கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

நோயைக் கொல்லாதே! நோயாளியைக் கொல்!





ஏறத்தாழ 25,000 பேரை பலிகொண்ட போபால் நச்சுவளிப் பேரழிவின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை போபால் மக்களும் இந்தியா முழுவதிலுமிருந்து போபாலில் திரண்ட சூழலியல் ஆர்வலர்களும் கடந்த 03.12.2014 அன்று கடை பிடித்தனர். யூனியன் கார்பைட் நிறுவன உரிமையாளர் - அண்மையில் காலமான- ஆண்டர்சனின் உருவ பொம்மையை கொளுத்தி கண்டனத்தைத் தெரிவித்தனர்.

போபால் யூனியன் கார்பைட் ஆலையில் நச்சுவளி வெளியேறி அதில் சிக்கி பலியான குடும்பத்தின ரும், அடுத்தடுத்த தலைமுறையாகப் பாதிப்புகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மக்களும் உரிய துயர் நீக்க நிதி ஏதும் கிடைக்காமல் 30 ஆண்டுகள் கடந்து இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போபால் பேரழிவு இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டி யதன் தேவையை உணர்த்தியது. இப்பேரழிவால் விழிப் படைந்த பல தரப்பினரும் வெளியிலும் நீதிமன்றத் திலும் நெடிய போராட்டங்களை நடத்தினர். இவற் றின் பயனாக பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஏற்கெனவே இருந்த சட்டங்களில் திருத்தங்கள் பல செய்யப்பட்டன.

ஆயினும் இச்சட்டங்கள் ஓட்டைகள் மிகுந்ததாகவும், இச்சட்டங்களைச் செயல் படுத்த வேண்டிய அதிகாரப் பொறியமைவு கள் வலுவற்றவையாகவும், சூழல் பாதுகாப்பில் அக்கறையற்றவையாகவும் விளங்கி வருகின்றன.

சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இச்சட்டச் செயலாக்க நிறுவனங்களில் சூழலியல் குறித்து கல்வி கற்றவர் களும், சூழலியல் மீது அக்கறை யுள்ளவர்களும் அமர்த்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இருக்கிற இந்த அரைகுறை சட்டங்களையும் நீக்கிவிட வேண்டும் என்று பன்னாட்டு, இந்தியப் பெருமுத லாளிகள் தரப்பிலிருந்து அழுத்தங் கள் தரப்படுகின்றன. குறிப்பாக 1990 களுக்கு மேல் தாரா ளமயப் பொரு ளியல் கோலோச்சத் தொடங் கிய பிறகு இந்த அழுத்தம் அதிக மானது. அதே நேரம் மக்களி டையே சூழலியல் குறித்த விழிப் புணர்வு ஏற் பட்டுப் பல தளங்களில் போராட்டங்கள் அதிகரித்தன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டங்களும் அவற்றை செயல்படுத்து வதற்கான பொறியமைவுகளும் வலுவற்று இருப்பதை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் சுட்டிக் காட்டின.

ஆயினும் கடந்த மன்மோகன் சிங் ஆட்சி பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இச்சட்டங்களில் திருத் தங்கள் செய்யத் தொடங் கியது. இப் போது நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய அரசு இச் சட்டங்களை ஒட்டு மொத்த மாக மாற்றியமைக்க தீவிரமாக செயலில் இறங்கியது, இயற்கை யையும் அது சார்ந்த மக்களையும் சூறையாடுவ தற்குப் பெருமுதலாளி களுக்கு ஆதரவான சட்டமாக மாற்றியமைப்பதே மோடி அரசின் நோக்கம்.

நரேந்திர மோடி அரசு 2014 மே மாதத்தில் ஆட்சிக்கு வந்த உட னேயே சுற்றுச் சூழல் பாது காப்புக் கானப் போராட்டங்களை வளர்ச் சிக்கு எதிரான வெளிநாட்டு சதி என்று குற்றம் சாட்டியது. மோடி அரசின் உள்துறை அமைச்சகத் திற்கு உளவுத்துறை அளித்த உள்ளக அறிக்கையில் பாஸ்கோ, வேதாந்தா சுரங்கங்களுக்கு எதிராக பழங்குடி மக்கள் மாதக்கணக்கில் போராடியதையும், வன உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பயன் படுத்திப் பழங்குடி மக்களின் கிராம சபைகள் வேதாந்தா இரும்பு சுரங்கம் தோண்டப்படுவதைத் தடுத்து நிறுத்தியதையும், அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தையும், மரபீனி மாற்ற விதைகளுக்கு எதிரான வழக்குக ளையும் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடு வதாக கண்டித்தது.

ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலாளிகளின் கூட்டத்தில் அடுத் தடுத்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி “சட்டங்கள் குறைந்த நாடாக இந்தியாவை மாற்றுவேன், இந்தியாவில் குறை கூலிக்குத் திறன் மிகுந்த தொழிலா ளர்கள் கிடைப்பார்கள். இந்தியா வில் வந்து தொழில் தொடங்குங் கள்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது துறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் ஆய்வு செய்து சட்டங்களைக் குறைப்பதற்கான ஆய்வுக்குழு ஒன்றை 2014 ஆகத்தில் அமைத்தது. முன்னாள் அமைச் சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த உயர் மட்டக் குழு 1986 சூழலியல் பாதுகாப்புச் சட்டம், 1980 காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1974 தண்ணீர் மாசுபாட்டுத் தடுப்புச் சட்டம், 1981 காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து கடந்த 18.11.2014 அன்று அரசுக்கு அறிக்கை அளித்தது.

பழங்குடியினர் நலத்துறை சார்ந்ததாக வன உரிமைச் சட்டம் 2006 இருந்ததால் அது குறித்து இக்குழு நேரடியாக ஆய்வு செய்ய வில்லை என்ற போதிலும், மேற் சொன்ன சட்டங்களின் வழியாக வன உரிமைச் சட்டத்திற்குள்ளும் மூக்கை நுழைத்தது.

இந்த உயர்மட்டக் குழுவில் சட்டத்துறை சார்ந்த இருவரும் அதிகாரிகள் இருவரும் உறுப்பினர் களாக இருந்தனர். அவர்களுள் ஒருவரான விசுவநாதன் ஆனந்த் கோகோகோலா நிறுவனத்தின் ஆலோசகர் ஆவார். இன்னொரு அதிகாரியான ஹர்தீஷ் ஷா குசராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலை வராக இருந்த பொழுது கண்ணை மூடிக் கொண்டு இராக்கெட் வேகத் தில் சூழல் கேடு செய்யும் நிறுவனங் களுக்கு மறுப்பின்மை சான்றிதழ் வழங்கியவர் என நீதிமன்றத்தா லேயே கண்டிக்கப்பட்டவர்.

இந்த உயர்மட்டக் குழுவுக்கு அளிக்கப்பட்ட ஆய்வு வரன் முறையே ஒரு தலைச்சார்பானது; பெருமுதலாளி நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுச் சூழல் சட்டங்களை மாற்றி அமைக் கும் நோக்கம் கொண்டது.

“நமது நோக்கங்களுக்கும் இச் சட்டங்களின் அமலாக்கத்துக்கும் இடையில் உள்ள நிலைமையை ஆய்வு செய்வது”, “தற்போதைய தேவைகளையும் நோக்கங்களையும் நிறைவு செய்யும் வகையில் இச் சட்டங்களை ஒத்திசைவானதாக மாற்றுவதற்கு தேவையான திருத் தங்களைப் பரிந்துரைப்பது” ஆகியவை உயர்மட்டக் குழுவின் விசாரணை வரம்பாகக் குறிக்கப் பட்டுள்ளது.

“தற்போதைய தேவை”, “நோக்கங் கள்” ஆகிய தொடர்களுக்கு விளக் கம் சொல்லப்பட வேயில்லை. யார் எப்படி வேண்டுமானாலும் எடுத் துக் கொள்ளலாம் என்பது போல தெளிவற்ற முறையில் விசாரணை வரம்பு குறிக்கப்படுகிறது.

ஆயினும் உண்மையான நோக் கம் என்ன என்பதை உயர்மட்டக் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியத்தின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது.
பெங்களூரில் நடந்த மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் சூழலி யலாளர்கள் இதுபற்றி விளக்கம் கேட்டபொழுது. விளக்கம் கூற மறுத்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அக்கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்புச் செய்தார். அவரைத் தொடர்ந்து அக்குழுவினரும் வெளி யேறினர். அதற்குப் பிறகு நடை பெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங் கள் காவல்துறை கெடுபிடிகள், உளவுத்துறையின் விசாரணைகள் ஆகியவற்றிற்குப் பிறகு தங்களுக்கு இசைவானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நடத்திய நாட கங்களாகவே அமைந்தன.

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இதுபற்றி மக்க ளிடமிருந்து கருத்துக் கேட்கப் படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அவை ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும், அதுவும் 1000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.அந்த இணையத்திற்கு அனுப்பப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற மறு மொழி கூட அனுப்பியவர் களுக்கு இல்லை.
இவ்வாறு கருத்துக் கேட்பு என்ற சடங்கு கூட சர்வாதிகார மான முறையில் நாடகமாக அரங் கேற்றப்பட்டது.

இறுதியில் இந்த உயர் மட்டக் குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆயினும் வேண்டுமென்றே அமைச்சகத்தின் சந்து பொந்துகள் வழியாக கசிய விடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கைக் குறித்து இக்குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணி யன் ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணல் வழியாகவும் இது பற்றி அறிய முடிகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என் பது முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு சுற்றுச்சூழல் மேலாண்மை என்பதாக மாற்றப்படுகிறது. எல்லா சட்டங்களையும் உள்ளடக்கிய “சுற்றுச்சூழல்விதிகள் (மேலாண்மை) சட்டம்” (Environment Laws (Management) Act) - ELMA என்ற சட்டத்தை உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்காக அனைத்திந்திய அளவில் “தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் (National Environment Management Authority - NEMA)” என்றும், இந்த ஆணையத் துக்கு கட்டுப்பட்டதாக மாநில அளவில் “மாநில சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் (State Environment Management Authority - SEMA)” என்றும் நிறுவப்பட வேண் டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள் ளது.

இதன்மூலம் அனைத்திந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை கலைக்கப்படு கின்றன. வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளார்கள்.

தண்ணீர் மாசுபாட்டுத் தடுப் புச் சட்டம், காற்று மாசுப்பாட்டுத் தடுப்புச் சட்டம் ஆகியவை நீக்கப் பட்டு அவற்றின் சில கூறுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத் தின் பிரிவுகளாக்கப் படுகின்றன.

அதாவது தண்ணீர், காற்று இவற்றின் தூய்மையைப் பாதுகாப் பதற்கான தனித்த ஆய்வுகளும் அவற்றை செய்யும் நிறுவனங்களும் இல்லாது ஒழிக்கப்பட்டு பொத்தாம் பொதுவில் மொத்தமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதாக மாற் றப்படுகின்றது.

ஏற்கெனவே உள்ள சூழலியல் சட்டங்கள் சரிவர செயலாவ தில்லை. சூழலியலுக்கு எதிரான தொழில் நிறுவனங்கள், திட்டங்கள் ஆகியவற்றை சுற்றுச் சூழல் துறை தடுத்து நிறுத்துவதேயில்லை. சுற்றுச் சூழல் அமைச்சகம் தன்னி டம் நிறுவனங்கள் அளித்த மனுக்களில் 99 விழுக்காடு மனுக் களை ஏற்றுக் கொண்டு அந்நிறுவ னங்களுக்குச் இசைவு அளித்துள் ளது என்பதே இதற்குச் சான்று. சுற்றுச் சூழல் சட்டங்கள் வெறும் ஏட்டள விலேயே நிற்கின்றன, சரிவர செயலாவதில்லை என்ப தையே இது காட்டுகிறது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சூழலியல் சட்டங்களை யும் அவற்றைச் செயலாக்கும் நிறுவனங்களையும் வலுப்படுத்து வதற்கு மாறாக “99 விழுக்காடு மனுக்கள் ஏற்று அனுமதிக்கப் பட்டுள்ளன என்பதிலிருந்தே இச் சட்டங்கள் தேவையற்றவை எனப் புரிகிறது” என்று உயர்மட்டக்குழு முடிவு செய்கிறது. அதாவது சட்டம் செயலாகவில்லை எனவே அச் சட்டமே தேவையில்லை என்ற தலைகீழான முடிவுக்கு உயர் மட்டக்குழு வருகிறது.

நெடுஞ்சாலைகள், மின் வழங் கல் திட்டங்கள், குழாய் அமைத்தல் போன்றவற்றிற்கும், தேசிய முக்கியத் துவம் வாயந்தவை அல்லது தேசப் பாதுகாப்புக்கு தேவையானவை என இந்திய அமைச்சரவை முடிவு செய்யும் திட்டங்களுக்கும் வன உரிமைச் சட்டத்தின்படி இனி கிராம சபைகளின் அனுமதி தேவை யில்லை என்று உயர்மட்டக் குழு வின் பரிந்துரை கூறுகிறது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பழங்குடியின மக்களும் வனங்களில் வாழும் பிற மக்களும் பெற்ற உயிரான உரிமை இதன் மூலம் பறிக்கப்படுகிறது. இனி எந்தத் தங்குதடையுமின்றி பன்னாட்டு, இந்திய பெரு நிறுவனங்கள் காடு களையும் மலைகளையும் தங்கள் இலாப வேட்டைக்காக விழுங்கி விடலாம்.

இனி நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள், திட்டங்களை செயல் படுத்தலாமா கூடாதா என்பது பற்றியதாக இருக்கக் கூடாது. மாறாக இத்திட்டங்கள் செயல் படுத்துவதால் தங்கள் வாழ்விடங் களை இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கான மறுவாழ்வு, மறுக்கு டியமர்த்தம் பற்றியதாக மட்டுமே இருக்கலாம். அதிலும் உண்மை யான உள்ளூர் வாசிகள் மட்டுமே பங்குபெறலாம் என்று பரிந்துரை கூறுகிறது.

ஒரே அடியில் கேள்விமுறை யற்ற தாயகப் பறிப்புக்கு இது வழி வகுக்கிறது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய உயர்மட்டக் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரம ணியன், “மிகப்பெரிய வளர்ச்சித் திட்டத்தை சாதாரண பழங்குடி கிராமம் ஒன்று தடுத்து நிறுத்து வதை இனியும் அனுமதிக்க முடி யாது. இதுபற்றி முடிவு செய்ய அமைச்சரவைக்கு மட்டுமே தகுதி உண்டு” என்று ஈவிரக்கமின்றி கூறினார்.

அதுமட்டுமின்றி நர்மதை அணைக்கு எதிராக மேதா பட்கர் தலைமையில் பழங்குடி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை மறைமுகமாகக் குறிப்பிட்ட டி.எஸ். ஆர். சுப்பிரமணியன் “இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அணையின் உயரத்தை அதிகரிக் காமல் விட்டிருந்தால் குசராத்தி லும் மகாராட்டிரத்திலும் பல பகுதிகள் தண்ணீர் வசதி பெற்றிருக் குமா? சில பேர் பாதிக்கப் படுகி றார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த வளர்ச்சியை நிறுத்திவிடக் கூடாது” என்றார்.

சுற்றுச்சூழல் தொடர்பான எல்லாச் சட்டங்களையும் பலவீனப் படுத்தி ஒன்றாக்குவதற்கு இந்த உயர்மட்டக் குழு கூறும் காரணம் பொய்யானது. தொழில் நிறுவனங் கள் சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு மனு கொடுத்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டி யிருக்கிறது எனக்கூறும் காரணம் உண்மையன்று. ஏனெனில் ஒவ் வொரு தொழில் திட்டம் தொடர் பாகவும் அமைச்சகம் அளிக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assement - EIA) அறிவிக்கையிலும் அதற்கான கால வரம்பு அறிவிக்கப்படுகிறது. அக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வரவில்லை என்றால் அத்திட்டத் திற்குத் தாமாகவே இசைவு அளிக் கப்பட்டதாக பொருள் என்று அவ்வறிவிக்கையே கூறுகிறது.

ஒவ்வொரு சட்டத்தின் கீழும் தனித்தனியே அனுமதி வாங்குவது குறித்து உயர்மட்டக் குழு மிகவும் அலுத்துக் கொள்கிறது. காட்டு வளப் பாதுகாப்புச் சட்டம், வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம், தண்ணீர் மாசுபாடுத் தடுப்புச் சட்டம் ஆகிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சிக்கல் தொடர்பா னவை. அவை குறித்த ஆய்வுகளும் முற்றிலும் வெவ்வேறு தன்மையுடை யவை. உண்மை நிலை இவ்வாறி ருக்க, ஒவ்வொரு சட்டத்தின் கீழும் தனித்தனி இசைவு தேவையில்லை என்று டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு கருதுவது முழுக்க முழுக்க இலாப வெறி கொண்ட தொழில் முதலாளிகளின் பார்வையே அன்றி மக்கள் சார்ந்த சூழலியல் பார்வை அல்ல.
ஏற்கெனவே உள்ள சட்டங் களின்படி நிறுவப்பட்டுள்ள சூழலி யல் கண்காணிப்பு அமைப்புகளில் சூழலியல் தொடர்பான வல்லு நர்கள் இடம்பெறாமல் வெவ்வேறு துறை அதிகாரிகளே அமர்த்தப் படுகிறார்கள் என்ற அடிப்படைக் குறைபாடு நிலவுகிறது.

இதனைச் சரி செய்வதற்கு மாறாக உயர்மட்டக் குழு “இந்நிறு வனங்களில் சூழலியல் வல்லுநர்கள் இல்லை. எனவே இந்நிறுவனங் களே தேவையில்லை” என்ற முடி வுக்கு வருகிறது. நோயைக் காரணம் காட்டி நோயாளியைக் கொல்லும் மனிதப் பகைப் பார்வை இது.

இந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டு செயலுக்கு வருமானால் பழங்குடி மக்களும், உழவர்களும் தங்கள் வாழ்வாதா ரத்தையும் தாயகத்தையும் இழந்து சூழலியல் அகதிகளாக தொகை தொகையாக வெளியேற வேண்டிய அவலம் ஏற்படும்.

பருவநிலை மாற்றங்கள் ஓர் அபாய நிலையை எட்டியுள்ள சூழலை உலகமே கவலையோடு விவாதித்து வரும் சூழலில், சூழலை அழிக்கும் “வளர்ச்சி”க்கு மாற்றாக வளங்குன்றா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என கருதிக் கொண்டிருக்கும் வேளையில் ,இதற்கு முற்றிலும் நேரெ திரான இயற்கைச் சூழலையும், அது சார்ந்த மக்களையும் அழிக்கும் கொலைகாரத் திட்டத்திற்கு டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு பரிந்துரை அளித்துள்ளது.

இந்த உயர்மட்டக் குழு அறிக் கையை இந்திய அரசு ஏற்கக் கூடாது. இயற்கையையும், மனித வாழ்வையும் பாதுகாப்பதற்கு ஏற்ப சூழலியல் சட்டங்களை வலுப் படுத்த வேண்டும்.

சூழலியலாளர்களும், பழங்குடி மக்களும், உழவர்களும், மக்கள் நலனில் அக்கறையுள்ள அனை வரும் இந்த அறிக்கையை எதிர்த்துக் களம் காண வேண்டும்.

0 கருத்துகள்:

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு மோசடி நாடகம்



இந்திய அரசின் பெட்ரோலியத்துறை 01.12.2014 முதல் டீசல், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளதாகச் சொல்வது பன்னாட்டு பெட்ரோலிய விலைக்குத் தொடர்பில்லாத மோசடி அறிவிப்பாகும்.

கடந்த 01.06.2014 அன்று பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலை ஒரு பீப்பாய்க்கு 105.47 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு பீப்பாய் என்பது ஏறத்தாழ 119 லிட்டரைக் குறிக்கும். ஜூன் மாதம் ஒன்றாம் நாள் நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாயின் மதிப்பு 59.19 ரூபாய் ஆகும். இதன் படி பார்த்தால் பெட்ரோலியத்தின் ஒரு லிட்டர் பன்னாட்டு விலை 01.06.2014 அன்று 52.46 ரூபாய் ஆகும். அதே நாளில் இந்திய அரசின் பெட்ரோலியத் துறை ஒரு லிட்டர் டீசல் 51.12 ரூபாய் என்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.60 ரூபாய் என்றும் விலை அறிவித்தது.

01.12.2014 ஆம் நாள் பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை பீப்பாய்க்கு 65 டாலர். அதாவது இன்றைய நிலவரப்படி ரூபாய் கணக்கில் லிட்டருக்கு 33.94 ரூபாய். அதாவது 2014 ஜூன் 1ஐ ஒப்பிட 2014 டிசம்பர் 1 அன்று பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை 61 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்படி பார்த்தால் இந்திய அரசு டீசல் விலையை வரி உட்பட லிட்டருக்கு 37.28 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை 40.29 ரூபாய் என்றும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் விற்பனை வரியையும் சேர்த்து டீசல் விலையை 55.99 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை வரி உட்பட 66.04 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. உண்மையில் பன்னாட்டு விலையை விடப் பெட்ரோல் லிட்டருக்கு 25.76 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. டீசல் விலை பன்னாட்டு விலையை விட லிட்டருக்கு 18.71 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.

உண்மை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதாக இந்திய அரசு தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான மோசடியாகும்.

பன்னாட்டு விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் பெயருக்கு விலைக் குறைப்பு அறிவித்திருப்பதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவது பெட்ரோலியப் பொருட்கள் மீதான இந்திய அரசின் வரி வருவாய் ஆகும். ஒவ்வொரு வரவு, செலவு திட்டத்திலும் இந்திய அரசின் வரி வருவாய் வழிகளில் முதன்மையானதாக பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயே இருக்கிறது. இதனைத் தொடர்வதற்குப் பன்னாட்டு விலைக்குத் தொடர்பில்லாமல் குறைவான விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு காரணம் பெட்ரோலியத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ரிலயன்ஸ், எஸ்சார் போன்ற தனியார் குழுமங்களின் மிகை இலாபத்தை உறுதி செய்வது ஆகும். பன்னாட்டு விலை குறைந்த போதும். அதற்குத் தொடர்பில்லாத வகையில் அதிக விலையில் பெட்ரோல், டீசல் இந்தியச் சந்தையில் விற்பதன் மூலம் இத்தனியார் குழுமங்கள் மிகை இலாபம் அடைகின்றன.

இக்குழுமங்கள்தான் நரேந்திர மோடியின் தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டி அவர் வெற்றிக்கு துணை செய்தன. பதவிக்கு வந்தவுடன் பட்ட கடனை மோடி இவ்வாறு இந்நிறுவனங்களுக்கு அடைக்கிறார்.

மக்கள் தலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிக அளவில் சுமத்துவதோடு நிற்காமல் விலை குறைத்துவிட்டதாக நாடகமாடுகிறது மோடி அரசு. மக்கள் இந்த மோசடி அறிவிப்பினால் ஏமாந்து விடக் கூடாது.

இந்திய அரசு பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியத் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

பெருங்குழும ஆதிக்கத்திற்காக சாலை பாதுகாப்புச் சட்டம்

நெடுஞ்சாலை ஓட்டுநர்கள் சிறைச்சாலையில்!
அதிகாரம் அனைத்தும் இந்திய அரசின் கையில்!
போக்குவரத்துத் துறை முழுதும் பெருங்குழுமங்கள் கையில்!

இந்திய அரசு கொண்டுவந்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட வரைவு 2014இன் நோக்கம் இவைதான்.

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்காக மோடி அரசு முன்வைத்துள்ள வரைவுச் சட்டங்களில் இதுவும் ஒன்று.

‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும் விரைவானதாகவும் செலவுக் குறைவானதாகவும் மாற்றுவதே இச்சட்டத்தின் நோக்கம்’ என்று கூறப்பட்டாலும் இச்சட்டத்தின் உண்மையான நோக்கம் சாலைப் போக்குவரத்துத் தொடர்பான மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப் பதும், சாலைப் போக்குவரத்தை முற்றிலும் பெருங் குழும தனியார் மயமாக்குவதும்தான்.

நடப்பில் உள்ள 1988 தானியங்கி ஊர்திச் சட் டத்தை (மோட்டார் வாகனச் சட்டத்தை) நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இச்சட்டம் கொண்டு வரப்படு கின்றது.

நடப்பில் உள்ள சட்டத்தின்படி சாலைப் போக்குவரத்து அதிகாரம் பெரிதும் மாநில அரசின் கைகளில் உள்ளது. தானியங்கி ஊர்தித் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சட்டம் மாநில அரசின் இந்த அதிகாரத்தை முற்றிலும் பறிக்கிறது. தானியங்கி வாகனத் துறை அலுவலகங்களை இந்திய அரசின் முகவாண்மை நிறுவனமாக மாற்றுகிறது.

ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரால் சாலைப் போக்குவரத்தின் ஒரு பகுதி இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்திய அரசின் விருப்பப்படி நெடுஞ்சாலை பெரிதும் தனியார் சாலையாகிவிட்டது. கட்டணக் கொள்ளை நடக்கிறது.

இப்போது இந்தச் சட்டத் தின்படி “தேசியப் போக்குவரத்து ஆணையம்” (National Transport Authority) என்ற அமைப்பு நிறுவப் பட்டு, இந்தியாவின் ஒட்டு மொத்த வாகனப் போக்குவரத்து தொடர் பான அதி காரமும் அதனிடம் ஒப் படைக்கபடவுள்ளது. இந்த ஆணை யம் தனித்த வாரியமாக செயல்படும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கானக் கிளை ஆணைய அமைப்பு கள் இருக்கும் என்று இந்த வரைவுச் சட்டம் கூறுகிறது.

சாலை வரி, வாகன வரி உள் ளிட்ட அனைத்து வரி விதித்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கையாளும் அதிகாரம் முழுவதும் இந்த ஆணையத்திடம் ஒப்படைக் கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள தானியங்கி வாகனத் துறை வரி விதிப்பு, கட்டண விதிப்பு அதிகா ரத்தை இழக்கிறது.

மாநில அரசுக்கு சாலை வரி விதிப்பு, ஊர்தி வரி விதிப்பின் மூலம் கிடைக்கின்ற வருவாய் முதன்மை யான ஒன்றாகும். இந்த வருவாய் முழுவதும் அதற்குரிய அதிகாரமும் இவ்வாறு நடுவண் அரசின் கைக்கு மாற்றித் தரப்படுகிறது. ஆணையம் பார்த்து அந்த வருவாயில் ஒரு பகுதியை மாநிலத்திற்குத் தருமாம்.

சாலை விபத்துகள் அனைத் துமே ஓட்டுநர்களால் நிகழ்பவை என்ற பார்வையிலிருந்தே இந்த சட்டத்தின் விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. பேருந்துப் பயணிகள் கூட சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

சாலையில் ஓடும் வாகனங்களில் 72 விழுக்காடு இருசக்கர வாகனம் என்பதை கணக்கில் கொள்ளா மலே இச்சட்டவிதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

சாலை விபத்துகளுக்கு முதன் மைக் காரணம் சாலை மற்றும் நகர வடிவமைப்புதான் என்பதே அறிவி யல் வழிப்பட்ட உண்மை. ஆனால் இச்சட்டம் அந்த உண்மையை கணக்கில் கொள்ளவேயில்லை.

பொதுப் போக்குவரத்திற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதும் மிதிவண்டி மற்றும் நடைப் பயணி கள் ஆகியோருக்கு தனிப் பாதை ஏற்படுத்தித் தருவதும் முதன்மைத் தேவை என்பதை விபத்துகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மீண் டும் மீண்டும் எடுத்துக் கூறுகின்றன. ஆனால் இந்தச் சட்டம் அவற்றை முற்றிலும் புறக்கணித்து நேர்மா றான முடிவுகளுக்கு வருகின்றது.

நடைப்பயணிகள் குறுக்கே செல்வதற்கு சாலைகளில் எந்த இடத்திலும் வழி ஏற்படுத்தாமல் எல்லோருக்கும் நடைபாதை மேம்பாலம் என்பதையே வழியாக சொல்கிறது. நடைபாதை மேம் பாலம் கூடுமானவரை தவிர்க்கப் படவேண்டும். ஏனெனில் அவசர மாக செல்லும் அனைத்து வயது நடைப்பயணிகள் குறிப்பாக குழந்தை, முதியோர், உடல் நலிந் தோர் ஆகியோரை கருத்தில் கொள்ளாமலே மேம்பால நடை பாதை வலியுறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே நடப்பில் உள்ள சாலைக் கட்டுமானமுறை ஒரே சாலையில் மிதிவண்டி முதல் சுமையுந்து வரை அனைத்தும் செல்லுமாறு வடிவமைக்கப்படுள் ளது.நடைப்பயணிகளுக்கு சாலையை ஒட்டிய மேடான ஒற்றையடிப்பாதைக்கூட எல்லா சாலைகளிலும் இல்லை. நடை பாதைப் பயணிகளுக்கு இடமே வழங்காத மேம்பாலக் கட்டுமா னங்களே அதிகம்.

இவ்வாறான சாலை, பால வடிவமைப்புகளே சாலை விபத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணியாகும். சிக்னல் கள், நடைப்பயணிகள் கடப்பதற் கான வழிகள் ஆகியவற்றைக் குறைக்கவே இச்சட்டம் கூறுகிறது. கிராமப்புற மக்களை சாலைப் பயன் பாட்டிலிருந்து அப்புறப் படுத்தும் முறை இது.

அடுத்து மது போதையில் வாகனம் ஓட்டுபவருடைய நிலை விபத்திற்குக் காரணியாக அமை கிறது. இந்தியாவெங்கும் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மது விற்பனையை தாராளமாக அதிகரித்துவிட்டு சாலைப் பாது காப்புப் பற்றி பேசுவது கேலிக்கூத் தானது.

பாதுகாப்பானப் பயணத்திற்கு உறுதியான நடவடிக்கை எடுப்ப தாகக் காட்டிக் கொள்வதற்காக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணி யாவிட்டால் 2,500 ரூபாய் தண்டம், பெல்ட் அணியா விட்டால் 5,000 ரூபாய் அபராதம், இறப்பு நேரு மாறு விபத்து நிகழ்ந்தால் ஓட்டு நருக்கு ஒரு இலட்சம் வரை அபராதம், 7 ஆண்டுகள் சிறை, உரிமம் பறிப்பு என்று அடுக் கடுக்காகச் சொல்லப்படுகின்றது.

ஏற்கெனவே இருக்கின்ற நடை முறையிலிருந்து பட்டறிவு பெற் றால் இந்த விதிமுறைகள் எல்லாம் அதிகாரிகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்குமே அல்லாது விபத்து களை குறைக்க உதவாது என்பது புரியும். பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துவதும், தானியங்கி இரு சக்கர வாகனம், மிதிவண்டி, நடைப் பயணிகளுக்கு தனித்தனித் தடம் ஏற்படுத்துவதும் விபத்தைக் குறைக்கும்.

சாலைப் போக்குவரத்தை தேசிய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து, மாநிலச் சாலைப் போக்கு வரத்து, உள்ளாட்சி சாலைப் போக்குவரத்து என்று பலவாறாகப் பிரித்து அவற்றில் செல்லும் வாக னங்களுக்கான உரிமத்தை பொது ஏலத்தில் விடுவது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. அனைத்திந்திய பெரும் நிறுவன குழுமங்கள் இலா பகரமான அனைத்து போக்கு வரத்துத் தடங்களையும் கைப்பற்றிக் கொள்வதற்கே இது வழி ஏற்படுத் தித் தரும்.

இலாபம் குறைவான மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து வழித் தடங்கள் முற்றிலும் புறக்கணிக் கப்படும்.

125 கிலோ மீட்டருக்கு கீழே உள்ள தொலைவுக்கு 6 இருக்கை வாகனங்களுக்கும் 125க்கு மேல் 250 கிலோ மீட்டர் வரை 12 இருக்கை வாகனங்களுக்கும் மட்டுமே முன் னுரிமை வழங்கி மேற்கண்ட பொது ஏலம் நடக்கும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. கிட்டத்தட்ட தானிக்களே (ஆட்டோ) இல்லாத நிலை ஏற்படும். ஏற்கெனவே கால் டாக்சி என்பது ஒரு சில நிறுவனங் களின் கைக்கு மாறிவருவதைப் பார்க்கிறோம். இந்நிறுவனங்களி டம் வாடகைக்கு வாகனம் ஓட்டு பவர்களாக பல சொந்த மகிழுந்து வைத்துள்ள ஓட்டுநர்கள் மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்போக்கு விரைவுப்பட்டு ஒரு சில புள்ளிகளிடம் மட்டுமே வாடகை மகிழுந்து போக்குவரத்து சிக்கிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

பொதுப்போக்குவரத்தில் அரசுத் துறை மேலோங்கியி ருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விரைவான எதிர்காலத் தில் அவை மொத்தமும் தனியார் பெருங்குழுமங்களின் கைக்கு செல் வதற்கே இந்த ஏற்பாடு துணை செய்யும்.

எப்படிப் பார்த்தாலும் இந்திய அரசு முன்வைத்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட வரைவு 2014 ஏற்கத்தக்கதல்ல. இப்போதுள்ள நிலையை மேம் படுத்தும் வகையில் மாநில அரசுக ளோடு கலந்து ஒரு சாலைப் போக் குவரத்துக் கொள்கையை வரைய றுத்து அதனடிப்படையில் மாநிலங் கள் சட்டமியற்றிக் கொள்ள வழி ஏற்படுத்துவதே தீர்வாகும்.

எனவே சாலைப் போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு வரைவுச் சட்டத்தை இந்திய அரசு நிறை வேற்றக் கூடாது.

0 கருத்துகள்:

மாவீரர் நாள் செய்தி

25 ஆவது மாவீரர் நாளையொட்டி 
 தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
 தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் செய்தி


0 கருத்துகள்:

மீனவர்களே தமிழர்களாக ஒன்றிணையுங்கள்!





‘உலக மீன் வள நாள்’ இன்று (21.11.2014) கடைபிடிக்கப்படுவதையொட்டி, இராமநாதபுரத்தில், இராமநாதபுர மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கம்(RFTU) மற்றும் இந்திய சமூக செயற்பாட்டு பேரவை (INSAF) ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்றைய நாள் ‘மீனவர் நாளாக’கடைபிடிக்கப்பட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, சங்கத்தின் தலைவர் திரு. பாலுச்சாமி தலைமையேற்றார். செயலாளர் திரு. ஜோசப் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர். திருவாட்டி அன்னம்மாள்,தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் திரு.இளங்கோவன், இந்திய தேசிய சமூக செயல்பாட்டு மன்றஒருங்கிணைப்பாளர் திரு. மத்தியாஸ் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

‘இன்று ‘உலக மீன் வள நாள்’ இங்கு ‘மீனவர்’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் தான், இலங்கையில் தூக்குத் தண்டனைப் பெற்று விடுதலையாகியுள்ள இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தோழர்கள் விடுதலையாகி, தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!

இந்த ஐந்து மீனவர் விடுதலை எப்படி நடைபெற்றது என்பதை நாம் இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசின் தயவோடு இந்த மீனவர் விடுதலை என்பது சாத்தியமாகவில்லை.

அக்டோபர் 30ஆம் நாள், இராமேசுவர மீனவர்களக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த செய்தி வந்தவுடன், உடனடியாகக் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராமேசுவரத்தில் போராட்டம் வெடித்தது. போர்க்குணமிக்க அந்தப் போராட்டத்தின் போது, இந்திய அரசின் தொடர்வண்டி இருப்புப் பாதைகள் பெயர்க்கப்பட்டன. பல கிலோ மீட்டர் மனிதத் தலைகளே தெரியுமளவிற்கு மிகப்பெரும் சாலை மறியல்கள் இராமேசுவரத்தில் நடைபெற்றன.

தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் முகங்கள் – ஊர் பேர் என எதுவும் தெரியாத நிலையிலும் கூட, அவர்கள் தமிழர்கள் என்பதை உறவாகஉணர்ந்து கொண்டு, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழர் என்ற இணைப்பின் கீழ்தான் இது சாத்தியமானது.

இதே போல் நாம் ஒருங்கிணைந்து போராடியதன் விளைவாகவே, அரசுக்கு ஐந்து மீனவர்களை மீட்க வேண்டுமென்ற அழுத்தம் ஏற்பட்டது என்பது,மிகையானக் கூற்று அல்ல! ஒவ்வொரு சிக்கலிலும், இவ்வாறான ஒருங்கிணைந்த போராட்ட வழிமுறைத் தேவை! அதுவே நம்மை பாதுகாக்கும்!

2013ஆம் ஆண்டு, கடற்கரை மேலாண்மைச் சட்டம் - புதிய சட்ட விதிகளைக் கொண்டு திருத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் வேளாண்மையிலிருந்து எப்படி உழவர்களை வெளியேற்றுகிறார்களோ, அது போல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளுக்காக கடலோரத்திலிருந்து – கடலிலிருந்து மீனவர்களை வெளியேற்றும் திட்டத்திற்குத்தான் அச்சட்டம் பயன்படப் போகிறது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், 200 மீட்டர் முதல் 500 மீட்டர்வரை ஆழம் உள்ள கடல் பகுதிகளில், மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையில்லை என அறிவிக்கப்படும். அந்த பகுதிகளில் பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்கள் மீன் பிடித்துக்  கொள்ள அனுமதிக்கப்படும். அது போல,மீனவர் கடலிலிருந்து 500மீட்டருக்குள் குடியிருக்கக் கூடாது என்றும் சொல்வார்கள். இச்சட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள 25 தீவுகளிலும்,  அதைச்சுற்றியுள்ள 560 சதுர கிலோ மீட்டர் பகுதிகளிலும், நம்மீனவப் பெண்கள் காலங்காலமாக கடல் பாசி எடுத்து வரும் தொழிலைச் செய்து வந்தனர். ‘இந்திய விடுதலை’க்குப் பிறகு, அந்த உரிமை நம் மீனவப் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. வனத்துறையினர், நம் மீனவர்களை தடுக்கின்றனர். எனவே, இந்த உரிமையை மீட்க நாம் போராட வேண்டியத் தேவையுள்ளது.
  
அதே போல, நம் மீனவர்கள் காலங்காலமாகப் புழங்கி வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்கும் நாம் போராட வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பரப்பை, இருதரப்பினரும் மீன்பிடிக்கும் வகையிலானபொதுவான கடற்பரப்பாக அறிவித்து, இச்சிக்கலைத் தீர்க்க முடியும்.

இது போன்ற பல உரிமைகளை மீட்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியத் தேவையுள்ளது. மீனவர்கள் மட்டுமே ஒன்றுகூட, தொழிற்சங்கங்கள் அமைத்து, இந்த உரிமைகளை மீட்டுவிட முடியாது. நாம் அனைவரும், இணைய வேண்டிய புள்ளியில் இணைந்து, இந்த உரிமைகளை மீட்கலாம். அந்த ஒருங்கிணைப்பு, தமிழர் என்ற புள்ளியில்தான் இருக்கிறது. எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம், அதனை அமைப்பு வழியில் செய்து வருகின்றது“

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

கூட்டத்தின் நிறைவில், சங்கப் பொருளாளர் திருவாட்டி மீனா நன்றியுரையாற்றினார். நிகழ்வில், திரளான ஆண்கள் – பெண்கள் என நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

அறிவை விடுதலை செய்வோம்




அறிவுடையார் எல்லாம் உடையார்’’ என்றார் திருவள்ளுவப் பேராசான்! தனிஆள் வகையிலும் சரி, சமூகச் செயல்பாட்டிலும் சரி அறிவை ஆள்பவர்கள் மேல் நிலையில் நிற்கின்றனர். அவர்களில் சிலர் ஆதிக்க வாய்ப்பையும் பெறுகிறார்கள். அறிவு விடுதலையே சமூக விடுதலையின் முன் நிபந்தனை ஆகிறது.

அதுவும் இன்றுள்ள தகவல் யுகத்தில் அறிவுசார் மேலாண்மை என்பது சமூக மேலாதிக்கத்திற்கு உற்ற வழியாகத் திகழ்கிறது.

அறிவு என்றால் என்ன என்று வரையறுப்பது, அவ்வாறு வரையறுக்கப்பட்ட அறிவை உற்பத்தி செய்வது, அதனை மேலாண்மை செய்வது ஆகியவை ஆதிக்க ஆற்றல்கள் தன் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

இது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று, அறிவை வரையறுத்து தமதாக்கிக் கொள்வது, இரண்டு அறிவுசார் மொழியை நசுக்குவது. வரலாறு நெடுகிலும் நடைபெற்ற இந்த மேலாதிக்க முறை இன்றும் தொடர்கிறது.

தமிழ் இனத்தின் மீது ஆரியப் பார்ப்பன மேலாதிக்கம்  நிறுவப்படுவதில் மேற்சொன்ன வழி முறைகள் முதன்மைப் பங்காற்றின. இன்று உலகமய முதலாளிய மேலாதிக்கத்திலும் இது தொடர்கிறது.

பன்னெடுங்காலமாக நிலவிய தமிழர்களின் திணை வாழ்க்கை பெரிதும் அறிவியலுக்கு இசைவான, இயற்கையோடு இணைந்த அழகிய வாழ்க்கை நெறியாகும். தமிழ் உழவர்கள் பருவநிலை, நீரியல், மண்ணியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்கள். மருத்துவம், உலோகவியல், கட்டடவியல், உள்ளிட்ட  பலவற்றிலும் முதல்நிலைச் சமூகமாக விளங்கினார்கள்.

ஆயினும் கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நடைமுறை அறிவை பிற மனிதர்களிடத்திலும், அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும், வாய்மொழியாகவே பரப்பிவந்தனர். அதன் பிறகே இவர்களுடைய பல்துறை அறிவு எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் பெற்றது.

இந்தப் படைப்பாற்றல் மிக்க அறிவை இவ்வகைப் படைப்பாற்றல்களில் பின் தங்கியிருந்த ஆரியர்கள் எழுத்து வடிவில் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினர். அரசர்களின் ஆதரவு இருந்ததால் இவ்வாறு பதிவு செய்வது எளிதாகவும் அமைந்தது. இவ்வாறான பதிவுகள் பெரும்பாலும் சமற்கிருதத்தில் செய்யப்பட்டன.

வடமொழி சார்ந்த இந்த ஏட்டறிவைத் தான் அறிவு (knowledge) என்பதாக வரையறை செய்தார்கள்.

உண்மையான படைப்பாளிகளாக இருந்த தமிழர்கள் உடல் உழைப்பாளர்களாகவும், ஏட்டறிவு மட்டுமே பெற்றிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் மேலாண்மை செய்வோர்களாகவும் காலப்போக்கில் மாறினார்கள். வடமொழி ஆதிக்கம் அவர்களது இந்த அறிவு மேலாதிக்கத்திற்கு அரண் செய்தது.

எடுத்துக்காட்டாக, வானளாவிய கோபுரங்கள், நுணுக்கமான சிற்பங்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் படைத்தார்கள். இன்றளவிலும் வடஇந்தியாவில் இவ்வாறான சிறப்பு வாய்ந்த பழங்காலக் கட்டடங்களைக் காண்பது அரிது.

ஆனால் இவைகுறித்து சில்ப சாஸ்திரம்’’ என்று வடமொழியில் நூல் எழுதியதின் மூலம் பார்ப்பனர்கள் இத்துறையில் அறிவு மேலாதிக்கம் பெற்றார்கள். பரதம் தமிழ் மண்ணைச் சார்ந்த உடல் மொழிக் (மெய்ப்பாட்டு) கலையாகும். ஆனால் பரதசாஸ்திரம்’’ சமற்கிருதத்தில் பதிவானதன் வழி ஆரியர்கள் அதன் மீது உரிமை கொண்டாடினார்கள்.

இவ்வாறு படைப்பாற்றல் மிக்க அறிவை அறிவு’’ என்ற வரையறுப்புக்கு வெளியே வைப்பது, அப்படைப்பாற்றல் மிக்க மொழியை அறிவுத்துறைக்கு வெளியில் வைப்பது, படைப்பாற்றல் உள்ள மக்களை அறிவுத் துறைக்கு வெளியில் வைப்பது ஆகியவற்றின் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியப் பார்ப்பனர்கள் உறுதி செய்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இதனை மீண்டும் மீண்டும் அரசு ஆதரவோடு சொல்லிக் கொடுக்கும் போது உரிமையைப் பறிகொடுத்த சமூகமே அதனை இயல்பான நிலையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. இவ்வகைக் கருத்தியல் மேலாண்மையே மேல்நிலை வர்ணமாக பார்ப்பனர்கள் நிலை பெறுவதற்கு பெரும் பங்காற்றியது.

முதலாளியத்திற்கும் இந்தத் தன்மை உண்டு. வெறும் அரசு அடக்கு முறையின் மூலமாக மட்டுமே முதலாளியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. எந்த ஆதிக்கமும் வெறும் அடக்கு முறையின் துணைக் கொண்டு மட்டுமே நீடித்து நிற்பதில்லை. அறிவை ஆள்வது, கருத்தியல் மேலாண்மை செலுத்துவது ஆகியவற்றின் வழியாகத்தான் முதலாளியமானது சுரண்டப்படும் வர்க்கங்களைத் தமது ஆதிக்கத்தை ஏற்கும்படிச் செய்கிறது. அந்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அடிமை நிலையே ஒழுங்கு’’ என்பதாக பெயர்பெற்று விடுகிறது. இந்த ஒழுங்கு’’ மீறப்படும் போது மட்டுமே அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

சமற்கிருதம் செய்த வேலையை இன்று ஆங்கிலமும் செய்கிறது. இந்தியத்தோடு சமற்கிருத - இந்தி ஆதிக்கம் இணைந்து வருவது போலவே உலகமயத்தோடு ஆங்கில ஆதிக்கம் கைக்கோத்து வருகிறது.

ஆன்மிகத்தில் சமற்கிருதமும், ஆட்சியில் இந்தியும், பொருளியலில் ஆங்கிலமும் இணைந்து தமிழ் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தந்தத் துறையில், அந்தந்த மொழியின் மேலாண்மையை இயல்பான ஒன்றாக ஏற்கச் செய்வதன் மூலம் தமிழினம் தமது அடிமை நிலையை ஏற்கச் செய்யுமாறு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிவியல் மொழியல்ல, தமிழினம் அறிவியல் அறிவற்றது என்ற கருத்தைத் தமிழர்களே ஏற்கும் படிச் செய்வதில்தான் ஆதிக்க சக்திகளின் வெற்றியே இருக்கிறது.

இவ்வாறு நாம் தாழ்ந்தவர்கள், அறிவற்றவர்கள், நமது மொழியில் ஒன்றுமில்லை என்ற கருத்து ஒன்றிரண்டு தலைமுறைகளின் மீது நிலை நிறுத்தப்பட்ட பிறகு தமிழர்களின் பண்டைய அறிவே மொழிமாற்றம் அடைந்து சில வடிவ மாற்றங்களும் பெற்று நவீன அறிவியல் போல் கொண்டுவரப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பல் துலக்கும் வேப்பங்குச்சி, ஆலம் விழுது ஆகியவை பத்தாம்பசலித்தனமானவை என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிஎன்ற அறிவியல் மொழி மூடநம்பிக்கை வரிசையில் வைக்கப்பட்டு அறிவு என்ற வலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அதுவே நீம் டூத் பேஸ்ட்’, ‘ஹெர்பல் டூத் பேஸ்ட்என்ற பெயர்களில் பன்னாட்டுப் பெருமுதலாளி நிறுவனங்களின் பற்பசையாக வடிவம் பெற்று வருகிறபோது அது நவீன அறிவியல் என்பதாகக் கேள்வி முறையின்றி ஏற்கப்படுகிறது. பூண்டுத் துவையல், பூண்டு இரசம் என்ற உணவே மருந்தாக இருந்த தமிழர் முறை பத்தாம்பசலித்தனமானது என்று ஒதுக்கப்பட்டு, அதுவே கார்லிக் பெர்ல்ஸ்என்ற ஆங்கிலப் பெயரில் உறை மாத்திரை என்ற மருந்து வடிவம் பெற்ற பிறகு நவீன அறிவியல் கண்டுபிடிப்பாக ஏற்கப் படுகிறது.

இவ்வாறான ஏற்பை சமூகம் நிரந்தரமாக நீடித்து வைத்துக் கொள்வதற்கு  உறுதியான நிறுவன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உயராய்வு மையங்கள் என்பதை உலகமயப் பெருமுதலாளி நிறுவனங்களின் மேலாண்மையை உறுதி செய்வதற்கு இந்த வகையில் பணியாற்றுகின்றன. அந்த ஆய்வு நிறுவனங்களில் பயின்று வெளியே வரும் இளையதலைமுறை அறிவாளர்கள். பரந்துபட்ட மக்களிடமும், அடுத்தத் தலைமுறையிடமும் இக் கருத்தைக் கொண்டு செல்லும் ஏந்திகளாக (Conveyers) செயல்படுகின்றனர்.

இதனால் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை, பொருளியல் விடுதலை ஆகியவை ஒரு புள்ளியில் நிலைக்கொண்டுள்ளன.

இந்த விடுதலைகள் தனித்தனி யாக நிகழ்பவை அல்ல.

எனவே முதலாளியத்தை எதிர்ப்பவர்கள் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை ஆகியவற்றோடு இணையாமல் தனியாக வர்க்க விடுதலையைப் பெறமுடியாது. அதே போல் மொழி விடுதலை என்பது அதற்கான பின்னணி ஆதிக்க ஆற்றல்களை எதிர்கொள்ளாமல் தனியே சாதிக்க முடியாது.

தமிழ்ச் சமூகம் அறிவுச்சமூகம்தான் என்ற உண்மையை உணர வரலாற்று அறிவு முகாமையானது. வரலாற்று அறிவு அற்ற சமூகம் தன்னம்பிக்கை அற்ற உதிரிகளாகச் சிதைந்து போகும். இவ்வாறான சிதைவே ஆதிக்கவாதிகளின் வேட்டைக்கு உவப்பானது. மொழிதான் இந்த வரலாற்று அறிவைப் பொதிந்து வைத்துள்ள பெட்டகமாகும். மொழி அறிவோ, தம் மொழி குறித்த பெருமிதமோ அற்ற சமூகம் ஒரு சமூகமாகவே நிலைத்திருக்க முடியாது. உதிரிகளாகச் சிதைந்து விடும்.

தொடக்கக் கல்வியிலிருந்தே தமிழ் மொழியை நீக்கி விடுவது என்ற ஆட்சியாளர்களின் முயற்சிக்குப் பின்னால் இவ்வாறான சதித்திட்டம் இருக்கிறது.

ஏற்கெனவே தமிழ் மொழி குறித்த அறிவும், பெருமிதமும் குறைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப்பட்டிருப்பதால் குறிப்பாக ஆங்கிலத்தை ஒப்பிட தமிழ் தாழ்ந்தது என்ற தவறான மனப்பான்மை உள்ள சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப் பட்டிருப்பதால் அயல் ஆதிக்கம் இங்கு எளிதில் ஏற்கப்படுகிறது.

இடத்தையும், காலத்தையும் இணைக்கிற மொழி என்ற கண்ணியானது இவ்வாறு அறுக்கப்பட்டால் தமிழினம் உதிரிகளாகச் சிதைந்து திசை தெரியாப் பயணத்தில் தடுமாறும்.

தமிழினத்தின் அறிவு வரலாறு நிலைநாட்டப்படாது போனால் தமிழினம் தன்னம்பிக்கை அற்ற இனமாகக் கைபிசைந்து நிற்கும்; தனது அறமரபு குறித்து விழிப்புணர்வு இல்லாது போனால் தமிழினம் தனக்குள்ளாகவே மேல் - கீழ் எனப் பிரிந்து சண்டையிட்டு உருக் குலைந்து போகும்.

இந்த வரலாற்று அறிவே தன்னம்பிக்கை அளித்து அறிவு விடுதலைக்கும் அறவாழ்வுக்கும் வழிவகுக்கும். அறிவு விடுதலை மொழி விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.

இனம் விடுதலை அடைய அறிவு விடுதலை முன் தேவையா கிறது.
எனவே அறிவை விடுதலை செய்வோம்.

0 கருத்துகள்:

தொழிலதிபர்களின் காட்டாட்சிக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுக!



தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு பொது எண்ணை வெளியிட்டு, 16.10.2014 அன்று பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாளர் நலச் சட்டங்களில் பிற்போக்கானப் பலத் திருத்தங்களை அறிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்களே தொழிற்சாலை சட்டங்கள் கடைபிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்று மோடி அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அதிகாரிகளிடம் நிலவும் கையூட்டு ஊழல் காரணமாக தொழிற்சாலை சட்ட விதிகள் முறையாக செயல்படுவதில்லை என்பதே மெய்நிலை.

8 மணி நேர வேலை என்ற விதியினை, 10 மணி நேரம் – 12 மணி நேரம் வேலை வாங்கும் தொழிலகங்கள் அதிகரித்துவிட்டன. மிகை நேர இரட்டை ஊதியத்தை தவிர்ப்பதற்காக, “நீடித்த வேலை நேரம்” (Extension working time) என்ற பெயரால், வாரத்திற்கு 48 மணி நேரத்தையும் தாண்டி வேலை வாங்கும் தொழிலகங்கள் ஏராளம். தொழிற்சாலை ஆய்வாளர்கள் இந்த முறைகேட்டை கண்டுகொள்வதில்லை.

பல்வேறு முதன்மைத் தொழிற்சாலைகளில் கூட தொழிற்சாலை சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாததால், விபத்துகளில் தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆய்வு முறையைக் கூட “ஆய்வாளர் ஆட்சி (Inspector raj)” என்று கேலி செய்து, தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வே இல்லாததாக்குவது, நற்சான்றிதழே போதும் என அறிவிப்பது, சட்ட விதிகள் ஏதுமற்ற, வல்லாண் வகுத்ததே வாய்க்கால் என்ற கட்டாட்சியை தொழிற்சாலைகளில் கட்டவழித்து விடுவதாக அமையும்.

இதே கூட்டத்தில், பயிற்சியாளர் சட்டத்தில் (Apprentice act) கொண்டுவரப்போவதாக, சில திருத்தங்களையும் மோடி அறிவித்திருக்கிறார். தொழிலகங்கள் தங்கள் நிறுவனங்களில் அமர்த்திக் கொள்ளும் பயிற்சியாளர்கள் (அப்ரண்டிஸ்) அனைவரையும் தொழிலாளிகளாக நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை என இத்திருத்தத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பயிற்சியாளர் சட்டத்தின் நிபந்தனைகளில் இருந்து தப்பிப்பதற்காக “தற்காலிகப் பயிற்சியாளர்” (காசுவல் அப்ரண்டிஸ்), ஒப்பந்தப் பயிற்சியாளர் (கான்ட்ராக்ட் அப்ரண்டிஸ்) என்ற சட்ட விரோத வழிமுறைகளை பெருந்தொழிலதிபர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் கூட, இந்த சட்ட மீறல் நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்கள் நிலையைவிட, தற்காலிகத் தொழிலாளர் நிலைமை மோசமானது. தற்காலிகத் தொழிலாளர் நிலையைவிட, ஒப்பந்தத் தொழிலாளர் நிலைமை படுமோசமானது. ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட, பயிற்சியாளர் நிலைமை மிகவும் மோசமானது. இப்போது, பிரதமர் மோடி அறிவித்திருப்பது, மிகப் படுமோசமான உழைப்புச் சுரண்டலுக்கு வழி திறந்து விடும்.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make in India)” என்ற மோடி முழக்கத்தின் திரைக்குப் பின்னால், இவ்வளவு படுமோசமான தொழிலாளர் குருதி குடிக்கும் அறிவிப்புகள் வந்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புகள் அப்பட்டமான உழைப்பாளர் பகை அறிவிப்புகளாகும்.

எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிற்சாலை சட்டத்திலும், பயிற்சியாளர் சட்டத்திலும் அறிவித்திருக்கிற இத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு எதிரான இத்திருத்தங்களை எதிர்த்து, உழைக்கும் மக்களும் மனித நேயர்களும் களம் காணுமாறு அழைக்கிறேன்.

- கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

0 கருத்துகள்:

ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்!



தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று (16.10.2014) லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது. 

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரைக் குத்தினர். 

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.  இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர். 

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது. 

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  - கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

0 கருத்துகள்:

நெய்வேலிப் போராட்டம் : வெளியார் வந்தால் மறிப்போம்!




நெய்வேலிப் போராட்டத்தை உடைக்க வெளி மாநிலத் தொழிலாளர்களை  பணியமர்த்துவது இன ஒதுக்கலே! வெளியார் வந்தால் மறிப்போம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


கடந்த 42 நாட்களுக்கும் மேலாக, தீர்வேதும் இல்லாமல் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்திற்கும் போராடும் தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று (14.10.2014) நடைபெற்ற பதின்மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதன் போது, போராட்டத்தை உடைக்கும் பொருட்டு, வெளி மாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

நெய்வேலி அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்காக நிலம் கொடுத்த குடும்பங்களில் இருந்தவர்களே, தற்போது நிரந்தரப் பணிக்கோரி போராடி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் ஆவர். இந்த மண்ணின் மக்களை முறியடிப்பதற்காக, வெளி மாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் அறிவித்திருப்பது, தமிழர்களைப் புறக்கணிக்கும் இனஒதுக்கல் ஆகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நிர்வாகத்தின் இந்த முடிவை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், தொழிற்சங்கத்தோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அவரவர் பணியிடங்களில் ஈர்த்து நிரந்தரப்படுத்தி, மீதமுள்ள தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 25,000 ரூபாய் வழங்கி, நெய்வேலிப் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்:

நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்!


நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு
இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

நோக்கியா நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் நவம்பர் 1, 2014 உடன் முடிவடைவதால் திருபெரும்புத்தூரில் உள்ள அந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.


பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருப்பெரும்புத்தூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் கைப்பேசித் தொழிற்சாலையை நடத்திவந்தது.

இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.

620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய் இலாபத்தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்தினை தாண்டி மாத ஊதியம் கிடையாது. இந்த மண்ணைச் சுரண்டி இந்த மண்ணின் உழைப்பாளர்களைச் சுரண்டி கொழுத்தது போதாதென்று 25,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வரி ஏய்ப்பு வழக்கு காரணமாகவே திருப்பெரும்பந்தூர் தொழிலகத்தை கையகப்படுத்தாமல் விட்டு விட்டது. ஒப்பந்தத்திற்கு கைபேசி தயாரிக்கும் தொழிலகமாக நோக்கியாவை வைத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைவதால். நோக்கியா ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவென்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make In India)” என்று கூவிக்கூவி அழைக்கும் நரேந்திர மோடி அரசு கண்முன்னால் நடக்கும் இந்த ஆலை மூடலை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழக அரசும் கவலைக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த அலட்சியப் போக்கு இனியும் தொடரக்கூடாது. நோக்கியா ஆலையில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு இந்திய, தமிழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

நவம்பர் 1, 2014இலிருந்து குறைந்தது ஓராண்டிற்கு அத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கி மாற்று வேலைக்கு அவர்களை அமர்த்தும் பொறுப்பை இந்திய அரசு ஏற்கவேண்டும். அதற்கான தொகை முழுவதையும் நோக்கியா நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான ஆணையை இந்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நோக்கியா நிறுவனம் பொறுப்பேற்று நிதி தர தவறினால் நோக்கியா நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர்களை தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து இந்திய அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

குரு உற்சவ் - வருணாசிரம முறையை கொண்டு வரும் மறைமுக முயற்சி





இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்களது பிறந்த நாளான செப்டம்பர் -5 ஆசிரியர் நாளாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. ஆனால், பாரதிய சனதா ஆட்சியில் இந்த ஆண்டு முதல் ஆசிரியர் நாளை “ குரு உத்சவ்” என்றப் பெயரால் கொண்டாட வேண்டும் என இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பு மோடி அரசின் மேலும் ஒரு சமற்கிருதத் திணிப்பு, ஆரிய மேலாண்மை முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய அமைச்சர்கள் இணைய தளத்தில் இந்தியில் செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்றும், மத்திய மேனிலை வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்த பாரதிய சனதா அரசு இப்போது அந்த வரிசையில் குரு உத்சவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 5 ஐ ஆசிரியர் நாளாக தமிழகப் பள்ளிகள் கடைபிடித்து வருகின்றன. ஆசிரியர் என்ற சொல்லுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மதசார்பற்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவ்வாறே ஆசிரியர் நாளும் அழைக்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றது. இவற்றையெல்லாம் மாற்றி குரு உத்சவ் என்ற ஒற்றைத் தொடரால் அழைக்கச் சொல்வது அப்பட்டமான சமற்கிருத் மற்றும் ஆரிய திணிப்பு ஆகும்.

குரு, குருகுலம் போன்ற சமற்கிருத முறைமையின் மூலம் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் கல்வி பெறுவதிலிருந்து தள்ளிவைக்கப்பட்டதே இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு. இப்போது சனநாயக ஆட்சிக் காலத்தில் குரு உற்சவ் என அழைப்பது மீண்டும் வருணாசிரம சாதி ஒடுக்கு முறையை கொண்டு வரும் மறைமுக முயற்சியாகும்.

மோடி அரசின் இந்த அநீதியான முயற்சியை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச் சுற்றறிக்கையை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


தமிழக அரசு செப்டம்பர்-5 ஆசிரியர் நாள் என்பதை பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என்றும், இந்திய அரசின் அநீதியான இந்த சுற்றறிக்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், அந்த நாளில் பிரதமர் மோடி நிகழ்த்த உள்ள உரையை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மோடி அரசின் வருணாசிரம, ஆரிய ஆதிக்க அறிவிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிராமல் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு தமிழக மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

0 கருத்துகள்:

இந்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்!



நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.

சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் தொடர்பேதும் இன்றி தனித்து இயங்குவது என்றும், தனித்த தோற்றமும் வளர்ச்சியும் கொண்டது என்றும் 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கால்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர்.

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி, அலெக்ஸ் கோலியா உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

வரலாறு நெடுகிலும் சமஸ்கிருத மொழியும், இன ஆதிக்கமும், வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தோடு ஆரிய இன மேலாதிக்கமும் பிராமண வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன.

ஆரிய இனக்கலப்பும், சஸ்கிருத மொழிக் கலப்பும் ஏற்பட்டதால் தமிழிலிருந்து திரிந்து பிரிந்து உருவானவையே தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய மொழிகளும், அம் மொழிகள் சார்ந்த தேசிய இனங்களும் ஆகும்.

வர்ண சாதிக் கோட்பாடு தமிழ் மரபில் இல்லாத ஒன்றாகும். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ண சாதி முறைமை தமிழினத்தின் மீது ஆரிய இனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதாலேயே நிலைகொண்டது. சமஸ்கிருத மொழித் திணிப்பு அதற்கு ஏற்ற சமூக ஊடகமாக அமைந்தது.

தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய அயல் இனத்து அரசர்களின் துணையோடு ஆரிய மேலாண்மை நிறுவப்பட்ட போது தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழிக் கலப்பு திட்டமிட்ட முறையில் ஏற்படுத்தப்பட்டது.தமிழ் மண்ணின் கடவுளர்களும், கோயில்களும், கோயில் அமைந்த ஊர்களும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. கடவுளர்களின் பெயர் சம்ஸ்கிருத மயமானதால் அக்கடவுளர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருத மயமானது. இது ஒரு சமூக அமைப்பு முறையாகவே நிலைபெற்ற போது அடுத்த்தடுத்த தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழி மயமான பெயர்கள் சூட்டுவதே நிலைத்துப் போனது. இன அடையாளம் சிதைந்துப் போனது.

ஆரிய – பிராமண மேலாதிக்கம் அரசியலில் மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்தின் அக வாழ்க்கை முழுவதும் நிறுவப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை கோயில் குடமுழுக்கிலிருந்து அன்றாட வழிபாடுவரை அனைத்தும் சமஸ்கிருத மயமாவதன் வழியாக இந்த மேலாண்மை நிலைகொண்டது.

அறிவியல் சார்ந்த அற வழிப்பட்ட தமிழர் சடங்குகள் மறைக்கப்பட்டன. சைவமும், வைணவமும் இவைக் கடந்த வழிபாட்டு முறைகளும் வேதமத மேலாண்மைக்கு உள்ளாயின. தேவாரம் திருவாசகம் , போன்ற திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும், தமிழிசையும் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள உயிர்க் காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால்தான் , தமிழ் மொழிக் காப்பு போராட்டமும், இனக்காப்பு போராட்டமும், சமூக சமத்துவப் போராட்டமும் இணைந்தே வரலாறு நெடுகிலும் நடந்துவருகின்றன.

ஆரிய இனவாதத்தின் இன்றைய நவீன வடிவம் இந்தியத் தேசியம் ஆகும். இந்த இந்தியத் தேசியத்தின் தீவிர வடிவமே இந்துத்துவம் ஆகும். எனவே, இந்துத்துவ வெறிக்கட்சியான பாரதிய சனதாவின் ஆட்சி கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி ஆரிய மேலாதிக்கத்தை ஐயத்திற்கு இடமின்றி நிலை நாட்டவும், வருண சாதிக் கொடுமையை நிலைப்படுத்தவும் துறைதோறும் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

இந்த வரிசையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன் மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது என முடிவு செய்துள்ளது. தமிழர்கள் மீது சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தையும், ஆரிய இன மேலாண்மையையும் திணிக்கும் இச் செயல் தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும் கேடான நோக்கமும் கொண்டது.

உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை ஆகும்.
சமஸ்கிருத வாரம் என பா.ச.க அரசு அறிவித்துள்ள 2014 ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய உள்ள நாட்களில் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் நடத்துவது என த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

இதனையொட்டி ஆகஸ்ட்டு 7 முதல் 13 வரை உள்ள வாரத்தில் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கருத்தரங்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், துண்டறிக்கைப் பரப்புரைகள் என பலவடிவங்களில் சமஸ்கிருத எதிர்ப்பு வார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்:

காசா எரிகிறது! இசுரேலே பாலத்தீனத்திலிருந்து வெளியேறு!


 காசா எரிகிறது! இசுரேலே 
பாலத்தீனத்திலிருந்து வெளியேறு! 



உலகத்தின் கண் முன்னே பாலத்தீனம் மீண்டும் பிணக்காடாக மாறி வருகிறது. காசா பிரதேசத்தில் தெருக்கள் எங்கும் கொப்பளிக்கும் குருதி ஆறு ஓடுகிறது.

கடந்த சூலை 8-ஆம் நாள் தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக சுமார் 360 சதுர கிலோ மீட்டர் சிறிய பரப்புக்குள் யூத வெறி இசுரேலின் இடைவிடாத குண்டு மழைத் தாக்குதலில் பாலத்தீனம் எரிகிறது. வழக்கம் போல் ஐநா மன்றமும் அனைத்துலக சமூகமும் போர் நிறுத்தம் வலியுறுத்தி வெற்றுப் புலம்பல் புலம்புகின்றன.

ஹமாஸ் அமைப்பினர் 3 இசுரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்றதற்கு பதில் தாக்குதல் இது என்று இசுரேல் அரசு கூறினாலும் உண்மையில் அவ்வரசின் தாக்குதல் இலக்காக மசூதிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் ஆகியவையே உள்ளன.

இரமலான் மாதத்தின் இப்தார் நோன்பு உணவை உண்டுக்கொண்டிருந்த 54 வயது பெண்மணி ஒருவர் கையில் கரண்டியோடு குருதி வெள்ளத்தில் பிணமாகச் சார்ய்ந்தார். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையும், மருத்துவமனையில் கொல்லப்படுகிறது. இனக்கொலையாளிகள் வழக்கமாகச் சொல்லும் பொய்க்காரணத்தையே இந்தக் கண்மூடித் தாக்குதலுக்குக் காரணமாக இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறுகிறார். “ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதி பாலத்தீன மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திகிறார்கள்” என்பதே அது.

“மசூதி, குடியிருப்பு, மருத்துவமனை ஆகியவற்றில் பதுங்கிக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் இசுரேல் மீது இராக்கெட் தாக்குதல் நடத்துவதாலேயே நாங்கள் அவற்றின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறோம்” என்று கூறும் இசுரேல் அரசு இவ்விடங்களின் மீது வீசுவது தடைச் செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளாகும்.

கடந்த 2006 இறுதியில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீன் மக்களின் பெருபான்மை வாக்குகள் பெற்று பாலத்தீன நிர்வாக மன்றம் என்ற இடைக்கால ஆட்சிப் பகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஹமாஸ் அமைப்பினர். இவர்களைத் தான் பயங்கரவாதி என இசுரேல் அரசு கூறுகிறது.

இத்தேர்தல் முடிவு வந்த நாளிலிருந்தே காசா பகுதியின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உணவும். மருந்தும். சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களும் கிடைக்காமல் அப்பகுதி பாலத்தீனர்கள் கடும் நெருக்கடியில தத்தளித்து வருகின்றனர். உலகின் மிக மிக வறுமைப்பட்டப் பிரதேசமாக காசா அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியின் மீது தான் கடந்த ஒரு வாரத்திற்குள் 1000க்கும் மேற்பட்ட முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி வான் தாக்குதல் நடத்தியுள்ளது இசுரேல் யூத வெறி அரசு.

இடிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கூரையின் மீது வெள்ளைக் கொடியை அசைத்தவாறு நின்றிருந்த ஒரு பாலத்தீன குடும்பத்தினர் மீது கடந்த 12.07.2014 அன்று இசுரேல் நடத்திய வான் படைத் தாக்குதலில் அக்குடும்பத்தினர் 17 பேரும் மாண்டனர். உண்மையில் இப்போதைய இந்தத் தாக்குதலுக்குக் காரணம் இசுரேல் இளைஞர்கள் கடத்தப்பட்டது அல்ல.

கடந்த 7 ஆண்டுகளாக பிளவுபட்டிருந்த ஹமாஸ் அமைப்பினரும் பாலஸ்தீன விடுதலை அமைப்பினரும் (பி.எல்.ஓ) ஒன்றிணைவது என முடிவெடுத்து கடந்த 2014 ஏப்ரல் 23 அன்று ஒர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும், மேற்குக் கரைப் பகுதியில் பி.எல்.ஓ அமைப்பினரும் பிரிந்து நிர்வாகம் நடத்தி வந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்தப் பாலத்தீனர்களுக்கும் ஒன்றுப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை ஹமாசும் பி.எல்.ஓ-வும் உருவாக்க இவ்வொப்பந்தத்தில் ஒத்துக்கொண்டனர். 6 மாதத்திற்குள் பாலத்தீன நிர்வாக மன்றத்திற்குப் புதிதாக தோ;தல் நடத்தவும் ஏற்றுக்கொண்டனர்.

இசுரேல் - வட அமெரிக்க வல்லரசு கையடக்க ஆளாக இருந்த பி.எல்.ஓ தலைவர் அப்பாஸ் ஹமாஸ் போராளி அமைப்போடு இவ்வாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டது ஆக்கிரமப்பாளர்களின் ஆதிக்க வெறித் திட்டத்தில் மண்ணைப் போட்டது.

இதில் ஆத்திரமுற்ற ஜியோனிய இசுரேல் அரசு அன்று இரவே (ஏப்ரல் 24) காசா மீது வான் தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த இனக்கொலைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதுவரை 160 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது, இசுரேல் அரசு. பல்லாயிரக்கணக்கானோர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத வகையில் கொடுங்காயம் அடைந்துள்ளனர். தொகைதொகையாக வடக்கு காசா பகுதியை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனா;.

ஐநா மன்றத்தில் உறுப்பு வகிக்கும் நாடுகளில் 115 நாடுகளுக்கும் மேற்பட்டு பாலத்தீனப் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என அங்கீகரித்துள்ளன. முழு உறுப்பு நாடு என்ற நிலை இல்லா விட்டாலும் வாக்களிக்கும் உரிமையில்லாத உறுப்பு நாடாக பாலத்தீனம் ஐநா மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காசா, மேற்குக் கரை, கோலன் குன்று ஆகிய பாலத்தீன தாயகப்பகுதிகளை இசுரேலிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று ஐநா மன்றம் வரையறுக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலத்தீனத்திற்கு துணைத் தூதரகங்கள் உண்டு. அப்படியிருந்தும் மீண்டும், மீண்டும் சியோனிய இசுரேல் ஆண்டு தவறாமல் பாலத்தீனத்தின் மீது இனக்கொலைத் தாக்குதல் நடத்துவது இசுரேலின் தனி வலுவினால் அல்ல.

இசுரேல் எவ்வளவு முறை பன்னாட்டுச் சட்டங்களை மீறினாலும் அவை அனைத்திற்கும் முட்டுக் கொடுத்து வரும் பின்னணி பலம் வட அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். வட அமெரிக்க வல்லரசின் துணிச்சலில் தான் இசுரேல் தனது ஆக்கிரமிப்புப் போரை எந்த கேள்வியுமின்றி தொடர்கிறது. உண்மையில் இசுரேல் – வட அமெரிக்க அச்சு இணைந்து நடத்தும் ஆக்கிரமிப்பு தான் இந்த பாலத்தீன ஆக்கிரமிப்பு.

மத்தியக் கிழக்கில் உள்ள எண்ணெய் வளத்தை ஆதிக்கம் செய்ய மேற்குலக ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது இசுரேல் நாடு. ஆயினும் யூத இனத்திற்கு உரிய நாடாக இசுரேல் அமைந்திருப்பதில் யாருக்கும் எதிர்ப்பில்லை. பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் யாசர் அராபத் அவர்களே “இசுரேல் என்பது ஓர் வரலாற்று உண்மையாகி விட்டது. இசுரேலும், பாலத்தீனமும் அண்டை நாடுகளாக இருக்கலாம்” என்று ஏற்றுக்கொண்டார்.

இசுரேல் செய்யும் அனைத்து இனக்கொலை நடவடிக்கைக்கும் அரணாக வட அமெரிக்க வல்லரசு நிற்பதற்கு அரபு உலகத்தின் எண்ணெய் வளம் மட்டும் காரணமல்ல, வட அமெரிக்காவில் யூத இனம் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.

குடியரசுக் கட்சி, சனநாயக கட்சி, என எந்தக் கட்சி வட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சி யூத இன செல்வாக்கில் நடப்பது தான் வட அமெரிக்காவின் வழமை. ஒபாமாவும், அதற்கு விதிவிலக்கானவா; அல்ல. பொருளியல், கருத்தியல், அதிகாரவர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி வட அமெரிக்காவில் மிக வலுவானது.

யூத முதலாளிகள் படைக்கருவி உற்பத்தியிலும், வங்கித் துறையிலும் வலுவானவர்கள் ஆவர். டைம்ஸ் வார்னர், வால்ட்டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏபிசி, என்பிசி, அசோசியேட்டட் பிரஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், நியூஸ் வீக் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணியாற்றும் முதன்மைச் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலானோர் யூதர்களே. ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது.

சியோனிய அதிகார மையம் (Zionist Power Configuration - ZPC) என்ற அமைப்பு திட்டமிட்ட முறையில் வட அமெரிக்க அதிகார வர்க்கத்தை யூத மயமாக உருவாக்கி வருகிறது. வட அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு (American Israel Public Affairs Committee -AIPSC) என்ற அமைப்பு வட அமெரிக்க அரசியலாளர்களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான நிறுவனமாகும். ஒபாமாவும், அவரது சனநாயகக் கட்சியும் இதில் அடங்கும்.

இவ்வாறு வட அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க ஆளும் சக்தி யூத இனத்தினர் ஆவர். இந்த யூத இணைப்புத் தான் இசுரேல் - வட அமெரிக்க அச்சின் அடிப்படையாகும்.

சனநாயகம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி என வாய் உபதேசம் செய்தாலும் எந்த மனித மாண்புகளையும் மதிக்காத அரசு வட அமெரிக்க வல்லரசு ஆகும். தேச அரசு, சனநாயக ஆட்சி முறை போன்ற எதுவும் இல்லாத பழைய மன்னர் ஆட்சிக் காலத்தை விட மிக மோசமான, நெறியற்றப் பேரரசாக (Empire) வட அமெரிக்கா செயல்படுகிறது.

அதனால் தான் சட்டப்படி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் ஆட்சியை வட அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. அதாவது தேர்தல் நடத்தி மக்கள் வாக்கு போடலாம், ஆனால் அது வட அமெரிக்க அரசு விரும்புவர்களுக்கு அளிக்கும் வாக்காக இருக்க வேண்டும் என்பது தான் வட அமெரிக்க முத்திரை சனநாயகம்.

ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டு உலகெங்கும் உள்ள தேச அரசுகளை ஆக்கிரமிக்கும் பேரரசாக விளங்கும் வட அமெரிக்க வல்லரசு தான் கடந்த 60 ஆண்டுகளாக பாலத்தீனத்தில் குருதிக் கொட்டுவதற்கு வலுவானக் காரணமாகும். இயற்கை வளத்தை சூறையாடும் பொருளியல் நோக்கமும், யூத இன இணைப்பும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மனித பேரழிவு இது.

அவ்வப்போது கோருவது போல் போர் நிறுத்தம் கோருவதால் மட்டும் சிக்கல் தீர்ந்துவிடாது. இது தீர்வதற்கு உடனடித்தேவை போர் நிறுத்தம். இறுதித் தீர்வு பாலத்தீன விடுதலை.

இந்த நிரந்தர தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதே உலெங்கும் உள்ள மனித நேயர்களின் கடமை. ஏனெனில் மனித சுதந்திரம் என்பது அதன் குறிப்பான வடிவத்தில் தேசிய இன சுதந்திரமே ஆகும்.

இந்திய அரசு ஆக்கிரமிப்பாளன் இசுரேலையும், ஆக்கிரமிக்கப்பட்டப் பாலத்தீனத்தையும் சமத் தொலைவில் வைத்துப் பார்ப்பதும், இச்சிக்கல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மறுப்பதும் அதன் வெளிப்படையான, வட அமெரிக்கச் சார்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்திய அரசு, இசுரேலின் ஆக்கிரமிப்பை உறுதியாகக் கண்டிப்பதுடன் காசா மீதான வான்தாக்குதல்களையும், தரைவழி ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த பன்னாட்டு அரங்கத்தில் குரல் எழுப்ப வேண்டும். இசுரேலுடனான பொருளியல் உறவை நிறுத்தி வைக்க வேண்டும். பாலஸ்தீன விடுதலைக்கு உரிய பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்: