீடித்து வருகிறது. இச்சூழலை பொறுப்போடு கையாள வேண்டிய காவல்துறை அதிகாரிகள் இதையே காரணமாக வைத்து அப்பாவி தமிழ் மக்கள் மீது போர் தொடுப்பது போல் கொடுந்தாக்குதல் நடத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.கேரளத்தின் அடாவடிக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமாக மதித்து கேரள அரசு திட்டமிட்ட முறையில் அணையின் வலுகுறித்து பீதியைக் கிளப்பி மலையாள இனவெறியை தீவிரப்படுத்தியது. தமிழினத்திற்கு எதிரான பகையுணர்ச்சியை கிளப்பியது. கேரளத்தில் உள்ள தமிழர்களும் அவர்களது நிறுவனங்களும் மலையாள வெறியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டன. கேரளத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தாக்கப்பட்டனர்; இழிவுப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் இருந்து பணியாற்றச் சென்ற உழைக்கும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்த அட்டூழியங்கள் அனைத்திலும் மலையாள இனவெறியர்களோடு கேரளக் காவல் துறையும் சேர்ந்து கொண்டது. கேரளத்திலிருந்து தமிழர்கள் பலர் குடும்பம் குடும்பமாக உள்நாட்டு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
கேரள அரசும் அனைத்து கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் இடித்துவிடுவது என்பதில் முனைப்பாக உள்ளனர்.அதற்கு இசைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என சூழ்ச்சி திட்டம் வகுத்து செயல்படுகிறார்கள். அவ்வாறு 120 அடியாக நீர்மட்டம் குறைக்கப்படுமானால் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு அணை இல்லாதது போன்ற நிலைதான் ஏற்படும். அணையை ஒட்டியுள்ள தேனி மாவட்டப் பகுதிகளில் கூட ஒருபோக சாகுபடிக்கே திண்டாட்டமாகிவிடும், கொடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
அரசமைப்பு சட்டபடி உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு கேரள அரசை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க ஒத்துழைக்க வேண்டும் என அரசமைப்பு விதி 355ன் கீழ் இந்திய அரசு கேரளாவிற்கு தாக்கீது அனுப்பிருக்க வேண்டும். அவ்வாறான தனது சட்டக் கடமையை செய்யாதது மட்டுமின்றி கேரளாவின் சட்டமீறல் அனைத்திற்கும் இந்திய அரசு துணை போகிறது.
இந்தியப் பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள தேசிய பேரிடர் மேலான்மை ஆணையம் தற்போது ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழே உள்ள இடங்களில் நிலநடுக்கத்தாலோ, வெள்ள பெருக்காலோ அல்லது இவை இரண்டாலோ ஆபத்து நேர வாய்ப்புண்டா எனக் கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு செயல் திட்டத்தை உருவாக்குவதுதான் இவ்வல்லுநர் குழுவின் பணி என்று இந்திய அரசின் அறிவிக்கை தெரிவிக்கிறது. இவ்வல்லுநர் குழுவில் ரூர்க்கி ஐ.ஐ.டியின் நிலநடுக்க பொறியியல் துறை பேராசிரியர் டி.கே.பால் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் முல்லைப் பெரியாறு பிரச்சினைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் சாட்சியம் கூற அவ்வரசால் முன்மொழியப்பட்டு நிதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவர். இப்போது இந்திய அரசு நியமித்துள்ள வல்லுநர் குழுவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் இந்நடவடிக்கை அதன் தமிழினப் பகை உள்நோக்கத்தை கேரளாவிற்குச் சாதகமான அதன் ஒருதலைச் சார்பை மேலும் தெளிவாக்குகிறது. உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு சிக்கல் தொடர்பாக ஐவர் குழுவை நியமித்து விசாரித்து வரும் நிலையில் அதற்கு புறம்பாக இன்னொரு வல்லுநர் குழுவை இந்திய அரசு நியமித்தது அப்பட்டமான சட்டமீறலாகும்.
கேரள அரசின் அடாவடியைக் கண்டித்தும் இந்திய அரசின் ஒருதலைச் சார்பை எதிர்த்தும் அவ்வப்போது கண்டனக்கடிதங்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். தற்போது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்ப்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டதிற்கும் இந்தியப் பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு மேல் கேராளாவின் அடாவடியை முறியடிப்பதற்கும் இந்திய அரசின் கேரளச் சார்ப்பை எதிர்ப்பதற்கும் உருப்படியான பதில் நடவடிக்கை எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. மலையாள வெறியர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும் தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தையும் மானத்தையும் காத்துக்கொள்ள தமிழ்மக்கள் தற்காப்புப் போராட்டத்தில் வேறு வழியின்றி இறங்கியுள்ளனர். அரசுகள் தங்கள் உரிமையை பாதுகாத்து தரா என்ற நிலையில் மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.கேரளத்திற்கு எதிராக பொருளியல் தடை விதிக்கக் கோரி இலட்சக்கணக்கில் கட்சி சார்பற்று வீதியில் திரளும் தமிழர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு மாறாக அவர்களைத் தமிழக காவல்துறை மூலமாக தடிகொண்டு தாக்குவது கொடுமையிலும் கொடுமையாகும்.
கூடலூரில் தமிழர்களுக்கு எதிராக தமிழகக் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்ப்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட இராஜேஷ் தாஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் நிலவும் கொந்தளிப்பைக் கணக்கில் கொண்டும், முல்லைப் பெரியாறு  அணை உரிமைப் பாதுகாப்பைக் கருதியும் குறைந்தது ஒரு மாதத்திற்கு கேரளத்திற்குச் செல்லும் தமிழகப் பாதைகள் அனைத்தையும் மூடி, பொருள் போக்குவரத்தைத் தடை செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனக் கோருகிறேன். இதனால் தமிழ்நாட்டு உழவர்களும் உற்பத்தியாளர்களும், வணிகர்களும் பாதிக்கப்படாத வகையில் அவர்களது அரிசி, காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர தமிழக அரசு பொறுப்பேற்று போர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்:

தமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வெங்கட்ராமன் பேச்ச!

முல்லைப் பெரியாறு அணையை
உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மதுரையில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

"முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்" என வலியுறுத்தி, இன்று(03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கட்டக்குளம் இராமசாமி, வாடிப்பட்டி தேவராசன், நடராசன், பெரியசாமி மற்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், கதிர்நிலவன்(த.தே.வி.இ.), மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், நாயகம் (இயற்கை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு மலையாளிகளின் உரிமை மறுப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "நேற்று கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.

ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.

கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித்  தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.


இன்று மாலை குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை" என்று பேசினார்.

பெருந்திரள் உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் பா.இராசேந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

0 கருத்துகள்:

கூடங்குளம் அணு உலை - அப்துல்கலாமின் குழப்பல் வாதம் - தோழர் - கி. வெங்கட்ராமன்

சிறந்த அறிவியலாளர், மனிதநேயர் என்று முனைவர் அப்துல் கலாமைக் கருதி கொண்டிருந்த பலரும் கூடங்குளம் அணு உலை குறித்த அவரது நேர்காணலைக் கேட்டபிறகு அதிர்ச்சியும் அருவெறுப்பும் அடைந்தார்கள். பொய்யுரையும், திரிபுகளும் நிறைந்த அவரது இந்தப் பேச்சு மக்களைக் குழப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருந்தது. கூடங்குளம் அணு உலையை இயக்கச் செய்வதற்காக இந்திய அரசின் தூதராக தான் வரவில்லை என்று சொல்லி கொண்டாலும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் முயற்சி உண்மையில் அதுவாகத்தான் இருக்கிறது.

கடந்த 06.11.2011 அன்று கூடங்குளம் அணு உலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு அவர் நடுநிலையாளர் அல்ல என்பதை அம்பலப்படுத்தியது. அணு உலையின் அவசியம் பற்றி அப்துல் கலாம் அதிகமாகவே வலியுறுத்தியவர்தான். என்றாலும் கூடங்குளம் செல்கிற அன்று ’இந்து’ நாளேட்டில் ஸ்ரீ ஜன்பால் சிங் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய நீண்ட கட்டுரை அவரது முன் முடிவை எடுத்துக் காட்டியது.
ஏற்கெனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஆற்றல் துறையினரும் கூறி வருவதைப் போலவே அணு மின்சாரத்தின் அவசியம் குறித்து பொய்யான விவரங்கள் அடிப்படையில் அப்துல் கலாமும் வலியுறுத்துகிறார்.
அணு உலை இயங்கும் போது சாதாரண காலத்திலேயே - இயல்பான உற்பத்தி நடக்கும்போதே அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அப்துல் கலாம் மறுத்தார்.
அதைவிட அணுமின் உலை கதிரியக்கத்தின் வெளிப்பாட்டால் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏதும் வராது என்று அடித்துப் பேசினார். அணுமின்சார உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கமானது உடனடியாக தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு புற்று நோயை உருவாக்கும் என்பதையும், அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கும் தொடர் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதையும் அடியோடு மறுத்த அப்துல் கலாம் இது காமிக் கதைகள் போன்ற கற்பனை என்று எள்ளி நகையாடினார். ஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பு கள் கூட மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை என்று கூறினார்(தி இந்து கட்டுரை, 06.11.2011).
அதே கட்டுரையில் கதிரியக்கம் தாக்கினால் மனித உடலில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை என்றும் கூறிக்கொள்கிறார்.
ஹிரோஷிமா அணு குண்டு வீச்சால் இன்று வரை ஜப்பானியர்களிடையே புற்று நோயும் பிறவி ஊனங்களும் தொடர்கின்றன என்ற உண்மை மக்களின் பட்டறிவு மூலமாகவும், பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் வழியாகவும் பலமுறை மெய்பிக்கப்பட்டுவிட்டன. அதைக்கூட அப்துல் கலாம் மறுக்கிறார்.
சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் அணு மின்சார உலை விபத்து 1987-ல் நிகழ்ந்த போது உடனடியாக இறந்தவர்கள் 7000 பேர் தான். ஆனால் அதில் வெளிப்பட்ட மிகைக் கதிர்வீச்சு காற்றிலும் நிலத்திலும் தங்கி, தாவரங்களிலும், கால்நடைகளிலும் உயிரணுக்களில் படிந்து, மனிதர்களையும் தொற்றி 25 ஆண்டுகளுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சென்ற ஆண்டு வரை இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரம் பேர் என்பதும் இரஷ்ய அரசே ஒத்துகொண்டுள்ள உண்மையாகும்.
தாராப்பூர், கல்பாக்கம், கைகா அணு உலைகளில் ஏற்படும் கதிர்வீச்சால் அவற்றை சுற்றி வாழும் மக்களிடையே இரத்த புற்றுப்நோய், எலும்புப் புற்றுநோய், தைராய்டு வீக்கம் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதை சுதந்திரமான அமைப்புகளின் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இவற்றில் எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் ”அறிவியலாளர்” அப்துல்கலாம் இவை காமிக் புத்தக கட்டுகதைகள் என எள்ளி நகையாடுவது அவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈர மற்றவர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சில மணிநேரங்கள் கூடங்குளம் அணுமின் உலையை சுற்றிப் பார்த்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்று அவர் சான்று வழங்கினார். அங்கு போவதற்கு முன்பே மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலிலும் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கூறி விட்டார்.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரஷ்யாவின் வி.வி.இ.ஆர்.1000 (V.V.E.R 1000) அணு உலையில் 31 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதையும் அணு உலை இயங்கத்தொடங்கி இரண்டாண்டுகளுக்கு பிறகு விபத்துகள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் இரஷ்ய அறிவியலாளர்களே இரஷ்ய அரசுக்கு கடந்த சூலை 2011ல் அளித்த ஆய்வறிக்கையில் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றி அப்துல் கலாம் வாய் திறக்கவே இல்லை.
அணு உலைக்கு மிகப்பெரும் அளவில் கடல் நீர் வேகமாக உறிஞ்சப்படும் போதும், அணு உலையிலிருந்து கொதி நீர் கடலுக்குள் விடப்படும் போதும் கடலியல் சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். மீன் வளம் பெருமளவு குறையும். இதனை ஏராளமான கடலியல் ஆய்வறிக்கைகளும் மீனவ மக்களின் பட்டறிவும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துள்ளன. தாராபூரிலும், கல்பாக்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட கடலியல் ஆய்வுகளும் இந்த உண்மையை உறுதி செய்துள்ளன.
இவைபற்றியெல்லாம் கலாமுக்கு கொஞ்சமும் கவலையில்லை. மீன்வளம் குறையாது மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நெஞ்சாரப் பொய்கூறினார்.
அணு உலையில் வெளிப்படும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு அப்துல் கலாமும் அவர் அருகில் இருந்த கூடங்குளம் அணு உலை உயர் அதிகாரி எஸ்.கே. ஜெயினும் ஆளுக்கொரு கருத்தை சொன்னார்கள். அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஆழக் குழிதோண்டி கதிரியக்கக் கழிவுகளை கனமான கலன்களில் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள் என கலாம் கூறினார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எஸ்.கே.ஜெயின் ஆபத்தான இக்கழிவுகளை மறு சுழற்சி செய்து கண்ணாடி இழைகளாக மாற்றி உருண்டை யாக உருட்டி வைத்து மேலேயே பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.
தில்லியில் இச்சிக்கல் குறித்து பேசிய இந்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுக்கழிவுகளை தாராப்பூருக்கு எடுத்துச்சென்று விடுவோம் என்று கூறினார். இந்த அணுக் கழிவுகளை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம் என இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ குமார் பானர்ஜி கூறி வருகிறார்.
இப்படி இவர்கள் ஆளுக்கொன்றாக கூறுவதிலிருந்தே அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்க இந்திய அரசிடம் எந்த திட்டவட்டமான ஏற்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.
உலகம் முழுவதும் அரசுகள் சந்திக்கிற முக்கியமான பிரச்சினையாகவும் இது உள்ளது. அணு உலைகளை இனி இயக்க வேண்டாம், மூடிவிடலாம் என முடிவு செய்துவிட்ட நாடுகள் கூட இதுவரை வெளியான அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று உறுதியான முடிவெடுக்க முடியாமல் முடியை பிய்த்து கொண்டிருக்கிறார்கள் ஏனெனில் அணுக்கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் அணு உலையின் கதிரியக்கத்தை விட வீரியமானது; ஆபத்தானது. இவற்றின் கதிரியக்க வீரியம் பாதியாகக் குறைவதற்கே குறைந்தது 22, 500 ஆண்டுகள் ஆகும்.
அதற்கு பிறகும் கதிரியக்கம் தொடரும். குறைந்தது 25000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைத்து வைப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடித்தாக வேண்டும். இன்று வரை விடை கிடைக்காத பெரும் சிக்கல் இது.
நெல்லையப்பர் கோயிலும் தஞ்சை பெரிய கோயில் கோபுரமும் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதிலிருந்தே நெல்லை மாவட்டமும் கூடங்குளமும் நிலநடுக்கம் பாதிக்காத பகுதி என்பது தெரியவில்லையா என அப்துல் கலாம் கேட்டார். இது எளிய மக்களை குழப்புவதற்கான மலிவான உத்தி ஆகும்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் கோபுரமும் கூடங்குளம் அணு உலையும் ஒன்றல்ல. கோயில் கோபுரத்தில் சிறு விரிசலோ பிளவோ ஏற்பட்டால் கூட அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடாது; சரிசெய்து கொள்ள முடியும். திருச்சி, திருவரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடவில்லை. அக்கோபுரம் ஒருவாறு சீரமைக்கப்பட்டு இன்றும் நிற்கிறது. காளஹஸ்தி கோயில் கோபுரம் கடந்த ஆண்டு தரைமட்டமாக சரிந்தது. அதனால் சுற்றுச் சூழலுக்கோ மனித உயிர்களுக்கோ பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
அணு உலை அப்படியானது அல்ல. அதன் ஆயுட்காலமே 35 ஆண்டுகள்தான் என அதை வடிவமைத்த வல்லுநர்களே வரையறுத்துவிட்டார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம், அதைத்தொடர்ந்த ஆழிபேரலை ஆகியவைதான் வரவேண்டும் என்பதல்ல, நில அதிர்வு ஏற்பட்டு அணு உலைச் சுவரில் சிறிய விரிசல் ஏற்பட்டாலே கூட அதன்வழியாக பெருமளவு கதிரியக்கம் வெளிப்பட்டு பேரழிவை ஏற்படுத்தி விடும்.
கூடங்குளம் பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் நில அதிர்வுகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே அடிக்கடி ஏற்பட்டு வருவதை அரசின் பதிவேடுகள் கூறுகின்றன. 2006 மார்ச் 10ஆம் நாள் கூடங்குளம் அருகில் உள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய சிற்றூர்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை அரசின் குறிப்புகளே பதிவு செய்துள்ளன. 2011 ஆகஸ்டில் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் நில அதிர்வு நிகழ்ந்துள்ளது.
தென் தமிழ்நாட்டின் கடலுக்குள் எரிமலை இருப்பதை நிலவியல் ஆய்வுகள் பலவும் எடுத்துகூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தை அச்சன் கோயில், தாமிரபரணி நிலக் கிழிவு மண்டலம் (AchanKovil , Thamirabharani Shear zone- ATS) என நில இயற்பியலாளர்கள் வகைப் படுத்துகின்றனர். அப்பகுதியில் உருகி உருமாறிய பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் உள்ளிட்ட பல்வேறு காலப்பகுதி பாறைகள் சந்திக்கின்றன என்றும் நிலத் தகடுகள், இணையும் பகுதியாக (Contact Zone) உள்ளதையும் ஆய்வுகள் எடுத்து கூறுகின்றன. (எ.கா Restivity studies to Deliniate st ructural features near Abhishekapatti, Thiru nelveli - Y.Srinivas et al-Journal of Indian Geophysics Union, Vol 12, no: 4, page 157 -163-October, 2008). இந்த நிலத் தகடுகள் ஒன்றின் மீது ஒன்று நகரும்போது இலேசான நில அதிர்வில் இருந்து பெரிய நிலநடுக்கம் வரையிலும் ஏற்படுகின்றன. இதுதான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படக் காரணமாகும்.
இந்த அடிப்படை அறிவியல் உண்மையை மறைப்பதற்காகவே அப்துல் கலாம் கோயில் கோபுரத்தை எடுத்து காட்டாகக் கூறி குழப்ப முயல்கிறார்.
இதற்கு மேலும் உறுதியாக போராடிக்கொண்டிருக்கிற தமிழக மக்களை பிளவுப் படுத்துவதற்காக ஆசை வார்த்தை காட்டும் கேவலமான உத்தியிலும் அவர் இறங்கி விட்டார். சில நூறு கோடி ரூபாய் செலவில் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாற்கரச் சாலை அமைப்பது, மருத்துவ மனை நிறுவுவது, புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவது, பள்ளிக்கூடங்கள் கட்டித் தருவது, பூங்காக்கள் அமைப்பது என ஆசைவார்த்தைகள் கூறி நாற்காலி அரசியல்வாதிகளின் நிலைக்கு இழிந்து பேசினார். இதன் மூலம் அப்பகுதி மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதே அவரது திட்டம்.
தான் பிறந்த இராமேசுவரம் பகுதியிலேயே நாள்தோறும் தமிழக மீனவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையும், அவர் பிறந்த மண்ணிலிருந்து கூப்பிடு தொலைவில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒரே ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட்தையும் கண்டு மனச்சான்று உருத்தாத மனிதர்தான் இந்த அப்துல் கலாம்.
இவரைப்போலவே அரசமைப்புச் சட்ட பதவிகளில் இருந்த நீதிபதிகள் வீ.ஆர்.கிருஷ்ணய்யரும், பகவதியும் மக்கள் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுக்கும்போது பதவிக் காலம் முடிந்தபிறகும் மனிதப் படுகொலைகளை கூட கண்டிக்காத இந்தியத் தேசியக் கல் நெஞ்சர் தான் கலாம்.
மராட்டிய மாநிலத்தின் ஜெய்தாபூரிலும், மேற்கு வங்கத்தின் அரிபூரிலும் அணு உலைக்கு ஆதரவாக படையெடுக்காத அப்துல் கலாம் தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை நிலை நிறுத்துவதற்காக மட்டும் கோடாரிக் காம்பாக ஓடோடி வந்து ஒரு தலைச்சார்பாக பேசி சீர் குலைக்க முயல்கிறார்.
அணு மின்சாரம் சிக்கனமானது, தூய்மையானது, தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு தேவையானது என்ற ஆட்சியாளர்களின் வாதங்களையே மீண்டும் அவர் பேசினார். இவற்றிற்கெல்லாம் அறிவியல் வழிப் பட்ட விடைகளைச் சொல்லி யாகிவிட்டது. (காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15, 2011 மற்றும் கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது-த.தே.பொ.க வெளியீடு).
அப்துல் கலாமைப் போன்ற அறிவு அதிகார வர்க்கத்தினரையும், அறிவியல் அடியாட்களையும் எதிர்கொண்டு அணுஉலைக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் முன்னேற வேண்டியது அவசியமாகும்.
-கி. வெங்கட்ராமன்

0 கருத்துகள்:

முட்டுச் சந்தில் முதலாளியம் - தோழர் கி.வெங்கட்ராமன்

“முதலாளியம் ஒழிக” என்ற முழக்கம் அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் பிடித்து ஆட்டுகிறது. முதலாளியவாதிகள் சற்றும் எதிர்பார்த்திராத எதிர்ப்பு அலை இது. கடந்த செப்டம்பர் 17 அன்று வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பங்குச்சந்தை வளாகத்தில் தொடங்கிய முற்றுகைப் போராட்டம் இன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள முதலாளிய நிறுவனங்களில், பெரு வங்கி அலுவலகங்களில் முற்றுகையாக வளர்ந்து வருகிறது.
"நாங்கள் 99 விழுக்காட்டினர்" என்ற முழக்கத்தோடு பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் நடக்காத நகரங்களே இல்லை என வட அமெரிக்கா அதிர்ந்து கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் உணர்ச்சிகரமாக ஒபாமாவுக்குப் பின்னால் அணி திரண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், உழைப்பாளர்கள், கறுப்பின மக்கள் ஆகியோர் இன்று அவருக்கு எதிராக மட்டுமின்றி நடப்பில் உள்ள அமெரிக்க அரசியலுக்கு எதிராகவே அணிதிரண்டுள்ளனர். வேலையின்மை, வீடின்மை ஆகியவற்றிற்கு எதிராக எழுந்த இப்போராட்டம் நிதிமூலதனத்தால் வழிநடத்தப்படும் ஒட்டுண்ணி முதலாளிய அரசியலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
எதிரிகளை “1 விழுக்காட்டினர்” (1%) எனக் குறிக்கும் போராட்டக்காரர்கள் இந்த ஒரு விழுக்காட்டினருக்குள் நிதிமூலதன அதிபர்கள், உலகமய முதலாளிகள் ஆகியோரை மட்டுமின்றி அனைத்துக் கட்சியையும் சேர்ந்த உயர்மட்ட அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், உச்சநிலை நீதிபதிகள், ஊடக அதிபர்கள் ஆகியோர் இணைந்த ஆதிக்க வலைப்பின்னலையே குறிக்கின்றனர்.
'புதிய பொது உணர்வு" (New Common Sense) என்ற பெயரில் வால் ஸ்ட்ரீட் வளாகத்தில் 09.11.2011 அன்று போராட்ட அவையினர் வெளியிட்ட பேரறிக்கை முதலாளியத்திற்கு எதிரான பிரகடனமாகவே உள்ளது. 99 விழுக்காட்டு மக்களுக்கு அனைத்து வகை பொது வெளியும் மறுக்கப்பட்டுள்ளதை நிரல்படுத்தி அம்பலமாக்கியது இப் பேரறிக்கை. நிதிமூலதனப் பேயாட்சியின் பிடிக்குள் ஒட்டுமொத்த வட அமெரிக்க அரசியலும் சிக்கியுள்ளதை அது தெளிவுப்படுத்தியது. அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகம் அனைத்தும் இணைந்த ஒட்டுண்ணி வலைப்பின்னலில் ஒட்டுமொத்த அமெரிக்கச் சமூகமும் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களின் விழைவுகள், கருத்துகள் ஆகியவை வெளிவரவே முடியாமல் அடைக்கப்பட்டிருப்பதும் இவ்வறிக்கையில் துல்லியமாக வலுவான ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு, நீதித்துறை, ஊடகம் அனைத்திலும் உண்மையான மக்கள் பங்கேற்பைக் கோரும் மாற்று சனநாயகத்தை இப்போராட்டம் வலியுறுத்துகிறது. குடியரசுக் கட்சி அல்லது சனநாயக கட்சி என்ற அமெரிக்காவின் தேங்கிய அரசியலில் ஒரு முறிவை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக இது வளர்ந்துள்ளது.
“தலைவரற்ற சனநாயகம்” என்று கூறிக்கொண்டாலும் திசைத் தெரியாத அலங்கோலத்தை அது முன்வைக்கவில்லை. முற்றுகைப் போராட்டக் களம் ஒவ்வொன்றும் பொறுப்பான விவாத அரங்காக மாறி வருகிறது. இவ்விவாதங்களின் ஊடாக மலரும் ஒருமித்த கருத்துகளே கொள்கை அறிவிப்புகளாக வெளிவருகின்றன.
கூடாரம் அமைத்து ஒன்றாக சமைத்து ஒன்றாக உணவருந்தி ஒன்றாக விவாதித்து ஒன்றாக படித்து ஒன்றாக உறங்கி இந்த இளைஞர்கள் தங்களுக்குள் அற்புதமான தோழமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்பான ஒழுங் கமைவு போராட்டக்களங்களில் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை என்னென்ன நிகழ்ச்சி நிரல் என்பது முடிவு செய்யப்பட்டு எழுதிப்போடப்படுகிறது. இணையதளங்களிலும் வெளியாகிறது. அந்த ஒழுங்கின்படியே நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சுற்றுமுறையில் வளாகத்தை தூய்மைச் செய்தல், சமைத்தல், மாற்று ஊடகங்களை உருவாக்குதல்-உறவாடுதல், விரிவடைந்து வரும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடாரங்களை ஒழுங்கமைத்தல் என எல்லாம் கச்சிதமான வேலைப் பிரிவினையின் கீழ் நடக்கின்றன. போராட்டக் களம் ஒவ்வொன்றிலும் அறிவார்ந்த அரசியல், பொருளியல் நூல்களும் குறுந்தகடுகளும் ஏராளமாக குவிந்துள்ளன. காரல் மார்க்சும், சேகுவேராவும், காந்தியும் விரும்பிப்படிக்கப்படுகின்ற அறிஞர்கள் ஆவர்.
வட அமெரிக்க காவல்துறை இவர்களை வெளியேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 1000 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் பலவித அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
ஆயினும் அமெரிக்க அரசு பலவகையிலும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. முதலில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்) வைத்துக் கொண்டார்கள். ஜெனரேட்டர்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இது ஒரு பெரிய சிக்கல். ஏனெனில் இது குளிர் காலம். கூடாரத்திற்குள் வெப்பமூட்டுவதற்கும், சமைப்பதற்கும் அவர்களுக்கு மின்சாரம் அவசியம் தேவை. ஆனாலும் போராடும் இளைஞர்கள் அயர்ந்து விடவில்லை. ஆளுக்கொருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று சைக்கிள் டைனமோவை சுற்றி சுழற்சி முறையில் இளைஞர்கள் மின்சாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அவசியத் தேவைக்கு மட்டும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஒலிபெருக்கி இல்லை. ஆயினும் பல்லாயிரக்கணக்கில் கூடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் இருப்பவர் முடிந்தவரை உரத்து பேசுகிறார். அந்த ஒலி எட்டும் எல்லையில் இருக்கும் இன்னொருவர் அதையே மீண்டும் உரத்துக் கூறுகிறார். கொஞ்ச தொலைவில் இருக்கும் இன்னொருவர் மறுஒலிபரப்பு செய்கிறார். இவ்வாறு பழைய கால கூட்டங்களைப் போல் போராட்ட அவையை அவர்கள் நடத்துகிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில் இது நாள் வரை வெறும் நுகர்வு வாழ்க்கையில் அமிழ்ந்திருந்த அமெரிக்காவின் இளைய சமூகம் தன்னைத் தானே உள்நோக்கி பார்க்கின்றது. தன்னாய்வு செய்துகொள்கிறது. அரசியல்மயப்படுதல் ஒரு மக்கள் இயக்கமாகவே நடந்து வருகிறது.
ஆயினும் ஒரு மாற்று மெய்யியலின் கீழ் இந்த அணித் திரட்சி நடந்துவிட்டதாக சொல்ல முடியாது. புதிய பொது உணர்வு பேரறிக்கை அமெரிக்க அரசமைப்பு வடிவத்திற்குள் ளேயே மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க முயல்கிறது. முதலா ளியம் ஒழிக என முழங் கினாலும், நாட்டின் அனைத்து பொருளியல், அரசியல் அமைப்பு முறைகளும் மக்களின் கண்காணிப்புக்கும், கட்டுப் பாட்டிற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் இதற்கான மாற்று முறைமைகளை வரை யறுப்போடு இன்னும் முன் வைத்துவிடவில்லை.
“வால் ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம்” என்ற போராட்ட முழக்கம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டுமின்றி மேற் குலகம் முழுவதையும் பற்றி யுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங் கள் எங்கும் இளம் தலை முறையினர் இதே போன்ற வடிவங்களில் போராடி வரு கின்றனர். இப்போராட்ட களங் களுக்கு இடையே வலைத் தளங்கள் வழியாக உலகுதழுவிய விவாதங்களும் நடந்துவரு கின்றன. அந்தந்த நாட்டிற்கும் அவரவர்கள் விரும்புகிற மாற்று திட்டங்களை முன்வைத்து வருகிறார்கள்.ஆயினும் “முதலாளியம் ஒழிக”, “நாங்கள் 99 விழுக்காட்டினர்” என்பவை மட்டும் அனைத்து நாடுகளிலும் மைய முழக்கங்களாக எழுப்பப் படுகின்றன.
உலகமெங்கும் இது ஏன் இப்பொழுது நிகழ்கிறது?
காரல் மார்க்சு ஆய்ந்து சொன்னது போல முதலாளியம் அதன் பிறப்பு காலத்திலிருந்தே வெவ்வேறு வகை நெருக் கடியைச் சந்தித்துதான் வரு கிறது. ஆயினும் தனக்கு வரும் நெருக்கடியை பலவழிகளில் மக்கள் மீது சுமத்தி தப்பித்து கொண்டே வருகிறது. அதற் கான வாய்ப்புகள், வெளிகள் முதலாளியத்திற்கு இருந்தன. ஆயினும் அவ்வாறான வாய்ப் புகள் இப்போது பெருமளவு சுருங்கிவிட்டன.
உலக ஏகாதிபத்தியங்கள் காலனிய நாடுகளின் வளங் களை ஒட்டச் சுரண்டுவதன் மூலமாகவும் அவற்றைத் தங்களது சந்தையாக கைப் பற்றிக் கொண்டதன் வழியா கவும் அளவு கடந்த உபரியைப் பெற்றன. அந்த உபரியில் மிகச்சிறிதளவை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம் படுத்தின. இதன் மூலமாக முதலாளியத்திற்கு எதிரான சிந்தனை பெரும்பாலான மக்களை கவ்வாமல் பார்த்துக் கொண்டன.
உலகப் போர்களின் முடி வுக்கு பிறகு உலகெங்கிலும் தேச விடுதலைப் போராட்டங்கள் எழுந்து காலனி ஆட்சிகள் முடிவுக்கு வந்த போது தேசச் சந்தைகளை மீட்டு கொள்ளும் முயற்சிகள் வலுப் பெற்றன. ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு இது ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆயினும் புதிதாக அரசியல் விடுதலை அடைந்த நாடுகளின் முதலாளிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களது காலனியச் சுரண்டலைப் புதிய வகையில் முன்னெடுத்தன. இன்னொருபுறம் இரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற பொதுவு டைமைச் சிந்தனையின்பால் மக்கள் சாய்ந்து விடாமல் இருக்க தங்கள் நாடுகளில் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் போன்ற நலத் திட்டங்களை நடத்தின. கால னிய சுரண்டலின் உபரி அந்த வாய்ப்பை வழங்கியது.
ஒரே காலத்தில் 1991ல் நிகழ்ந்த பொதுவுடைமை நாடுகளின் வீழ்ச்சியும், உலக மயத்தின் எழுச்சியும் ஏகாதிபத் தியங்களுக்கு புதிய நம்பிக்கை யைக் கொடுத்தன. “வரலாறு முடிந்துவிட்டது”, “தத்துவங்கள் செத்துவிட்டன” என முதலாளிய வாதிகள் கூரைமீதேறி கொக்கரித்தனர்.
பெரும்பாலான நாடுகளின் அரசுகள் உலக மயத்தின் நிர்வாக மன்றங்களாக உருக்கொண்டன. கட்சிகளும், கம்பெனிகளும் ஒன்று கலந்தன. பணநாயகத்தின் அடிமையாக சனநாயகம் முற்றிலும் மாறிப் போனது. நாடுகளுக்கு இடை யிலான அரசியல் உறவுகளை சந்தை உறவே வழிநடத்தியது. அரசியல் உரையாடல் நடை பெற வேண்டிய ஊடகங்கள் பண்ட விளம்பரங்களின் கள மாக மாறிப் போயின.தேசிய அரசியலில் உயிர் துடிப்போடு பங்குப்பெறும் குடிமக்கள் உலகமயத்தின் நுகர்வோர் குடிமக்களாக, அரசியல் பார் வையாளர்களாக மாற்றப் பட்டனர்.’ஒரு விழுக்காட் டினரின்’ செயற்களமாக அர சியலும், ஊடகமும் மாறியது.
உலகமயப் பொருளியல் ஆதிக்கமானது, வெள்ளை இன மேலாதிக்கத்தோடு இணைந்தே நடைபெற்றது. அமெரிக்கத் தன்மை, ஐரோப்பியத் தன்மை என்ற பெயரால் இந்த வெள் ளை இன மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது.
ஆயினும் இதே வலுவில் இந்த ஆதிக்கத்தைத் தொடர முடியவில்லை.முதலாளிய வளர்ச்சியின் இயல்பான உள் முரண்பாடும், கேள்வி முறை யற்ற உலகமயச் சுரண்டலும், வெள்ளை இன ஆதிக்கமும் எதிர்வினைகளை உருவாக்கின.
முதலாளிய வளர்ச்சியின் உள்நெருக்கடி அதன் உச் சாணியில் உள்ள நிதி மூலதன நிறுவனங்களின் வெடிப்பின் மூலம் வெளிப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பெரும் பெரும் வங்கிகளும் காப்பீட்டு நிறு வனங்களும் சடசடவென சரிந்தன. வட அமெரிக்கா தொடங்கி ஐரோப்பாவெங்கும் இந்தச் சரிவுகள் தொடர்ந்தன. உலகமய முதலாளிய கூட்டணி யில் இணைந்திருந்த எல்லா நாடுகளும் இதன் அதிர்வை சந்தித்தன.
உலகச் சந்தையையே கட்டி ஆண்ட பன்னாட்டு முதலாளி கள் தங்கள் சொந்த நாட்டுச் சந்தையை இழப்பது என்ற நிகழ்வு தொடங்கியது.பல இலட்சம் கோடி டாலர் அரசுப் பணத்தை வாரி இறைத்து இந்நிதி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் தூக்கி நிறுத்த முயன்றாலும் அவை பழைய நிலைக்கு திரும்ப முடியவேயில்லை. அந்நாடு களில் தொழில் மந்தம் (ஸிமீநீமீssவீஷீஸீ) நீடித்து ஆழப்பட் டுள்ளது. வேலையிலிருந்து தொழிலாளிகள் வெளியில் வீசப்படுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருமளவு சுருங்கி விட்டது. அரசுக்கோ வரி வரு மானம் உரிய அளவு உயர வில்லை.
இதன் விளைவாக எல்லா நாட்டு அரசுகளும் கடன் வலையில் சிக்கின. எடுத்துக் காட்டாக 2007ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்கள் நாட் டின் ஒட்டுமொத்த உற்பத்தியை ஒப்பிட 42.6% கடன் வைத் திருந்தது. மூன்றாண்டுகளில் இக்கடனளவு 72.4%நிஞிறி என உயர்ந்துள்ளது. இத்தாலியின் பொருளியலானது ஓட்டாண்டி நிலைக்கு வந்துவிட்டது. அந் நாட்டின் கடன் 120%நிஞிறி அதாவது அந்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட அதன் கடன் 20 விழுக்காடு அதிகம். கிரீஸ் நாட்டின் கடன் 153% நிஞிறி அந்நாடு முழுகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். பிரான்சும், இங் கிலாந்தும் விரைவில் கடன் சேற்றில் சிக்கப்போகின்றன.
இதிலிருந்து விடுபட சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லா காலத்திற்கான வாழ்வூதியம், கல்வி உதவித் தொகை ஆகியவை பெருமளவு வெட்டப்படுகின்றன. அந்நாடு களில் எளிதாக கிடைத்து வந்த கல்விக் கடனும் பெருமளவு நிறுத்தப்பட்டுவிட்டன.
கண்மண் தெரியாத கல்விக் கட்டண உயர்வை அந்நாட்டு மாணவர்கள் முதன்முறையாக சந்திக்கிறார்கள். வேலையும் இல்லை, வேலையில்லா காலத்து வாழ்வூதியமும் இல் லை என்ற புதிய நிலைமையை அந்நாடுகளின் இளம் உழைப் பாளர்கள் சந்திக்கிறார்கள். ஓய்வூதியமும் இல்லை. தங்கள் சேமிப்பை வைத்திருந்த வங்கி களும் ஓட்டாண்டிகளாகி விட்டன என்பதை அந்நாட்டு முதியவர்கள் சந்திக்கிறார்கள். தற்காலிக தொழிலாளர்களாக வும், சொந்த வீடற்றவர்களாக வும் உள்ளவர்களில் ஏற்கென வே பெரும்பாலும் கறுப்பினத் தவர்களே இருந்தனர். அரசின் சிக்கன் சீரமைப்பின் தாக்கம் மற்றவர்களை விட இவர் களையே கடுமையாக பாதிக் கிறது.
தொழில் மந்தமும், அரசின் சிக்கன சீரமைப்பு தாக்குதலும், இன ஒதுக்கலும் இணைந்து அந்நாடுகளின் பெரும்பான்மை மக்களைப் போராட்டக் களத் திற்கு இழுத்து வந்துள்ளது.
அமெரிக்க டாலர் ஏற்கெனவே மதிப்பிழந்து வருகிறது.அந்த இடத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொது நாணயமான யூரோ கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய மண்டலத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பொரு ளியல் நெருக்கடி யூரோ நாண யம் ஐரோப்பாவிலேயே பொது நாணயமாக தொடர்ந்து நீடிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பலவீனமான 10 நாடு களை கழற்றி விட்டால் தான் மீதியுள்ள 17 நாடுகளுக்காவது பொது நாணயமாக யூரோவை வைத்து கொள்ள முடியும் என பிரித்தானிய பிரதமர் கேமரூன் வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஐரோப்பிய பொதுச் சந்தை, ஐரோப்பிய பொது நாணயம் என்பவையும் ஆட் டம் காண தொடங்கி விட்டன. உலகமயமும் ஐரோப்பிய மய மும் மட்டுமின்றி ஒட்டுமொத்த முதலாளியமே கேள்விக்குள் ளாகி முட்டுச்சந்தில் நிற்கிறது.
இதிலிருந்து தப்பிப்பதற்கு மரணச்சந்தையே உடனடி வழி என அமெரிக்க ஆட்சியாளர் கள் கருதுகிறார்கள். ஆயுதங் களை விற்று போர்களைத் தீவிரப்படுத்தி போர்ச் சந்தையை விரிவாக்குவதன் மூலம் நெருக் கடியிலிருந்து மீளலாம் என அமெரிக்க வல்லரசு திட்ட மிடுகிறது. பேரழிவு ஆயுதம் வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தது போலவே அணு ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் சொல்லி ஈரான் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா தீவிரமாக திட்டமிடுகிறது. இன்னொருபுறம் நைஜீரியாவை பயன்படுத்தி சோமாலியா மீதான தாக்குதலைத் தீவிரப் படுத்தி ஒட்டுமொத்த ஆப்பிரிக் காவை போருக் குள் சிக்க வைக்க முயல்கிறது.
அமெரிக்க மரண வியாபாரத்தை மூன்றாம் உலக நாடுகள் புரிந்திருப்பதைப் போலவே அமெரிக்க இளைஞர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் 131 நாடுகளில் அமெரிக்க வல்லரசு வைத்துள்ள 1000 படைத் தளங்களைக் கலைத்து விடுமாறும் அந்நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்து மாறும் வால் ஸ்ட்ரீட் இளைஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஏகாதிபத்தியம் என்றால் போர். என்றார் லெனின். இன்று அமெரிக்கத் தெருக்களில் முதலாளியத்திற்கு எதிரான முழக்கமும் போர் தயாரிப்புக்கு எதிரான முழக்கமும் ஒன்று கலந்துள்ளன.
இந்த இளைஞர்களின் பயணத் திசைவழி இன்னும் தெளிவுபட வேண்டியுள்ளது என்றாலும் முதலாளியத்தின் வாழ்நாள் குறுக்கப்பட்டு விட்டது என்பது மட்டும் உறுதி.
சரிந்து வரும் இந்த உலகமய முதலாளியத்தோடு இளைய பங்காளியாக இணைந்துள்ள இந்தியாவிலும் இந்தியாவின் காலனியாக உள்ள தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் என்ன என்பதை வேறொரு வாய்ப்பில் பார்ப்போம்.

0 கருத்துகள்:

கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் - கி. வெங்கட்ராமன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீச்சோடு நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் இடிந்தகரை என்ற சின்னஞ் சிறு கிராமம், உலகம் கவனிக்கும் முக்கியமான மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கூடங் குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் இன்று தமிழகம் தழுவியதாக மாறிவருகிறது. இது இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்காக ஒரு பக்கம் வாக்குறுதிகளையும், குழப்பமான வாதங்களையும் முன்வைத்து, மறுபுறம் தங்கள் கையாட்களின் மூலமாகவும் உளவு நிறுவனங்களின் மூலமாகவும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முயலுகிறது இந்திய அரசு. கூடங்குளம் அணுஉலை மிகவும் உயர்தரத் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ளது, பாது காப்பானது என்று இந்தியப் பிரதமர் முதல் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகள் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் இந்த அணு உலை தமிழ கத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்த்து தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்று கூறுகிறார்கள். கூடங்குளம் பகுதி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் என்ற வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள். இருக்கிற மின்சாரங்களிலேயே அணு மின்சா ரம்தான் சிக்கனமானது, தூய்மையானது, சுற்றுச் சூழலைக் கெடுக்காதது என்றும் கூறுகிறார்கள். இவற்றை எதிர்கொண்டு இந்திய ஏகாதிபத் தியத்தின் சதித்திட்டத்தை முறியடிப்பது தமிழகத்திலுள்ள மக்கள் இயக்கங்களின் முன் னுள்ள பணி ஆகும். அவர்களுடைய வாதங் களையும் வாக்குறுதிகளின் பொய்மைகளையும் எதிர்கொண்டு அம்பலப்படுத்த வேண்டியது முதன்மையான தேவையாக இருக்கிறது. இக்கட் டுரை அந்நோக்கத்திலேயே வருகிறது.

1988 நவம்பரில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்ட உடனேயே தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. இந்திய அரசும் சோவியத் ஒன்றிய அரசும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தியது.

அன்று இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு கிளையாக இயங்கிய போது, எம்.சி.பி.ஐ. தமிழ்நாடு மாநில அமைப்புக்குழு 1988 நவம்பர் 26, 27 ஆகிய இருநாட்கள் சிதம்பரத்தில் கூடிய போது இயற்றியத் தீர்மானம் இதனை வலியுறுத்தியது.

பொதுவாக அணு உலைகள் அது எந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1.சாதா ரண உற்பத்திக் காலங்களில் இயல்பாக உற்பத்தி நடக்கிறபோது, 2. உற்பத்தி நடந்து கொண் டிருக்கும்போது ஏற்படுகிற நிகழ்வுகளின் போது (மிஸீநீவீபீமீஸீts), 3. எதிர்பாராமல் நடக்கிற விபத்து களின் போது (ணீநீநீவீபீமீஸீts), 4. உற்பத்தி முடிந்து அணு உலையின் ஆயுள் காலம் முடிந்து அதை மூடி வைக்கிற போது, 5. அணு உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளைப் பாது காக்கிற போது என்று எல்லா நிலைகளிலும் கதிர்வீச்சு ஆபத்து வெவ்வேறு அளவுகளில் இருக்கவே செய்கின்றது.

அணு உலை இயங்கும்போது அதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுவதோடு கதிர் இயக்கத் தனிமங்களும் வெளிப் பட்டுக் கொண்டே இருக் கின்றன. ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவற்றின் கதிரி யக்க ஐசோடோப்புகள் வெளிப் படுகின்றன. அது மட்டுமின்றி அயோடின் 131, சீசியம் 137 ஆகிய கதிரியக்க ஐசோ டோப்புகளும் வெளிப்படு கின்றன. இவை ஏராளமான கதிர்வீச்சைப் பரப்புகின்றன.

இயல்பாக உடல் தாங்கக் கூடிய கதிர்வீச்சு அளவை விட ஒரு இலட்சம் கோடி மடங்கு கதிர்வீச்சு இவற்றின் மூலம் வெளிப்படுகிறது, இக்கதிர்வீச்சு உடலைத் தாக்கினால் எலும்புப் புற்று நோய், இரத்தப் புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற புற்று நோய்கள் வரும்.  கருச்சிதைவு ஏற்படும். தலை முறை தலைமுறையாக உடல் ஊனத்தோடு குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட காற்றைச் சுவாசிக்கும் எல்லா உயிரிகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அணு உலை அமைந்திருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குறைந்தது 170கிமீ சுற்றளவில்  உள்ள புல்லி லிருந்து நெல்லிலிருந்து அனைத்து வகை தாவரங் களிலும் இந்த அணுக்கதிர்வீச்சு படிந்துவிடும். புல்லைத் தின்கிற மாடும் தாவரங்களை மேய்கின்ற ஆடும் அவற்றைப் பயன்ப டுத்துகிற மனிதர்களும் தொ டர்ச்சியாகப் பாதிப்புக்கு உள் ளாவார்கள். அடுத்தடுத்த தலை முறைக்கும் இந்தக் கதிரி யக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

நிகழ்வுகள் நடைபெறுவ தற்கான வாய்ப்பு இந்த இரஷ்ய அணு உலையில் அதிகமாகவே இருக்கிறது. கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலை விவிஇஆர்1000 (க்ஷி.க்ஷி.ணி.ஸி 1000) என்ற ஒரு வகை அணு உலை யாகும். இதன் வாழ்நாள் 35 ஆண்டுகள். 35ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணுஉலையை இயக்கக்கூடாது என்று அதன் தொழில்நுட்பமே கூறுகிறது. அத்தோடு இரண்டாண்டு களுக்குப் பிறகு இந்த அணு உலையில் சிக்கல்கள் (றிக்ஷீஷீதீறீமீனீs) நிகழ்வுகள் (மிஸீநீவீபீமீஸீts) தொ டங்கும் என்று அதை வடிவ மைத்த அறிவியலாளர்களே குறித்திருக்கிறார்கள்.

இப்போது 2011 சூலையில் இரஷ்ய பிரதமர் மெத்வதே விடம் இரஷ்ய சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் அணு உலை களை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் 31 குறைபாடுகள் வி.வி.இ.ஆர். வகையில் இருப்ப தாகச் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது.  மிகை யான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதார ணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் இற்று ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அது போல் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுபோல் 31 குறைபாடுகள் விவிஇஆர் அணுஉலைபற்றிக் குறிக்கப்பட்டுள்ளன.

இரஷ்ய வடிவமைப்பு வி.வி. இ.ஆர். அணுஉலை மட்டு மின்றி எந்த வகை அணு உலையும் தனது நாடடில் வேண்டாம் என்று செர்மன் நாடு முடிவு செய்துவிட்டது. வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் இருக்கிற எல்லா அணு உலை களையும் படிப்படியாக மூடி விடுவது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது.

எந்த வகை அணு உலையும் தங்கள் நாட்டில் கூடாதென்று இத்தாலி முடிவு செய்து விட்டது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளும்  அணு உலை கூடாது என்று முடிவு செய்துவிட்டன. இவை யெல்லாம் அணு உலைகள் பாதுகாப்பானவை அல்ல என்பதற்கும் குறிப்பாக கூடங் குளத்தில் நிறுவப்படவுள்ள விவிஇஆர் அணு உலை பாது காப்பானது அல்ல என்பதற்கும் சான்றாகும்.

அணு உலைக்குள் செலுத் தப்பட்டு வெப்பத்தால் கொ திக்கும் கடல் நீர் மீண்டும் கடலுக்குள் விடப்பட இருக் கிறது.  சராசரியாக 1300 டிகிரி ஃபாரன் கீட்டுக்கு மேல் அதனு டைய வெப்பம் இருக்கும். அவ்வளவு கொதிக்கும் நீர் கடலில் விடப்படும்போது கூடங்குளத்தைச் சுற்றி மட்டு மல்ல திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட் டம் வரையிலும் உள்ள கடற் பரப்பில் மீன்வளம் கடுமை யாகப் பாதிக்கப்படும்.  கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்குள்ள கடல் உயிரிகள் மீன் வகைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடும். மீனவர்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியைச் சந்திக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப் பே இல்லாத பகுதி என்று இந்திய அணுசக்திக் கழகத் தினுடைய தலைவரிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் வரை துண்டு போட்டுத் தாண்டாத குறையாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். உண் மை நிலையோ அதற்கு மாறாக உள்ளது. இதே கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. 2006 மார்ச் 10 ஆம் நாள் கூடங் குளம் அருகிலுள்ள அஞ்சு கிராமம், அழகப்பபுரம், சாமித் தோப்பு ஆகியவற்றில் இலே சான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய் துள்ளன. இப்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்தி ருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத் துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாத இடம் என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்திய அணு உலைகளில் இதுவரை நிறுவப்பட்டுள்ள எந்த அணு உலையுமே முழு பாதுகாப்புடன் இயங்கியதாக வரலாறு இல்லை.

கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக் குறைவின் காரண மாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் மீண் டும் மீண்டும் கூறி வருகிறார். எல்லா ஏடுகளிலும் அவருடைய நேர்காணல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் அவர் எழுப்பி வருகி றார். அதற்கு அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ உருப்படியான பதில் எதுவும் கிடையாது

அணுமின்சாரம் சிக்கன மானது என்று ஆட்சியாளர்கள் சொல்வதும் உண்மையல்ல. இந்திய அரசே வெளியிட்டுள்ள கணக்குகளைத் தொகுத்துப் பார்த்தால் அணுமின்சாரத் துக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் 200 விழுக்காடு ஆகும். அதாவது அணு மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் 2000 ரூபாய் மானியமாக அரசு அளிக்கிறது. இதன் மூலமாக ஒரு  நிறுவனம் உற்பத்தியில் இறங்கிவிட்டாலே இரண்டு மடங்கு இலாபத்தைப் பெற முடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரிலையன்ஸ் அம் பானியும் டாட்டாவும் அணு உலை அமைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன் வந்திருக்கிறார்கள்.

அணு உலை மூடப்பட்ட பிறகு அல்லது அதனுடைய ஆயுள்காலம் முடிந்து நிறுத்தப் பட்டபிறகு அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப்  பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாது காப் பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் கிடையாது என வே பல நாட்டு மக்கள் தங்கள் பகுதியில் அணுக் கழிவுகளைப் புதைக்கக் கூடாது என்று கிளர்ச்சி செய்கிறார்கள்.

யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை அணு எரிபொ ருளாகப் பயன்படுத்தினால் அது பாதுகாப்பானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.  (எ.கா. புதிய தலைமுறை வார இதழ் 20.10.2011) தோரியம் என்ற தனிமமும் கதிரியக்கத் தனி மம்தான். அதிலிருந்தும் கதிர் வீச்சு அபாயம் இருக்கிறது.

தோரியத்தில் இயங்கும் அணு உலைகளில் கனநீருக்குப் பதிலாக நீர்ம சோடியம் குளிர் விக்கும் திரவமாகப் பயன் படுத்தப்படுகிறது.  அதிவேக ஈனுலையில் (திணீst ஙிணீக்ஷீ ஸிமீணீநீtஷீக்ஷீ) நீர்ம சோடியமே பயன்படுகிறது.  சோடியமானது காற்று பட்டா லே வெடிக்கக் கூடியது. கன நீரை விட இது பாதுகாப்பு குறைவானது.  இந்த அதிவேக ஈனுலைகளின் மேற்கூரை பல வீனமானது. சோடியம் வெடிப் பை தாங்க இயலாதது.

1995இல் சப்பானின் மொன்சு ஈனுலையில் சோடியம் கசிவு தொடர்ந்து ஏற்பட்டது.  ஆண்டுக்கணக்கில் அதனைச் சரிசெய்ய முயற்சி நடந்தது. அது தோல்வியில் முடிந்ததால் மூடப் பட்டது. பிரான்சு, பிரிட்டன் தோரியம் அணு உலையிலும் இவ்வாறான விபத்துகள் நடந்தன.

உண்மையில் தமிழ்நாட்டில் மின்வெட்டு வரக்கூடாது தொ ழில் நிறுவனங்களுக்கு தடை யற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால்  தமிழகத்து மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே உரியதாக்கிவிட்டால் போதும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் மின்சார வாரியம் விலை கொடுத்துத்தான் வாங்கு கிறது. விலை கொடுத்து தமிழ் நாட்டு மின்சார வாரியம் வாங்குவதற்குக் கூட இந்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின் சாரம் முழுமையாகக் கிடைப்ப தில்லை.

தமிழகத்திற்குக் காவிரி நீரை அடாவடியாக மறுக்கும் கர் நாடகத்திற்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போய்க் கொண்டி ருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. அதே போல் பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு நெய் வேலி மின்சாரம் நாள்தோறும் 6 கோடி யூனிட் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழகத்துக்கு எதிரான சட்ட விரோதமான நீர் முற்றுகை யிடும் மாநிலங்களுக்கு இந்திய அரசின் நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து நாள் தோ றும் 26 கோடி யூனிட் மின் சாரம் போய்க் கொண்டி ருக்கிறது.

தமிழகத்துக்கு உள்ள மின் சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் தான். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட்டால் தமிழ கத்தில் மின் பற்றாக்குறை இருக் காது. மின்சார உபரி மாநில மாகத்  தமிழ்நாடு திக ழும். இதைச் செய்வதற்கு இந்திய அரசு என்றைக்கும் முன்வரு வதில்லை. மன்மோகன் சிங் என்றைக்கும் இதுபற்றிச் சிந்தித் ததில்லை. கூடங்குளம் அணு உலையை தமிழர்கள் மீது திணிப்பதற்காக இங்குள்ள மின்வெட்டைக் காரணமாகக் காட்டிப் பசப்புகிறார்.

கடலலை மின்சாரம், காற் றாலை மின்சாரம், கழிவி லிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் ஆகியவற்றில் இந்திய அரசும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும். எளிமை யான உறுதியான இவ்வாறான மாற்று வழிகள்  இருக்க அணு உலை என்பது கூடவே கூடாது. அழிவை ஏற்படுத்தும் அணு மின்சாரத்தை ஒரு மின் உற்பத் திக்கான வழியாக ஏற்கவே கூடாது.

இந்திய அரசு தமிழக அமைச்சரவையின் தீர்மானத் தையோ தமிழக மக்களின் கருத்தையோ ஒரு பொருட் டாகவே கருதவில்லை. எப்ப டியும் கூடங்குளம் அணுஉலை யை இயக்குவது என்று பிடி வாதமாக இருக்கிறது. கண் துடைப்பாக தானடித்த மூப் பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து மக்களிடம் பேசுவது என்று அறிவித்திருக்கிறது. போராடும் மக்களிடமும் வல் லுநர் குழுவின் பட்டியல் பற்றிக் கேட்கப்படவில்லை. தமிழக அரசிடமிருந்தும் பட்டியல் பெறப்படவில்லை. இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக அக் குழுவை அமைத்து மக்களை எப்படியாவது ஏற்கச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இன்னொரு புறம் இந்திய அரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களிடம் பேச வைப்பது என்ற திட்டத்தில் இந்திய அரசு இறங்கியி ருக்கிறது. அப்துல்கலாம் அணு வெடிப்பை அணு குண்டை ஆதரிக்கிற அணுவியலாளர். அணு அறிவியலாளர். இருந்த போதிலும் நல்ல தமிழ் உணர் வாளர். இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை உள் ளவர் என்கிற வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்கள். ஆனால் கூடங் குளம் அணு உலைக்கு ஆதர வாகப் பரப்புரையில் அவர் இறங்கினால் அது அவருக்கு மதிப்புக் குறைவைத்தான் உண் டாக்கும்.

அவரை வைத்துத் தமிழ் உணர்வாளர்களை, அவர்மீது பற்று வைத்துள்ள இளைஞர் களை, ஒரு பகுதி இஸ்லாமியர் களை இப்போராட்டக் கருத்தி லிருந்தும் களத்திலிருந்தும் அப் புறப்படுத்திவிடலாம் என்று கேவலமான பிளவு உத்தியை இந்திய அரசு வகுத்துள்ளது. அதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. முனைவர் அப்துல் கலாமும்  அதற்குத் துணை போகக் கூடாது.

அது மட்டுமின்றி சாதியை வைத்தும் மதத்தைக் காட்டியும் பணத்தாசைக் காட்டியும் போ ராடும் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அனைத்து வகை யிலும் இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதி ரானது. வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்புவதற்கு இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வகை கையாட்கள் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அக்கட்சியின் தமிழ்நாடு அமைப்பு கூடங்குளம் அணு உலைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேசுகிறது. ஆனால் அதே கட்சியின் அனைத்திந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் முயற்சியில் ஜெய்த்தாப்பூர் அணு உலைக்கு எதிராக மராட்டியத்தில் மட்டு மின்றி இந்தியா முழுவதும் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மராட்டிய மாநிலம் ஜெய்த் தாப்பூரில் அமையவிருந்த அணு உலைக்கெதிரான போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முனைப்பாகப் பங்கேற்றது.  இப்போது அனைத்திந்திய அளவில் அப் போராட்டத்தை விரிவுபடுத் துவதற்கும் அக்கட்சி இறங் கியுள்ளது.

இரஷ்ய அணு உலை முத லில் கேரளாவில் அமைய விருந்தது.  கேரளத்திலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் இணைந்து எதிர்த் ததால் கேரளாவில் அமைய விருந்த இரஷ்ய அணு உலை கூடங்குளத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்திந்தியத் தலைமை யும் மராட்டிய மாநிலத் தலை மையும் கேரளத் தலைமையும் அணு உலைக்கு எதிராக இருக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு குழு தமிழின விரோதப் பாதையில் இன்னொரு நடவடிக்கையாக கூடங்குளம் அணு உலையை ஆதரித்துப் பரப்புரை செய் கிறது. அண்மையில் கூடங் குளம் அணுஉலை நிறுவனத் தலைவர் இராமமூர்த்தியை வைத்து கருத்து உருவாக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நடத்தியது. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராசன், அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராசன் ஆகியோர் அதில் கலந்து கொண்டு எப்படியும் கூடங் குளம் அணு உலையை நிறுவி யே தீருவது என்று வலிந்து  பேசியிருக்கிறர்கள்.

இந்திய அரசு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து அப்போ ராட்டத்தை இடிந்தகரையில் மையம் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிற அறிவாளர் களையும் போராட்டத் தலைவர்களையும் மக்களிடம் இருந்து பிரிப்பதற்குப் பல அவதூறு களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது இரஷ்யா விற்கு எதிரான அமெரிக்கச் சதி என்று சொல்வதற்கு உளவுத் துறை யோடு தொடர்புடைய பலரையும் ஊடகத்தின் வாயிலாகக் களமிறக்கியிருக் கிறது முதல் நபர் அமெரிக்கக் கையாளான சுப்பிரமணியம் சுவாமி “இது வெளிநாட்டுச் சதி“ என்று தொலைக் காட்சியில் பேட்டி அளிக் கிறார். எந்த வெளிநாட்டுச் சதி என்று வெளிப்படையாக அவரால் சொல்ல முடிய வில்லை. காரணம் அவர் சொல்ல விரும்புகிற வெளிநாடு அமெரிக்கா. அந்த அமெரிக்கா வின் முதல் நபர் கையாளாகவே தான் இருக்கிறபோது அதைச் சொல்ல முடியாமல் விழிக் கிறார். இந்த அவதூறு களின் அடிப்படை நோக்கம் மக் களைத் தலைமையற்றவர் களாக மாற்றுவது, அதன் மூலம் திசை தெரியாமல் அவர்களைச் சிதறடிப்பது என்பதுதான்.

உலக அணு ஆயுத வல்லரசு களின் அணிவகுப்பில் இந்தியா வும் சேர்ந்து கொள்ள விரும்பு கிறது. அணு ஆயுத வல்லரசாக மாறும் கனவு இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி ஆட்சிக் கலத்தில் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை நடத்தப் பட்டது. அந்த பொக்ரான் 1 அணு வெடிப்பு சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப் புக்கு இந்திய அரசு ஆளானது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதர வோடு அணு ஆயுதக் குவிப்பில் இறங்குவதற்கு இந்திய அரசு முனைந்தது. அந்தச் சூழலில் தான் கூடங்குளம் பேச்சு வார்த்தை தொடங்கியது.

அணு மின்சாரத்திற்கான உலை என்பது அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் போன்ற கதிரியக்கக் கழிவுகளில் சிலவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். இது உலகறிந்த கமுக்கம்.  அணு மின்சாரம் என்ற பெயரில் இரஷ்யாவிலிருந்து யுரேனி யத்தை இறக்குமதி செய்து அணு மின்சாரத்தையும் உற் பத்தி செய்துவிட்டு அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியத் தை வைத்து அணுகுண்டு தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தில்தான் சோவியத் ஒன்றியத்தை இந்தியா அணு கியது.

ஆனால் சோவியத் ஒன்றி யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அரசியலில் ஏற்பட்டிருக்கிற மாறுதலுக்கேற்ப இந்திய அரசு அமெரிக்க வல்லரசின் கூட்ட ணியில் இணைந்திருக்கிறது. இன்று அமெரிக்க வல்லரசின் அணு ஆயுதக் கூட்டாளிகளில் ஒருவராக இந்தியா இணைந் திருக்கிறது.   இங்கு அணு உலை ஏற்படுத்துவது என்பது இந் தியா உலக ஏகாதிபத்திய வல் லரசுகளில் ஒன்றாக வளர் வதற்கு ஒரு முக்கிய கண்ணியாக அமைகிறது.

இதுவரையிலும் இந்தியா வில் அமைந்துள்ள அணு மின்சார உலைகள் 500 மெகா வாட்டைத் தாண்டி உற்பத்தித் திறன் உள்ளவை அல்ல. முதல் முறையாக 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில்தான் நிறுவப்படுகின்றன. இது தொ டர்பான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தது. இதை நம்பிக் கையாக வைத்துத்தான் மேற்கு வங்காளத்தில் அரிப்பூரிலும் மராட்டியத்தின் ஜெய்த்தாப் பூரிலும் இன்னும் ஒரிசாவிலும் ஆந்திராவிலும் வேறு சில மாநிலங்களிலும அணு உலை களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தொடக்க நிலையிலேயே ஜெய்தாப்பூர் அணு உலைத் திட்டம் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அரிப் புரில் அணு உலை ஏற்படுத் துவதற்கு அம்மாநில முதல மைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு காட்டியதால் அத் திட்டம் கைவிடப்பட்டது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்கு வதென்பது தொடர்ச்சியான இந்திய அரசின் அணு வல்லரசு முயற்சியில்  முக்கியமான ஒன் றாக அமைந்திருக்கிறது.

இந்த அணு உலை ஒப்பந் தத்தின் மூலமாக அணு உலை தயாரிக்கிற பன்னாட்டு நிறுவ னங்களிடமிருந்து பல இலட்சம் கோடி கையூட்டுப் இந்திய அரசியல் தலைவர்களுக்கம் அதிகார வர்க்கத்தினருக்கும் உயர் மட்ட அறிவியலாளர் களுக்கும் கிடைப் பதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்தப் பல இலட்சம் கோடி கையூட்டுப் பணம் மிகப் பெரிய கவர்ச்சி யாக ஆட்சியாளர்களை ஈர்க் கிறது.  இவை எல்லாவற்றிற்கு மான திறவு கோலாக இன்று கூடங்குளம் அணு உலை அமைந்துள்ளது.  எனவே தான் கூடங்குளம் அணு உலையைத் திறந்தே தீருவது என்ற முயற்சி யில் இந்திய அரசு இறங்கி யுள்ளது.

அதற்காக முயலைப் போல், எலியைப் போல் சோதனைச் சாலைக்கு உரிய பிராணிகளாக ஒட்டுமொத்தத் தமிழினத்தை மாற்றியுள்ளது.

எனவே இடிந்தகரை தொ டங்கி தமிழகம் முழுவதும் பரவி வரும் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திய வல்லாட்சியை எதிர்த்த தமிழி னத்தின் தொடர் போராட் டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது.

சிங்களப் பேரினவாத அர சோடு இணைந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப் படுகொலை செய்தது இந்திய ஆரிய ஏகாதிபத்தியம் ஆகும்.  தமிழ்நாட்டு மீனவர்கள் 550 பேர் சிங்களத் துப்பாக்கிக்கு பலியானது இந்திய வல்லாட் சியின் துணையோடுதான். அது போதாது என்று நான்கு சுறா மீன்களைப் பிடித்தார்கள் என்ப தற்காக கடலோரக் காவல்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கை விலங்கிட்டு அடித்து நொறுக்கி இழிவு படுத்தியிருக்கிறது.  நாள் தோறும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினராலும் சிங்கள அரசின் கைக்கூலி களாலும் அன்றாடம் தாக்கப் படுவதும் இழிவுபடுத்தப்படு வதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப் புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு இந்திய வல்லரசு துணை செய் கிறது.  உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கி யிருக்கிற மலையாள அரசுக்குத் துணை செய்கிறது இந்திய வல்லரசு. கசிந்து வரும் பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திரா விற்குத் துணை போகிறது இந்திய வல்லரசு. வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகச் சொல்லித் தமிழகத்தை வெளி யாரின் வேட்டைக்காடாக மாற்றியிருப்பதுதான் இந்திய வல்லரசு.

இந்திய வல்லரசின் தமி ழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங் குளம் அணு உலையாகும்.  தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடை யில்லாத மின்சாரத்தை வழங்கு வதற்கு முனைந்திருக்கிறது இந் திய அரசு.

 கட்டி முடித்துவிட்டார்கள் தடுத்து நிறுத்த முடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.  தமிழினத் திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

0 கருத்துகள்:

“தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?” - கி.வெங்கட்ராமன் கேள்வி!

23.07.2011, சென்னை-17.

"தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்?" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், "தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்களம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

இப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

0 கருத்துகள்:

தொழிலாளர்க்கு எதிரான புதிய சட்டங்கள் - தோழர் கி.வெங்கட்ராமன்

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று (மார்ச் 24,2011) தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான இரண்டு கடுமையான சட்ட முன்வடிவுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட ஒரு மசோதா  “தொழிலாளர் சட்டங்கள், திருத்த முன்வடிவு 2011” என்பதாகும். இன்னொன்று நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்ட “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய சட்ட முன்வடிவு (Pension Fund Regulatory and Development Authority Bill)” என்பதாகும்.

தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா ஒரே அடியில் மிகப்பெரும்பாலான தொழிலாளர் களைத் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. இச்சட்டத்திருத்தத்தின்படி ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிகை 40க்கும் குறைவாக இருந்தால் அந்நிறுவனங்கள், எல்லா தொழிலாளர் சட்டங்களிலிருந்தும் விலக்குப் பெறுகின்றன. அதாவது தொழிற்சாலைச் சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், உள்ளிட்ட எந்தச் சட்டத்தின் பாதுகாப்பும் இந்நிறுவனத் தொழிலாளர்களுக்குக் கிடையாது.

இந்தியாவின் தொழிலாளர்களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கும் குறைவாகப் பணியாற்றும் சிறு தொழிலகங்களில்தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் சிறு தொழிலகங்கள் தாம் முதன்மையான இடங் களாக உள்ளன. தமிழ்நாட்டுத் தொழிலாளர் களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கு கீழ் பணியாற்றும் தொழிலகத் தொழிலாளர்கள் தாம்.

இந்நிலையில் 40 பேருக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றால், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலோர் இருக்கிற அரைகுறை சட்டப் பாதுகாப்பு கூட கிடைக்காமல் நிறுத்தப்படுவார்கள்.

ஏற்கெனவே 12 மணி நேர வேலை என்பது சிறு தொழிலகங்களில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அந்நிறுவனத் தொழிலாளர்கள் விபத்து பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இத்திருத்தச் சட்டம் செயலுக்கு வருமானால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வேலை நிலைமைக்கு தொழிலாளர்கள் விரட்டப் படுவார்கள்.

காங்கிரசு அரசு முன்மொழிந்த இச்சட்டத் திருத்த முன்வடிவிற்கு அறிமுக நிலையிலேயே முதன்மை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளித்தது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும் ஆபத்து தொழிலாளர்களின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஒழுங்கமைக்கப்படாத மற்றும் சிறு தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது மேற்கண்ட சட்டத் தாக்குதல்கள் என்றால் ஒழுங் கமைக்கப் பட்ட தொழில் நிறுவனப் பணியாளர்கள் மீது ஓய்வூதிய சட்டத்திருத்தம் இன்னொரு தாக்குதலைத் தொடுக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை தொழில் நிறு வனத் தொழிலாளர்கள் ஆகி யோருக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை நிலைப்படுத்தவே இவ்வரைவுச்சட்டம் நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.

முதியோர் வாழ்வியல் சிக்கல் என்பது அண்மைக்காலமாக இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தீவிரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை ஆகும். முதலாளிய--நுகர்வியம் மற்றும் நகர்மயமாதல் ஆகி யவை இணைந்து கூட்டுக் குடும்பங்களைச் சிதறடித்து வருகின்றன. குடும்பம் என்ற அலகு மிகவும் சுருங்கிவிட்டது. உழைத்து சம்பாதிக்க முடியாத முதியோர் வேண்டாத சுமை யாகப் பார்க்கப்படுகிறார்கள். உயர் வருமானம் உள்ளோரி டையே கூட இப்பிரச்சினை முதியோர்களைத் தாக்குகிறது. இப்பிரிவினரிடையே மே லோங்கியுள்ள நுகர்விய- தன் னலப் பண்பாடு முதியோரிடம் அன்பு பாராட்டுவதை, அவர் களுக்காக சிறு சிறு பணிகளைச் செய்து தருவதை பெரும் சுமையாக கருதவைக்கிறது. இந்நிலையில்  உழைத்துக் களைத்த வயது முதிர்ந்தோர் தற்சார்பான வாழ்க்கை நடத்த பணமின்றி தவிக்கும் அவலம் தீவிரப்பட்டுள்ளது. ஓய்வூதியம் (பென்சன்) என்பது அரசு ஊழியர்களுக்கும் அரசுத் துறை தொழிலாளர்களுக்கும் வாழ்வின் கடைசி காலப் பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள முயல்கிறது. ஏற்கெனவே அனைத்துத் தொழில்துறை தொழிலாளர் களுக்கும் ஓய்வூதியம் கிடைப்ப தில்லை. இந்தியாவில் மொத்த முள்ள 50கோடி தொழிலாளர் களில் 3.5 கோடி தொழிலாளர் களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் வாழ்நாள் அதிகரித்து வருவதால் பணிஓய்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உயிருடன் வாழும் காலம் அதிகரித்து, அதன் காரணமாக ஓய்வூதியம் வழங்கும் தன்னுடைய நிதிச் சுமை அதிகரித்து வருவதாக அரசு கூறுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் திட்டங்கள் தீட்டி வருகின்றன.

அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் ஓய்வூதியம் என்பது கொடுபடாத சம்பள மாக ஏற்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கும், அவர்கள் இறப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறை தொழிலாளர்களுக்கும், வருங்கால வைப்பு நிதியில் உள்ள தனியார் துறை தொழி லாளர்களுக்கும் தொழிலாளர் பங்கேற்பு முறையுடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் செயலில் உள்ளது.

இவற்றை முற்றிலும் மாற்றியமைத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி 2004 சனவரி 1-ஆம் நாளிலிருந்து இந்திய அரசுப் பணியிலும் அரசுத்துறை பணியிலும் சேரும் தொழி லாளர்கள் புதிய திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப் பட்டார்கள். இதற்கான ஆணையை 2003 டிசம்பர் 22-ஆம் நாள் இந்திய அரசின் நிதித்துறை பிறப்பித்தது. ஆயினும் இதற்கு முன்னர் பணியில் இருக்கும் ஊழியர் களும் பல்வேறு வகையில் வலியுறுத்தப்பட்டு புதிய ஓய்வூ தியத்திட்டத்திற்கு விரட்டப்பட்டு வருகிறார்கள்.

இத்திசையில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக அரசு விளங்கியது. தமிழ் நாட்டில் 2001-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் மாநில அரசால் தொடங்கப் பட்டு பெரும்பாலான ஊழியர்கள் அதன் கீழ் கொணரப்பட்டனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மைய நோக்கமே ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைப்பதுதான்.

உலகமயம் - திறந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவை 1990- களில் தீவிரப்பட்ட பிறகு இதற்கான திட்டமிட்ட முயற்சிகள் தொடங்கின.

1999-ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆலோசனைப்படி இந்திய அரசு அமைத்த ஒரு குழு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்கும் ஆலோச னையை முன்வைத்தது. இதற்கு இரண்டாண்டுகள் கழித்து 2001-இல் காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணைய அறிக்கை உறுதியான சில முன்மொழிவுகளை அரசுக்கு வழங்கியது. ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்து அதனை உரியோருக்கு வழங்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவது என்றும், அந்நிதியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.

இதே போல் அரசு ஊழியர் தொடர்பான ஓய்வூதியம் குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட பட்டாச் சார்யா குழுவும் இதையொத்த பரிந்துரைகளை வழங்கியது. அரசு ஓய்வூதியத்திற்கு முழு பொறுப்பு ஏற்பதிலிருந்து விலக்களிக்கப் பட்டு ஊழியர்களும் அரசும் சமஅளவில் நிதி பங்கேற்கும் ஓய்வூதியத்திட்டம் ஒன்றை இப்பரிந்துரை முன் வைத்தது. ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அந்நிதியை பங்குச்சந்தையில் ஈடுபடுத்தவும் ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனைகளே 2004-லிருந்து செயலுக்கு வந்தன.

இதன்படி தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10%ஐ ஓய்வூதிய நிதிக்கு வழங்கு கிறார்கள். அது தொழிலக நிர்வாகத்தால் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப் படுகிறது. இதே போன்று 10% அளவு தொகையை நிர்வாகமும் தனது பங்காக வழங்குகிறது. இவை இரண்டும் சேர்ந்தே ஓய்வூதிய நிதியாக சேமிக்கப் படுகிறது. ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்களில் தொழிலாளர் பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்த தொகையில் ஒருமாத சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50% (பாதி) தொகை என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது முதலில் அறிவிக்கப் பட்ட திட்டமாகும்.

ஆயினும் இத்தொகையை தனியார் துறை நிதி நிறுவனங்களும் நிர்வாகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட பிறகுதான் இதிலுள்ள சிக்கல் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 35 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்து வைப்பு நிதி சேர்க்கப்படுவதாக கொள் வோம். இதற்கு வட்டி 9% ஆகும். பணிக்கால இறுதியில் அவருடைய கணக்கில் 29,41,780 ரூபாய் சேர்ந்திருக்கும். இந்நிதியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது அதற்கு நடப்பில் உள்ள நுழைவுக் கட்டணம் 5 விழுக்காடு ஆகும். தனியார் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்திற்காக வசூலிக்கும் கட்டணம் 2% ஆகும். இது பார்வைக்கு சிறிதாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பிடித்தம் செய்யப்படுகிற தொகைக்கு 2 விழுக்காடு என்று கணக்கிடும் போது அதன் கூட்டுத்தொகை 7 இலட்சத்தை தாண்டும். இது தவிர இப்போதைய சந்தை நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் விளம் பரம், நிர்வாகம் மற்றும் குறைந்த பட்ச இலாபம் போன்ற வற்றிற்காக 15 விழுக்காடு எடுத்துக் கொள்கின்றன. இவற்றையெல்லாம் கழித்தால் தொழிலாளர்கள் கணக்கில் உள்ள ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50 விழுக்காடு போய்விடும்.

இந்த இழப்பு இல்லாமல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யத்தை வழங்க வேண்டுமானால் அந்நிதி நிறுவனம் மிகப்பெரும் அளவிற்கு இலாபம் பெறத் தக்க வகையில் சந்தையில் முதலீடு செய்தால் தான் சாத்தியமாகும்.

இங்குதான் சூதாட்டம் தொடங்குகிறது. முதலில் ஓய்வூதிய நிதியை தன் பொறுப்பில் கொண்டுள்ள நிறுவனமானது ஒன்று, இதனை அதிக இலாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இது எல்லா நேரத்திலும் வாய்க்காது. அந்நிலையில் கூடுதல் வட்டி வழங்க உறுதி அளிக்கும் வேறொரு நிதி நிறுவனத்திடம் இந்நிதியைக் கைமாற்றிவிடும். அது அதைவிட கூடுதல் வட்டியை எதிர் நோக்கி வேறொருகைக்கு மாறும்.

இதே போன்று வங்கிக் கடன்கள் கைமாற்றி விடப்பட்டதால் தான் கடந்த 2008-ல் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவ னங்கள் அடுத்தடுத்து ஓட்டாண்டியாயின. அவ்வங்கிகளில் பணம் போட்டவர்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான நிலை ஓய்வூதிய நிதிக்கும் ஏற்படும் ஆபத்து உண்டு.

இவ்வாறான ஆபத்து நேர்ந்தால் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உறுதி செய்யும் பொறுப்பை அரசு ஏற்காது என்பது இச்சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. இதற்கான இழப்பு அச்சம் (ரிஸ்க்) முழுவதும் தொழி லாளர்களைச் சார்ந்தது. தங்கள் ஓய்வூதிய நிதி எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படலாம் என்று எழுத்துப் பூர்வமாக கட்டளையிடும் வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை அத்தொழிலாளிக்கு உண்டு என்று அச்சட்டம் கூறுகிறது.

சந்தை சூதாட்டத்தைப் புரிந்துக்கொண்டு இலாபகரமாக முதலீடு செய்யவைக்கும் வாய்ப்பு இந்நாட்டு தொழி லாளர்களில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? கிட்டத்திட்ட யாருக்கும் அவ்வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. ஆயினும் தொழிலாளர்கள் ஒப்புதலோடு அவர்களது ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்திலும், நிதி நிறுவனப் போட்டியிலும் இறக்கிவிடப் படுவதாக ஒரு சட்ட ஏற்பாடு நடக்கிறது.

பங்குச்சந்தையில் இறக்கிவிட சம்மதிக்கவே முடியாது என்று ஒரு தொழிலாளி மொத்தமாக மறுத்துவிடவும் முடியாது என இச்சட்டம் நிபந்தனை விதிக்கிறது. 35 வயது வரை அத் தொழிலாளியின் ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50% நிதி பங்குச்சந்தையில் இறக்கி விடப் பட்டே ஆக வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. 36 வயதுக்கு பிறகு பங்குச்சந்தையில் இறக்கிவிடப்படும் தொகை படிப்படியாக குறைந்து அது அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும்.

ஓய்வு பெறும் போது ஒரு தொழிலாளி தன்னுடைய ஓய்வூதிய நிதியிலிருந்து அதிகப்பட்சம் 60 விழுக்காட்டு தொகையை மொத்த பணமாக பெறலாம். மீதி உள்ள 40% விழுக்காட்டு தொகை கட்டாயம் ஓய்வூதிய நிதி நிறுவனத் திடம் விட்டு வைக்கப்பட வேண்டும். அதிலிருந்து மேற் சொன்ன வகையில் மாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஒரு வேளை ஓய்வு பெறும் வயதுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வில் செல்வதானால் அவரது ஓய்வூதிய நிதியிலிருந்து 20% வரை மட்டுமே மொத்தப் பணமாக வழங்கப்படும். மீதமுள்ள 80 விழுக்காடு தொகை நிதி நிறுவனத்திடமே இருக்கும். அதிலிருந்து கிடைக்கும் ஓய்வூதியமும் 58 வயதிலிருந்துதான் கிடைக்கும்.

பங்குச்சந்தையிலோ, நிதிச் சந்தையிலோ இறக்கிவிடப்படும் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி அந்நிதிநிறுவனத்திட மிருந்து கைநழுவிப் போகுமானால் தொழிலாளர்கள் தாங்கள் உழைத்து சேமித்த தொகை அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அரசு தெளிவாக அறிவித்து விட்டது.

ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்வதற்கு ஒழுங்காற்று ஆணையம் நிறுவுவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை 2004 -டிசம்பரில் இந்திய அரசு பிறப்பித்தது. அதை நிரந்தரச் சட்டமாக்கும் முயற்சியில் அதற்கான சட்ட முன்வடிவு 2005-ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அம்மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் காக அனுப்பபட்டது. அந்நிலைக்குழு சில திருத்தங்களை முன்வைத்தது. ஆயினும் விவா தத்திற்கு முன்பாகவே அந்நாடாளுமன்ற மக்களவையின் வாழ் நாள் முடிந்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அத்தோடு அம்மசோதாவின் வாழ்நாளும் முடிந்தது.

இந்நிலையில் இதனை உயிர்ப்பித்து புதிய சட்ட வரைவாக நாடாளுமன்ற மக்களவையில் இந்திய அரசு இப்போது முன்வைத்துள்ளது. ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ள தொழிலாளர்களே எண்ணிக்கையில் மிகக்குறை வானவர்கள். அவர்களது ஓய்வூதியமும் மேற்சொன்னவாறு தனியார் கைகளில் விடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்துள்ள மிகப்பெரும் தாக்குதல்கள் இச்சட்டங்களின் வாயிலாக செயலுக்கு வருகின்றன.

இந்திய அரசு முன் வைத்துள்ள  “தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா 2011”  “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி மசோதா” ஆகியவற்றைத் தொழிலாளர்களும் ஒட்டு மொத்த சனநாயக சக்திகளும் ஒன்றுப்பட்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்: