கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ப.சிதம்பரத்தின் பொய்முகம் - தோழர் கி.வெங்கட்ராமன்

எதிர்காலத்தை எரித்து, நிகழ்காலத்தைநிலைநிறுத்தும் முயற்சி - இது தான்இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம்2008-09.உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி, நடுத்தரவர்க்கத்திற்கு வருமானவரிச் சலுகை ஆகியஇரண்டை மட்டும் மையப்படுத்தியே இந்த வரவு –செலவுத் திட்டம் விவாதிக்கப்படுகிறது.இலட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்களின்தற்கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உழவர்அமைப்புகளின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி திட்டத்தைப.சிதம்பரம் அறிவித்திருக்கிறார்.இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல.அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு,குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடிசெய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு,எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும்.தமிழ்நாட்டில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில்கடன் வாங்கியிருக்கிற உழவர்களில் பெரும்பாலோர்5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் தான்.ஏனெனில் வங்கி மேலாளர்கள் சிறு விவசாயிகளைநம்பி கடன் தருவதில்லை. எனவே தமிழ்நாட்டைப்பொறுத்த அளவில் ப.சிதம்பரம் அறிவித்துள்ள கடன்தள்ளுபடி பெரும்பாலோருக்கு பயன் தராது.மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிகஎண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள்.விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின்தலைவர் கிN~hர் திவாரி, உழவர் தற்கொலைமிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன்தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறுஅல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்குமிகுதி என்கிறார்.இரண்டு எக்டேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல்வட்டி இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள் வழங்கி வருகின்றன. கண்துடைப்பான இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தின் போலித்தனத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் கூக்குரல்கள் எழுந்தன. ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த இராகுல் காந்தியை வைத்து  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தானே இப்பிரச்சினையை
எழுப்பியது. பதிலளித்த ப.சிதம்பரம் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நில அளவுகள் குறித்தும், நிவாரணம் பெறுவதற்கு
உள்ள தகுதிக் கால வரையறைகள் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பொத்தாம் பொதுவில் அறிவித்தார். துல்லியமான அறிவிப்பு இனி வந்தால் தான் அது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியும்.
 
இதற்கான நிதி ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்படவில்லை. இது பற்றி கடுமையான விவாதங்கள் எழுந்ததற்குப் பிறகு இந்த நிதியாண்டிலிருந்து நான்கு ஆண்டுத் தவணையில் வங்கி களுக்கு ரூ.60,000 கோடி கொடுத்து ஈடு செய்யப்படும் என அறிவித்தார். இது சட்டவலுவில்லாத அறிவிப்பு. ஏனெனில் வரும் நான்கு நிதியாண்டு களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைப்பதற்கு ப.சிதம்பரத்திற்கும் அதிகாரம் கிடையாது; இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்திற்கும் உரிமை கிடையாது. சேம வங்கியின் (ரிசர்வ் வங்கி) மூலமாக உறுதியான நிதி ஏற்பாடு அளிக்கப்பட்டாலே தவிர இதற்கு  உத்தரவாதம் கிடையாது.
 
உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டன. மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி
ஆக்கிவிட்டன. இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக்
கூட அசைக்கவில்லை சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து,
கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை.
நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப்  போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்-ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத் தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14
விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம்
கோடி கடன் வாங்க உள்ளார்கள்.
 
அரசின் வரவு – செலவுத் திட்ட ஆவணத்தில் சென்ற ஆண்டு
வரை கடன் வரவை முழுமையாக காட்டினார்கள். ஆனால் இந்த
வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அது முழுமையாகக் காட்டப்பட
வில்லை. மாறாக இந்த ஆவணத்தின் இணைப்பில்
வௌ;வேறு வகை கடன் ஏற்பாடுகள் காட்டப்படுகின்றன.
"சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" என்ற வழியில் திரட்டப்படும் கடன்
இந்த ஆண்டு ரூ.13,958 கோடி. இது சென்ற ஆண்டை விட மூன்று
மடங்கு அதிகம். இது தவிர எண்ணெய் நிறுவனக்கடன்
பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன்
பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு.
இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை.
ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை
இதைவிடக் கூடுதலாகும். வேளாண் கடன் தள்ளுபடிக்கு
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி, அதே போல்
நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி
தரவேண்டிய ஊதிய உயர்வான ரூ.20,000 கோடி ஆகியவையும்
சேர்த்தால் பற்றாக்குறை இன்னும் அதிகமாகும்.
இவ்வளவு பற்றாக் குறையையும் எப்படி ஈடுகட்டப்
போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப்
பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக்
கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும், கணக்கை மீறி ரூபாய்த்
தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை
உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான்
இதனால் உண்டாகும். வரவு – செலவுத் திட்டம் முன்
வைக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னால் பெட்ரோல்,
டீசல் விலை உயர்த்தபட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொருளாதாரத்தை முன்னேற்றுவது  என்பதற்கு பதிலாக தனியார் நுகர்வின் மூலமாகவும், கடன் வாங்கி கட்டடங்கள் எழுப்பப் படுவதன் மூலமாகவும் ஏற்படும் வளாச்சியையே வளர்ச்சி முறையாக மன்மோகன் சிங் அரசு கொண்டுள்ளது. வருமானவரி சலுகைகள் ஆண்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப் படுவதன் நோக்கம் சேமிப்பை  அதிகப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நுகர்வை து}ண்டி அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்குவது என்பது தான் தனது நோக்கம் என்பதை பட்ஜெட் உரையிலேயே ப.சிதம்பரம்
குறிப்பிட்டார்.
 
இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள் மற்றும் பிற மின்னனு நுகர்வுப் பொருட்கள் மீதான வரி ஏற்கெனவே இருந்ததை விட 4%குறைக்கப் பட்டுள்ளதன் நோக்கம் இது தான். ஆனால் ஏழை எளிய
மக்கள் பயன்பெறும் பொது வழங்கல் திட்டத்திற்கு தேவைப்படும் உணவு மானியத்தை உரிய அளவு உயர்த்தவில்லை. சென்ற ஆண்டை விட 1,100 கோடி ரூபாய் தான் உயர்த்தப் பட்டுள்ளது. பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் உண்மை அளவில் உணவு மானியம் உயர்த்தப்படவில்லை என்பது புலனாகும். வேளாண் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் முன் வைக்காத இந்த வரவு – செலவுத் திட்டம் இந்த நிதியாண்டில் கோதுமை, அரிசி போன்றவை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என கூறுகிறது. இந்த உணவு இறக்குமதிக்கு மட்டும் நிதி ஒதுக்கிட போதுமான உபரி உள்ளதாக ப.சிதம்பரம் கூறுகிறார்.
மறுபுறம் இராணுவச் செலவிற்கு சென்ற ஆண்டை விட
10 விழுக்காடு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,05,600 கோடி ரூபாய் படைச்செலவிற்கு என்று சொல்லப்பட்டாலும் எல்லைப் பாதுகாப்புப் படை, வேறு சில சிறப்பு படை செலவு களையும் சேர்த்தால் இது 1,40,000 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இராணுவத் திற்கான ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் இராணுவமயமாகி வருவதன் அடையாளம் இது.
 
சேவைத்துறையைச் சார்ந்ததாக இந்தியப் பொருளியல் மாற்றப்பட்டு வருவதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். சேவைத்துறையைச் சார்ந்த பொருளியல் என்பது பெரிதும் அமெரிக்கச் சந்தையை சார்ந்
திருக்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரமோ நிலைகுலைந்து
கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 300 கோடி டாலர் (ரூ.12,000
கோடி) கடன் வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது
அமெரிக்க வல்லரசு. அந்நாட்டின் மிகப்பெரிய வங்கியான பேர்ஸ்
ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns Bank) வங்கி திவாலாகும் நிலைக்கு வந்து 'ஜேபி மார்கன்' நிறுவனத்தால் 93 விழுக்காடு கழிவில் ஜப்தி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் தீராத நோயில் வீழ்ந்து கிடப்பதன் அடையாளம் இது. இந்தத் தொற்று நோய்
இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. சேவைத்துறை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் டாலர் மதிப்பு வீழ்ந்ததன் விளைவாக அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி பாதிப்படைந்தது.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக
ஏற்றுமதி சார்ந்த இந்தியத் தொழில்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2 இலட்சம் வேலை இழக்கப்பட்டுள்ளது
என்றும், திருப்பூரில் மட்டும் 80,000 வேலை இழப்பு நேர்ந்துள்ளது
என்றும் இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் 2008 மார்ச் 4-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அறிவித்தது கவனங்கொள்ளத் தக்கது. ப.சிதம்பரத்தின் வரவு - செலவுத் திட்டம் இந்த வேலை
இழப்பை சரி செய்வதற்குக் கூட எந்த உருப்படியான முயற்சி
யையும் முன் வைக்கவில்லை. மருத்துவ நலத் திட்டங்களுக்குக் கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு நிதி அதிகமாக  துக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார்.
 
தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Multispeaciality hospitals) ஐந்தாண்டு களுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக் கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை நிறுவிக் கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கெனவே நோயாளிகளைக் கொள்ளை யடிப்பது நாடறிந்த உண்மை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திர விடுதிகள் கட்டும் முதலாளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார்.
 
கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate}ற்றுக்கு நுறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5 விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006- 2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத் தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன. (ASSOCHAM அறிக்கை -2007) வருமானவரி, மதிப்புக் கூட்டுவரி, உற்பத்திவரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக் குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமான வரியைக் குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை.
 
கம்பெனி வருமானவரி, அதற்கான துணை வரி ஆகியவற்றில் மாநிலங்களுக்கு எந்தப் பங்குத் தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும் மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத் திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே. பொருளியல் வளர்ச்சி (புனுP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று கூறிக்கொண்டிரந்தனர். மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத உலகமய வரவு செலவுத் திட்டம் ஆகும்

0 கருத்துகள்:

தில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்

கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் பாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வு.

சிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு
தனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று
சிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30  மணியளவில் கடலு}ர் சட்டப்
பணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்
ஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி
வழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி
முயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி  யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு  கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்
செயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை
மக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.
ஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்
ச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்
போராட்;டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.


மெய்யப்பனாரும் தமிழ்  காப்பணியின் வேறு சில நிர்வாகிகளும் இதற்கு   முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்
வ.சுப.மாணிக்கனார் அவர்கள்  தலைமையில் உலகறிந்த பல்வேறு
தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்
உணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை
மேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை
தீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா
நிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்
ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்
கொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.
குடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த "வேள்வித்
தீயில் வீழ்ந்து மாய்வோம்" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை
விடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி
"காலப்பூசையின்" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப
மிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்
குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்
காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்
விட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்
ஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்
அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்
அனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.
அர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி
செய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம் என்று காரணம்
கூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு
எதிராகவும் தீண்டாமை கடைபிடித்தனர்.
இக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு
தமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை
புரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்
வழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத
நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற
வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்
தோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து
வைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு
இக்கட்டுரையாளர் கேட்டுக்கொண்டார்.
ராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க
போராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட
கட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை
ம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட
முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்
இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த
12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்
குறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).

ம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்
மீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை
இணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு
தீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த
வழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி
முன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-
4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.
தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட
ஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற
"வகையறாக் கோயில்"- Dinominational temple  என்ற  வாதத்தை இவ்வாணை தெளிவாக
மறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது "ஏ.எஸ்.103
மற்றும் 159ஃ1888" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்டு, முத்துசாமி
ஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்
அளித்தத் தீர்ப்பு "சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்
காலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை
மறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து
என்பதற்கு ஆதாரமே கிடையாது" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :
17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்
ஆகியோர் அடங்கிய ஆயமும் "இக்கோயில் தீட்சிதர்களின்
சொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்
கீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்
இல்லை" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான
தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச
நீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு
நடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்
கீழ் வைத்திருக்கிறார்கள்.
சைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு
இடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்
காசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை
மறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்
என்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.
ஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்
தொன்மையானவையாகவும் நினைவிற்கு எட்டாதவையாகவும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்
இருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான
திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.
சுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று
அதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்
என்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்
அல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்
படையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்
காரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல
ஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே
தீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்
வழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை
காட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க
முடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்காட்டி ஆறுமுகசாமியோ
அல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்
பாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என
வலியுறுத்தியது.


ஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய
அறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.
29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்
ப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு
அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு
பாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு
செல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு
இடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே
நின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்
பாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்
செய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக
சக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்
கொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது
காவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34
பேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது
செய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்
தொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து
பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை
நாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர்.
06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி தேவாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.
ஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று
சிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம்  எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்
படிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்
தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்
சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்
பாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்
ஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த
வகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்
பிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்
கோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).
அரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன
நேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே
எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,
சடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை
சடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்
குழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. நடராசர்
கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்
கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்
செயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்
அறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்
எல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.
அரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்
கேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்
கோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்
தாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு  வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.

0 கருத்துகள்: