கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

வேளாண்மை காக்க உழவர் வருவாய் ஆணையம்


வேளாண்மை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. இந்திய, தமிழக அரசுகளின் வேளாண் கொள்கை திட்டமிட்ட முறையில், உழவர்களை வேளாண்மையிலிருந்தும் நிலத்திலிருந்தும் வெளியேற்றுவதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டு, வேளாண்மையை பாதுகாக்க மாற்றுக் கோரிக்கைகளை உருவாக்கி உழவர் இயக்கங்களும் மக்களும் போராடா விட்டால், மிகப்பெரியப் பேரழிவு நேரும்.

வேளாண்மையைப் பாதுகாப்பது வெறும் உழவர்களின் பொருளியல் கோரிக்கை மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்முறையை, தமிழர் தாயகத்தை பாதுகாக்க இது முதன்மையான தேவையாகும்.

தமிழ்நாட்டின் சாகுபடிப் பரப்பு 1990 ஆம் ஆண்டை ஒப்பிட 1 கோடியே 68 இலட்சம் ஏக்கரிலிருந்து 2008ஆம் ஆண்டு 1 கோடியே 28 இலட்சம் ஏக்கராக தேய்ந்துவிட்டது. காவிரிப் பாசன மாவட்டங்களில் மட்டும் சாகுபடிப் பரப்பு 21.6 இலட்சம் ஏக்கரிலிருந்து, வெறும் 14 இலட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

வேளாண்மையை விட்டுவிலகும் போக்கு உழவர்களிடையே அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. உத்திரவாதமான தண்ணீர் இன்மை, உழவுத் தொழிலுக்கு குறைந்த வட்டியில் அரசுகள் கடன் வழங்காமை, இடுபொருள் விலையேற்றம், வேளாண் சந்தை இழப்பு, வேளாண் விளைபொருளுக்கு இலாப விலை கிடைக்காமை, வாழ்க்கைச் செலவு தாறுமாறாக உயர்தல், அதிகரித்து வரும் நகர்மய வாழ்முறை போன்றவையே இதற்குக் காரணம்.

உழவர்களின் சராசரி மாத வருமானம் தமிழ்நாட்டில் ரூ. 2072 என்று அர சின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடன்பட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையில், ஆந்திராவுக்கு அடுத்து தமிழகம் தான் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், உழவர்களின் வாழ்வைப் பாதுகாக்க சந்தைப் பாதுகாப்பு, இலாப விலை, வேளாண் மானியம், வருவாய் உறுதிப்பாடு என பலமுனை முயற்சிகள் தேவைப்படுகின்றன.

நுகர்வோர் விலைவாசிக் குறியீடு ஆகஸ்ட் 2000க்கும் ஆகஸ்ட் 2009க்கும் இடையே 25% உயர்ந்துள்ளது. யூரியா உள்ளிட்ட இடுபொருள்கள் விலை 25% உயர்ந்துள்ளது. ஆள்பற்றாக்குறைக் காரணமாக உழவுத் தொழிலாளர்களின் கூலி 300% உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை 86% மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியம் 150%-ம், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 500%-ம், நீதிபதிகள் சம்பளம் 400%-ம் உயர்ந்துள்ளன. தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைப் பேர்வழிகள்e">, ஆன்லைன் வணிகர ்கள் ஆகியோரின் வருமானம் பன்மடங்குப் பெருகிவிட்டது.

உழவர்களுக்கு எதிராக அரசு கடைபிடிக்கும் பாரபட்சத்தை இந்த விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வேளாண் விளை பொருள்களையும், தொழில் உற்பத்திப் பொருட்களையும் பண்டமாற்று வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால், வேளாண் விளை பொருள்கள் தங்கள் வாங்கும் சக்தியை 53% இழந்துள்ளன.

தனி வேளாண் மண்டலமே சந்தைப் பாதுகாப்பு

வேளாண்மையை ஒரு இலாபகரமான தொழிலாக மாற்றாமல் அதனைப் பாதுகாக்க முடியாது.

இதற்கு முதன்மையான தேவை சந்தைப் பாதுகாப்பு.

உலகமயமும் இந்தியமயமும் இணைந்து தமிழ்நாட்டு வேளாண் சந்தையை நசுக்குகின்றன. கர்நாடக அரிசியும், ஆந்திரா பொன்னியும், பஞ்சாப், அரியானா அரிசியும் தமிழ்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. இது போதாதென்று அரசின் திறந்தப் பொருளாதாரக் கொள்கை தாய்லாந்து அரிசியை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர வழிவகுக்கிறது. எனவே, தமிழ்நாட்டு நெல் உழவர்களுக்கு தமிழ்நாடு சந்தையாக இல்லை.

மற்றொருபுறம், தமிழக அரசு அறிவித்துள்ள 1 ரூபாய் அரிசித் திட்டம் மூலம் பெருமளவு வெளிமாநில அரிசி ‘மத்தியத் தொகுப்பு’ என்ற பெயரால் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கிறது. பிற வேளாண் உற்பத்தி பொருள்களின் நிலையும் இது போன்றது தான்.

தமிழ்த் தேச வேளாண் சந்தையை தற்காத்துக் கொள்ள ‘தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவி’ என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் தங்குதடையின்றி வேளாண் விளைபொருட்கள் நுழைவதை கட்டுக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறு அறிவிக்கப்படும் தனி வேளாண் மண்டலம் செயல்பட அதற்கான நிர்வாகப் பொறியமைவுகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் அரிசி, பருப்பு, மிளகாய், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களின் தேவை என்ன, தமிழ்நாட்டுக்குள் அவற்றின் உற்பத்தி என்ன என்பதை கணக்கிட்டு தமிழ்நாட்டுக்குள் விளையும் வேளாண் விளைபொருட்களை முன்னுரிமை கொடுத்து அரசும் தனியாரும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக வேண்டும். தமிழகத்தில் விளையும் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்த பிறகு தான் அதற்கு மேல் உள்ளத் தேவைகளுக்கு வெளி வேளாண் பொருட்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

இதனை திட்டமிட்ட முறையில் கண்காணிக்க, தனி வேளாண் மண்டல ஆணையம் நிறுவப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் உழவர்கள், நுகர்வோர் பேராளர்களும், அரசு அதிகாரிகளும் இடம்பெற வேண்டும்.

தமிழக அரசு தங்களது நியாய விலைக் கடைக்கு உணவு மானியம் பெறுவதை பணமாகப் பெற்று தமிழ்நாட்டிற்குள் விளையும் பொருட்களை முன்னுரிமை அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டுமே அன்றி வேளாண் மானியத்தை தானியமாகப் பெறக் கூடாது. இவ்வாறு தானியமாகப் பெறுவது வெளி மாநில உணவுதானியங்கள் தமிழ்நாட்டிற்குள் படையெடுக்க வழி ஏற்படுத்துகிறது.

இலாப விலை

வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். குண்டூசி முதல் எல்லா தொழில் உற்பத்திப் பொருட்களுக்கும் அவரவர்களே விலையை நிர்ணயித்து உற்பத்திச் செலவைவிட பலமடங்கு இலாபம் பெறுவதை உறுதி செய்து கொள்கின்றனர். ஆனால், வேளாண் விளை பொருட்களுக்கு மட்டும் கட்டுப்படியான விலை கொடுத்தால் போதும் என்று அரசியலாளர்கள் வரம்பு கட்டுகிறார்கள்.

இந்திய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலை(குறைந்தபட்ச ஆதரவு விலை) தொழில்முறைக் கணக்கீடுகளுக்குத் தொடர்பேதுமில்லாமல் அறிவியலுக்கு ஒவ்வாத வகையிலேயே கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்திய அரசின் வேளாண் விலைநிர்ணய ஆணையம் உற்பத்திச் செலவை கணக்கிடும் போது வேளாண் நிலத்திற்கான வாடகை, வளத் தேய்மானம், உழவர்களின் குடும்ப உழைப்பு, நுகர்வுப் பொருள் விலைஉயர்வு ஆகியவற்றுக்கு உரிய பணமதிப்பீடு வழங்கி அவற்றை உற்பத்தி செலவில் சேர்ப்பதேயில்லை. இவ்வாறு கணக்கிடப்படும் உற்பத்திச் செலவுக்கு மேல் 10 அல்லது 15 விழுக்காடு சேர்த்து, கொள்முதல் விலை அறிவிக்கப்படும்.

உழவுத்தொழிலை இரண்டாம்பட்சமாகப் புறந்தள்ளும் இந்த நகர்ப்புற -- முதலாளிய அணுகுமுறை அடியோடு மாற்றப்பட வேண்டும். நுகர்பொருள் உற்பத்தித் துறையில், தொழில்நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு எவ்வளவு இலாபம் வைத்து விலை நிர்ணயிக்கிறார்களோ கிட்டத்தட்ட அதே அளவில் வேளாண் விளை பொருட்களுக்கும் இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ‘தேசிய உழவர் ஆணையம்’ கூட தனது பரிந்துரையில் “குறைந்தது 50% இலாபமாவது கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை தீர்மானிக்கப்பட வேண்டும்’’ என அறிவித்திருப்பது, கவனங் கொள்ளத்தக்கது.

அனைத்து வேளாண் விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் வேண்டும்.

உரிய உணவு மானியம் பெறாமல் அரசு அறிவிக்கும் 1 ரூபாய் அரிசித்திட்டம் நெல்கொள்முதல் விலையை செயற்கையாக அழுத்தி வைக்கவே பயன்படுகிறது. மற்றபடி வெளிச்சந்தை அரிசிவிலையை கட்டுக்குள் நிறுத்த இந்த 1 ரூபாய் அரிசித்திட்டம் பயன்படவில்லை என்பது கண்கூடு. இணைய வர்த்தகம்(Online Trading), வருங்கால வர்த்தகம்(Future Trading) போன்றவை கோலோச்சும் தாராளமயப் பொருளியலில் உழவர்களும் நுகர்வோரும் ஒருசேர பிழியப்படுகிறார்கள் என்பதே கண்கண்ட உண்மை. தமிழ்நாட்டில் நிலவும் அரிசி, பருப்பு, காய்கறி விலையே இதற்குச் சான்று.

உழைப்பு மானியம்

வேளாண் பணி இல்லாத காலத்தில், கிராமப்புற உழவுத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதும் இல்லாமல் வாடக்கூடாது என்பதற்காக தொடர் போராட்டங் களுக்கிடையில் கொண்டு வரப்பட்டது தான் ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ (100 நாள் வேலைத்திட்டம்). இப்போது, இத்திட்டம் ஆண்டு முழுவதும் செயல்படுவதாக மாற்றியமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் வேட்டைக்கே திட்டமிட்டு இது செயல்படுத்தப்படுகின்றது.

மீண்டும் மீண்டும் மண் வேலைக்கே இத்திட்டப் பணிகள் திருப்பி விடப்படுவதால் வெட்டியக் குளத்தையே மீண்டும் வெட்டியதாக கணக்குக் காட்டுவதற்கும், போட்ட சாலையையே மீண்டும் போட்டதாக போலி ரசீதுகள் தயாரிக்கவும் எளிதாக இட்டுச் செல்கிறது. வேலை செய்யாமலும் அரைகுறையாக செய்து விட்டும், பெயரைப் பதிவு செய்து கொண்டபிறகு கூலி தர வாய்ப்புள்ளதால், அறிவிக்கப்பட்ட கூலியைவிட குறைவாகப் பெற்றுக் கொள்ள மக்களும் அணியமாகி விடுகின்றனர். வேளாண் சார் சிறுதொழில்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றை நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் அரசுப்பணம் அரசியல்வாதிகளின் கைக்கு மாறுவதற்கான ஓர் எளிய வழியாக மட்டுமே இது நடைமுறையில் உள்ளது.

மற்றொருபுறம், வேளாண் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறையை இது தீவிரப்படுத்துகிறது. உழவர்களுக்கும், உழவுத் தொழிலாளிகளுக்கும் இடையே கசப்புணர்வையும் ஏற்படுத்தவும் மோதல்களை உருவாக்கவும் ஆதிக்கவாதிகளுக்கு உற்றவழியாகத் திகழ்கிறது.

உழவுத் தொழிலுக்கு பயன்படும் வகையில் இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தை மாற்றியமைக்க ஆந்திரா உழவர் அமைப்புகள் மாற்று யோசனையைத் தெரிவித்துள்ளன. இது வரவேற்கத்தகுந்தது.

100 நாள் வேலைத்திட்டத்தில் இன்னும் சில நாட்கள் கூடுதலாகச் சேர்த்து அந்த வேலைநாட்களை வேளாண் பணிகளுக்கு திருப்பிவிடலாம். அதற்கான கூலித் தொகையை உழவர்களுக்கு பணமாக நேரில் வழங்கி உழவுத் தொழிலாளிகளை வைத்தோ, குடும்ப உழைப்பைப் பயன்படுத்தியோ எப்படிச் செய்தாலும் அதற்கு இத்தொகையை பயன்படுத்த வழிசெய்யலாம். தமிழகத்தில் நடப்பிலுள்ள உழவர் அடையாள அட்டை செம்மைப் படுத்தப்பட்டால் இவ்வாறு உழவர்களுக்கு தொகை வழங்குவது எளிதாக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு உழவர்களின் கூலிச் செலவில் ஒரு பகுதியை அரசே ஏற்பதை உழைப்பு மானியம் (Labour Subsidy) என்கிறோம்.

உழைப்பு மானியம் வழங்கி 100 நாள் வேலைத்திட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தால் ஆள்பற்றாக்குறையாலும் கட்டுப்படி ஆகாத கூலி உயர்வாலும் உழவுத் தொழில் நசிவதை தடுத்து நிறுத்த முடியும்.

உழவர் வருவாய் ஆணையம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் ஏராளமான மானியங்கள் வழங்கிதான் உழவுத்தொழிலைத் தூக்கி நிறுத்துகின்றனர். இதனை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்க உழவர் வருவாய் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வேளாண் அறிவியலாளர் முனைவர் தேவீந்தர் சர்மா முன்வைத்தார். இதனை ஏற்று ஆந்திராவிலுள்ள உழவர் இயக்கங்களும் இதற்கான கோரிக்கைகளை எழுப்பி போராடி வருகின்றன.

ஏராளமான வேளாண் மானியம் அளித்து வருவதால் தான் தொழில்வள நாடுகளின், வேளாண் விளைபொருட்கள் உலகச் சந்தையில் ஆக்கிரமிக்க முடிகின்றது. உழவுத் தொழிலும் இலாபகரமாக நடக்கிறது.

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் எலிசபெத் இராணி பெறுகிற வேளாண் மானியம் ஆண்டுக்கு 7 இலட்சத்து 67 ஆயிரம் பவுண்டு. அதாவது 6 கோடியே 15 இலட்சம் ரூபாய். பிரிட்டிஷ் இளவரசர் பெறுகிற ஆண்டு வேளாண் மானியம் 3 இலட்சம் பவுண்டு. அதாவது, 2 கோடியே 40 இலட்சம் ரூபாய்.

அமெரிக்க பருத்தி உற்பத்தியாளர்கள் 300 கோடி டாலர் (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்புள்ள பருத்தியை விளைவித்துக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக 390 கோடி டாலர் (17,550 கோடி ரூபாய்) வேளாண் மானியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அதாவது தங்கள் உற்பத்தியின் சந்தை விலையை விட இவர்கள் பெறுகிற மானியம் மட்டுமே அதை விடக் கூடுதலானது. அதற்கு மேல் இவர்களது விளைபொருள்களை விற்றுக் கிடைக்கிற தொகை வேறு.

இவ்வாறு வேளாண் நிறுவனங்களுக்கு அரசின் மானியம் நேரடி வருவாயாக வழங்கப்படுகிறது.

இதே அடிப்படையில் தான் இங்கும் உழவர் வருவாய் ஆணையம் கோருகிறோம். மேலை நாடுகளைப் போல் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலவுடைமை பெற்றுள்ள நிலமுதலாளிகள் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டின் சராசரி நிலவுடைமை 2 ஏக்கர் தான். 15 ஏக்கருக்கு கீழ் நிலம் உள்ளவர்கள் தான் இங்கு பெரும்பாலோர்.

ஆந்திரா உழவர் அமைப்புகள் வைத்துள்ள கோரிக்கையை கோட்பாட்டளவில் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும், தமிழ்நாட்டின் நிலைமையை கணக்கில் கொண்டு அதில் சில அடிப்படை மாறுதல்கள் செய்து கீழ்வரும் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூபாய் 12,000 வீதமும் உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூபாய் 12,000 -மும் அரசு நேரடி வருவாய் வழங்க வேண்டும்.

15 ஏக்கர் வரையிலும் உள்ள நிலவுடைமைக்கே இவ்வாறான நேரடி வருவாய் வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் 20 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவருக்கு 15 ஏக்கர் என்ற உச்சபட்ச அளவுக்கு மட்டுமே மேற்கண்ட கணக்கின்படி மேற்படி வருவாய் வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள 5 ஏக்கருக்கு இத்திட்டம் பொருந்தாது.

உழைக்கும் உழவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். அதாவது, ஒரு நிலவுடைமையாளரின் நிலத்தில், இன்னொருவர் குத்தகைக்கு சாகுபடி செய்தால், குத்தகை சாகுபடியாளருக்கு மட்டுமே இந்த நேரடி வருவாய் கிடைக்கும்.

தமிழகத்தில் 15 ஏக்கருக்கு கீழே உள்ள நிலவுடைமையின் மொத்தப் பரப்பு 1 கோடியே 45 இலட்சம் ஏக்கர் ஆகும். ஏக்கருக்கு 12,000 வீதம் இவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கினால் அதற்கு ஆகும் செலவு 17 ஆயிரத்து 400 கோடி ரூபாய்.

தமிழகத்தின் உழவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 87 இலட்சம். ஒருவருக்கு 12,000 வீதம் நேரடி வருவாய் வழங்கப்பட்டால் அதற்கு ஆகும் செலவு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 440 கோடி ரூபாய்.

ஆக மொத்தம் நாம் கோரும் நேரடி வருவாய் வழங்குவதன் மூலம் அரசுக்குச் செலவு ஆண்டுக்கு 27 ஆயிரத்து 840 கோடி ரூபாய். இந்தத் தொகை தமிழகத்திலுள்ள 1 கோடியே 30 இலட்சம் வேளாண்சார் மக்களுக்காக நாம் கேட்கிறோம்.

ஓய்வூதியர்களை சேர்த்து மொத்தமுள்ள 18 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியமாக வழங்கும் தொகை ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய். பல்லாயிரம் கோடி வருமானம் பெறும் தொழில் அதிபர்கள் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்திய அரசும், தமிழக அரசும் பல்லாயிரம் கோடி ரூபாயை மானியமாக திருப்பிவிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவற்றை ஒப்பிட, உழவர்களுக்கும் உழவுத் தொழிலாளர்களுக்கும் நாம் கோரும் நேரடி வருவாய் மிக எளியத் தொகையே ஆகும்.

இவ்வாறு நேரடி வருவாய் வழங்குவதை தீர்மானிக்க ‘உழவர் வருவாய் ஆணையம்’(Farmers Income Commission) அமைக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

பயிர்க்காப்பீடு

வேளாண்மை என்பது இயற்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஈடுகொடுத்து நடத்தப்படுகின்ற சூதாட்டமாக உள்ளது. இந்நிலையில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செம்மையுற செயல்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.

இப்போதுள்ள பயிர் காப்பீட்டு முறை, அறிவியலுக்கு ஒவ்வாத கணக்கீட்டு முறையில் இயங்குகிறது. ஒரு வருவாய்க் குறுவட்டம்(பிர்கா) முழுவதும் ஒற்றை அலகாக அடிப்படையில் வைக்கப்பட்டு இந்த இழப்பின் அளவு கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு குறுவட்டம் முழுமைக்கும் இயற்கை சீற்ற பாதிப்பு ஒரே அளவாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறில்லை. ஒரே நிலவுடைமையாளருக்கு அவருடைய 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் மட்டும் விளைச்சல் முழுமையாக பாழ்பட்டு மற்ற பகுதியில் பயிர்ச் சேதம் கருதத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். ஒரே நிலவுடைமையாளரையே ஒரு அலகாக கொள்ள முடியாத புறநிலை உள்ளது.

எனவே, இயற்கை சீற்றத்தால் பயிர்ச்சேதம் ஏற்படும்போது ஒவ்வொரு ஏக்கரையும் ஒரு அலகாக ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் இழப்புகளை கணக்கிட்டு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படாததால், ஒவ்வொரு முறை வெள்ளச் சேதமோ, வறட்சியோ ஏற்படுகிற போதும் நிவாரணம் கோரி அரசுக்கு உழவர்கள் மனு போடுவதும், மனம் போன போக்கில் ஏதோ ஒரு தொகையை இடர்நீக்கத் தொகையாக அரசு அறிவிப்பதும், அதனை சேதமடைந்தவர், சேதமடையாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் பிரித்துக் கொடுப்பதும் நடைமுறையாகத் தொடர்கிறது.

இவ்வாறு அனைவருக்கும் வழங்கும் போது, கணிசமானத் தொகை கையூட்டாகக் கிடைப்பதால் உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெள்ளம் வறட்சியைக் கண்டு மனம் குதூகலிக்கிறார்கள். அரசு வழங்கும் தொகை ஆட்சியாளர் வழங்கும் இனாம் என்ற மனநிலை உழவர்களிடம் பரவியுள்ளதால், இந்த ஊழல் விநியோகத்தை அவர்களும் கண்டு கொள்வதில்லை.

வாகனங்களுக்கும் பிற தொழில் கருவிகளுக்கும் காப்பீட்டுத் திட்டம் இருப்பது போல, பயிர் காப்பீட்டுத் திட்டமும் தன் போக்கில் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் வேண்டும். அதற்கு ஏக்கர் வாரியாகக் கணக்கிட்டு இழப்பீடு வழங்கும் பயிர் காப்பீட்டு முறை செயலுக்கு வர வேண்டும்.

இவ்வாறான மாற்று திட்டங்களே வேளாண்மையைப் பாதுகாக்கும். கிராமங்கள் அயலாருக்கு கைமாறாமல், தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வழி ஏற்படும்.

மேல் தோற்றத்தில் இது மலைப்பாக தோன்றினாலும், இக்கோரிக்கைகள் சமூக நீதியின் பாற்பட்ட நியாயம் என்பதால் உழவர்களும் அறிவாளர்களும் ஒன்றிணைந்து களம் கண்டால் உறுதியாகக் கைக்கூடும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
பிப்ரவரி 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்:

பி.ட்டி. கத்தரி தடுப்போம்


எப்படியும் பி.ட்டி.கத்தரியைத் திணித்து விடவேண்டும் என்ற முனைப்போடு இந்திய அரசு செயல்படுகிறது. அதற்காக மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழுவில் பகாசுர அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கையாள் அறிவியலாளர்களை நிரப்பியது. ஆனால் அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் எளிதில் விடுவதாக இல்லை.

பி.ட்டி.கத்தரியை அனுமதிக்கலாமா கூடாதா என்று தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு2ல் இருந்தவர்கள் மான்சான்டோவின் கையாள்கள் என்பதை டவுன் டு எர்த் (Down to Earth) 2009 டிசம்பர் 16--31 இதழ் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. அது வருமாறு:

வல்லுனர் குழுவில் உள்ள கே.கே.திரிபாதி மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்து,அது நடுவண் புலனாய்வுக்குழுவின் விசாரணையில் உள்ளது. மான்சான்டோவின் துணை நிறுவனமான மஹைகோவுக்கு சாதகமாக தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் திரிபாதி என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

வல்லுனர் குழுவின் அடுத்த உறுப்பினர் மதுராராய். இவர் வாரணாசியில் உள்ள இந்திய அரசின் காய்கறி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர். இந்நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க நிதியுதவிக்கழகத்தின் நிதி ஏற்பாட்டில் மஹைகோ பி.ட்டி.கத்தரியைப் பரப்புவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக புல ஆய்வில் ஈடுபட்டவர் இந்த மதுராராய்

வல்லுனர் குழுவின் இன்னொரு உறுப்பினர் வசந்தா முத்துசாமி. மற்றொருவர் பி.சசிகரன். இந்த இருவரும் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர்கள். அப்போது அமெரிக்க நிதியுதவியில் மான்சான்டோவின் மரபீனி உணவுப் பயிர்களை தெற்காசியாவில் பரப்புவது குறித்து ஆய்வு நடத்தியவர்கள். அடுத்த உறுப்பினர் பி. ஆனந்தகுமார். இவர் பி.ட்டி கத்தரி வளர்ப்பவர்.

-align: justify;"> மற்றொரு உறுப்பினர் திலீப்குமார். மான்சான்டோவின் துணை நிறுவ னமான மஹைகோ நிதி ஏற்பாட்டில் ஆய்வு நடத்தியவர். பி.ட்டி. கத்தரியை மீன் உணவாக பரப்புவது குறித்த ஆராய்ச்சியே அது.

இவ்வாறான கையாள் வல்லுனர்கள் மான்சான்டோவுக்கு ஆதரவாக பி.ட்டி.கத்தரியை அனுமதித்ததில் வியப்பேதும் இல்லை.

ஆயினும்,பி.எம் பர்கவா, தேவீந்தர் சர்மா, ராமாஞ்சனேயலு, நம்மாழ்வார் போன்ற அறிஞர்களும், க்ரீன்பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், பல்வேறு உழவர் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் தில்லி அரசு வேறு வழியின்றி பொது விசாரணைக்கு உத்தரவிட்டது.

கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் பொது விசாரணை நடந்துள்ளது. இங்கெல்லாம் பெருந்திரளான உழவர்களும், அக்கறையுள்ள அறிவாளர்களும் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களில் எண்பது விழுக்காட்டினர் பி.ட்டி.கத்தரிக்கு எதிரான கருத்துகளையே பதிவு செய்ததாக இக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஜ ெயராம் ரமேசே ஒத்துக்கொண்டார்.

புவனேஸ்வரில் இப்பொதுவிசாரணை அரங்கிற்கு உழவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கைகளில் இயற்கை வேளாண்மையில் விளைந்த கத்தரிக்காய்கள். அந்தக் காய்களை அமைச்சருக்குப் பரிசாக வழங்கி பி.ட்டி.கத்தரி வேண்டாம் என முழங்கினர்.

ஏற்கெனவே கேரளா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பி.ட்டி.கத்தரியைத் தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன. கர்நாடக அரசு மரபீனி மாற்ற உணவுப்பயிர்களை அவசரப்பட்டு அனுமதித்து விடமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு மான்சான்டோவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட பி.ட்டி.கத்தரி என்ற பெயரால் இதனைத் திணிக்க முனைந்துள்ளது. மான்சான்டோவின் முகமூடியாக வேளாண் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்துகிறது. அதற்கேற்ற விஞ்ஞானிகள் அப்பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்புகளில் அமர்ந்துள்ளனர்.

இந்திய அரசும், தமிழக அரசும் எப்படி முயன்றாலும் பி.ட்டி.கத்தரியைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த மண்ணையும், மண்ணின் மரபான வேளாண் அறிவையும் நசுக்கி, தமிழர்களை வெள்ளைக்கார முதலாளிகளின் அடிமையாக மாற்ற முயலும் அரசுகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக எத்தகைய தியாகம் செய்யவும் அணியமாக வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்:

வல்லாதிக்கக் கூட்டணியின் கோபன்ஹேகன் கூத்து


நாம் அச்சப்பட்டதைப் போலவே அமெரிக்க வல்லாதிக்கத்தின் விருப்பத்திற் கிணங்க இந்தியாவின் துணையோடு ஆபத்தானதொரு ஒப்பந்தம் கோபன்ஹேகன் பருவநிலை மாநாட்டில் திணிக்கப்பட்டுள்ளது.

“பருவநிலைப் பேச்சுவார்த்தையை இயற்கை அறிவியல் என்ற அடிப்படையிலிருந்து மாற்றி அரசியல் ஆதிக்கப் பகிர்வு என்பதோடு முடிச்சுப் போடுகிறார்கள். அணு ஒப்பந்தத்தை போலவே பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் கண்காணிப்புக்கும், கட்டுத்திட்டங்களுக்கும் உட்பட்ட இளைய பங்காளியாக இந்தியாவை நிலை நிறுத்த இந்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது’’ என்று நாம் கூறியது (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009) ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ என்ற பெயரால் நடந்தேறியிருக்கிறது.

இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட விதமும் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகளுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

புவிவெப்பமாதலை குறைப்பதற்கான ஐ.நா. பருவநிலைப் பேச்சுவார்த்தை 2009 திசம்பர் 7 முதல் 18ஆம் நாள் நள்ளிரவு வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்து அதன் இறுதியில் திசம்பர் 19 அன்று விடியற்காலை ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ அறிவிக்கப்பட்டது. இந்த உச்சி மாநாடு தொடக்கத்திலிருந்தே தில்லுமுல்லுகளும் திரைமறைவு பேரங்களும் நிறைந்ததாக இருந்தது.

மாநாட்டின் முதல் நாளான 7.12.2009 அன்றே பேராளர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. 2007 திசம்பரில் இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கி பல்வேறு கட்டங்களில் பல நாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளில் உருவான கோபன்ஹேகன் வரைவு முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திடீரென்று மாநாட்டின் முதல் நாளான திசம்பர் 7 அன்று ‘டென்மார்க் ஆவணம்’ என்ற பெயரால் ஒரு வரைவு கசியவிடப்பட்டது. இந்த ஆவணம் பற்றி முதலில் மறுத்துப் பேசிய டென்மார்க் அரசு பிறகு இதுவும் விவாதத்திற்குரிய ஒரு கருத்து தான் என்பதாக விளக்கமளித்தது.

மாநாடு நடந்த பெல்லா அரங்கம் கூச்சல் குழப்பத்தால் நிரம்பியிருக்க நாள்தோறும் ஏதாவதொரு வதந்தி கசிந்து கொண்டே இருந்தது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கும் புரியாமல் விழித்தார்கள். மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். டென்மார்க் காவல்துறையினர் இப்போராட்டக்காரர்களை அடித்து விரட்டுவதும், கைது செய்வதுமாக இருந்தனர்.

ஆனால், உண்மையான பேச்சுகள் திரைக்குப் பின்னால் பின்அறைப் பேச்சுகளாக நடைபெற்றன. திசம்பர் 16 வரையிலும் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை என்பதாகவே இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். “உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என்றால் ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு திசம்பர் 18 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கோபன்ஹேகன் வரமாட்டார். நாட்டுத் தலைவர்கள் கோபன்ஹேகன் வருவது ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக அல்ல. பேச்சுவார்த்தை முடிவை அறிவிப்பதற்காகவே” என்று உண்மை விளம்பி போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார் ஜெய்ராம் ரமேஷ்.

ஆனால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவும், சீனப்பிரதமர் ஜென் பியாஓ-வும் இந்தியாவின் மன்மோகன்சிங்கும் தங்களுக்குள் ஏற்கெனவே பேசி வைத்ததை கோபன்ஹேகனில் திசம்பர் 18ஆம் நாள் அரங்கேற்றினார்கள்.

தனக்குக் கீழுள்ள பாளையப்பட்டு குறுநில மன்னர்களிடம் பேரரசன் பேசுவது போல் மாநாட்டு அரங்கில் ஒபாமா பேசினார். ‘நான் சொல்வதை ஏற்பதாய் இருந்தால் ஒப்பந்தம்; இல்லையென்றால் இல்லை!’ என்பது போல் அவரது பேச்சு அமைந்திருந்தது. “பொதுநோக்கு - வேறுபட்ட பொறுப்பு” என்ற ‘கியோட்டோ ஒப்பந்த’க் கோட்பாட்டை தனது பேச்சுத் திறமையால் திரிபுபடுத்தினார் ஒபாமா. ‘பொதுநோக்கு-வேறுபட்ட எதிர்வினை’ என்றார். இது வெறும் வார்த்தை விளையாட்டல்ல. பேச்சுவார்த்தையின் அடிப்படையையே தனது ஆதிக்க நலனுக்கு ஏற்பத் திரித்துக் கொள்வது ஆகும்.

18ஆம் நாள் நள்ளிரவு கடந்ததும் திரைமறைவு பேச்சுவார்த்தையின் உச்சநிலை நாடகங்கள் அரங்கேறின. ஒபாமா(அமெரிக்கா), லூலா(பிரேசில் பிரதமர்), ஜூமா (தென்னாப்பிரிக்கப் பிரதமர்), மன்மோகன்சிங்(இந்தியா), ஜென்பியாஓ(சீனா) ஆகியோருக்கிடையில் கமுக்கப் பேரங்கள் நடந்தன. இதனடிப்படையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தம் ‘தலைமையின் நண்பர்கள்’ என்றழைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 25 நாடுகளின் பேராளர்கள் முன்வைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. மொத்தத்தில் கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையில் பங்குபெற்ற 197 நாடுகளில் வெறும் 27 நாடுகளின் ஒப்புதல் பெற்ற ஆவணமே இந்த ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ ஆகும்.

எப்படி இது நடந்தது என்பதை ‘ஜி-77 + சீனா’ என்ற அணியின் தலைவராக இருந்த சூடான் நாட்டு அமைச்சர் பெர்னார்டு டீடாஸ் - டி - காஸ்ட்ரோ முல்லர் விளக்குகிறார். “கோபன்ஹேகன் பருவநிலை மாநாட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஐரோப்பிய நாடுகளின் மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. வளர்முக நாடுகளின்- குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை கையூட்டுக் கொடுத்தும் மிரட்டியும் பணியவைக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஈடுபட்டது.

தொடக்கத்திலேயே ‘டென்மார்க் ஆவணம்’ கார்டியன் ஏட்டில் கசியவிடப்பட்டது. உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையை எப்படி நடத்துவது என்ற வழிமுறையைப் பற்றிப் பேசுவதிலேயே முதல் வாரம் கழிந்தது. பின்அறைப் பேச்சுவார்த்தையில் சூடான் குழுவின் தலைவர் என்ற முறையிலும் ஜி-77 நாடுகளின் பேராளர் என்ற முறையிலும் கலந்து கொண்டு நானும் பேசினேன். பயன் கிடைக்காது என்பது தெரிந்ததும், இந்தத் திரைமறைவுப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

திசம்பர் 18ஆம் நாள் ஒபாமா வந்தார். அமெரிக்காவுக்கும் பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா அடங்கிய ‘பேசிக்’ (ஙிகிஷிமிசி) அணிக்கும் இடையில் பின்அறைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மாநாட்டு அரங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பேராளர்கள், அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனத் தலைவர்கள் அனைவரும் விடிய விடியக் காத்திருந்தோம். தாமதத்திற்கான காரணம் சொல்லப்படவும் இல்லை.

பின்னிரவுக் கடந்தபின் மாநாட்டின் தலைவரும் டென்மார்க் பிரதமருமான லார்ஸ் லோக்கே ராஸ்மூசன் மேடையில் தோன்றினார். அவர் கையில் இருந்த ஆவணத்தை உயர்த்திக் காட்டியபடி ஒலிபெருக்கியின் முன்னால் வந்து ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ முடிந்துவிட்டது என்று அறிவித்தார். உடனடியாக தலைமைச் செயலக ஊழியர்கள் அந்த ஆவணத்தின் நகல்களை பேராளர்களிடம் வழங்கினர்.

மாநாட்டு வழிமுறையின்படி இந்த ஆவணத்தின் மீது அனைத்து நாட்டுப் பேராளர்களின் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. கருத்துகூற அனைவருக்கும் சேர்த்து 1 மணி நேரம் வழங்கப்பட்டது. கருத்தூன்றிப் படிப்பதற்குக் கூட நேரம் அளிக்கப்படாததால் அரங்கம் கூச்சல் குழப்பத்தால் அதிர்ந்தது.

ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவது மட்டுமே பேசுவதற்கான ஒரே வழியாக விடப்பட்டிருந்தது. அதிலும் எல்லோருக்கும் வாய்ப்பில்லை. பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் அல்லது குடியரசுத் தலைவர்கள் அல்லது பொறுப்பான பேராளர்கள் தாங்கள் பேசுவதற்கு வாய்ப்புக்கேட்டு தங்கள் பெயர் பலகையை மேசையில் ஓங்கித் தட்டி ஓசை எழுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்பிறகே ஒரு சிலர் பேச அனுமதிக்கப்பட்டனர்.

அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மாநாட்டுத் தலைவர் அமர்ந்து பேச்சுக் கேட்கும் மாநாட்டு மரியாதைகூட கடைபிடிக்கப் படவில்லை. அவர் அங்குமிங்கும் திரும்பி தலைமைச் செயலக ஊழியர்களிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட சில நாடுகள் (கியூபா, பொலிவியா, நிகரகுவா, வெனிசுவேலா, சூடான்) தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த நிலையில் ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ குறித்து ஐ.நா. பருவநிலை மாநாடு “குறித்துக் கொண்டது” என்று மாநாட்டுத் தலைவர் ராஸ்மூசன் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் நாடுகள் கையொப்பமிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னமேயே மாநாட்டில் பேசிய பிரிட்டன் அமைச்சர் மில்லிபாண்ட் “மாற்று தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க தேவையான நிதி உதவியைப் பெற விரும்பும் நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் தான் அந்த நிதி உதவிக் கிடைக்கும்” என்று கூறினார். அமெரிக்கப் பேராளரும் அதையே வலியுறுத்தினார்.

"நாடுகளுக்கிடையில் நிலவிய நம்பிக்கையை ‘கோபன்ஹேகன்’ தகர்த்து விட்டது’’ என்றார் காஸ்ட்ரோ முல்லர் (நிuணீக்ஷீபீவீணீஸீ.நீஷீ.uளீ திசம்பர் 23.12.09).

இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் இணைந்து அமெரிக்க வல்லாதிக்கம் கூறிய வழியில் ஒப்பந்தம் வரைந்து அதை 27 நாடுகள் ஏற்றுக் கொண்டு மீதம் உள்ள 170 நாடுகள் மீது திணிக்க முயல்கின்றன. இது தான் கோபன்ஹேகன் பருவநிலை ஒப்பந்தம்.

“கியோட்டோ வழிமுறை கண்டிப்பாக பின்பற்றப்படும். இந்தியா அதிலிருந்து வழுவாது. அவ்வாறு வழுவும் ஒப்பந்தத்தை ஏற்காது” என்று இந்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மீண்டும் மீண்டும் உறுதி கூறினார். ஆனால் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

புவிவெப்பமாதல் என்பது உலகம் சந்திக்கும் பொதுப் பிரச்சினை என்றும் கி.பி. 2050க்குள் புவி வெப்பநிலையை 2கு சென்டிகிரேட் குறைக்க வேண்டும் என்றும் பொதுப்பட பேசும் இந்த ஒப்பந்தத்தின் முதல் பத்தி, இந்த இலக்கை அடைவதற்கு குறைக்க வேண்டிய கார்பன் வெளியீட்டு அளவு பற்றி மவுனம் சாதிக்கிறது.

கோபன்ஹேகனுக்கு அடித்தளமிட்ட பாலி வரைவுத்திட்டம் கியோட்டோ ஒப்பந்தத்தின் நோக்கத்தை சாதிப்போம் என்று உறுதி கூறியது. ஆனால் அமெரிக்காவும் இந்திய அணியும் வரைந்துள்ள கோபன்ஹேகன் ஒப்பந்தமோ “முந்தைய மாநாடுகளின் இறுதி இலக்கை நோக்கி பயணிப்போம்” என்று வழுக்கலாகப் பேசுகிறது (கியோட்டோ ஒப்பந்தம், பாலி வரைவு ஆகியவற்றுக்கு காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 மற்றும் தமிழர் கண்ணோட்டம் மே 2007).

2020க்குள் எந்தளவுக்கு கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டும், 2050க்குள் என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை கியோட்டோ ஒப்பந்தம் வரையறுத்தது. ஆனால், இவைபற்றி கோபன்ஹேகன் ஒப்பந்தம் விரைவில் முடிவெடுப்போம் என்று மட்டுமே பேசுகிறது. “எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கார்பன் வெளியீட்டை குறைக்கும் உச்சபட்ச அளவு பற்றி உலகளவிலும் அந்தந்த நாட்டளவிலும் வரையறுக்க முயற்சி செய்வோம்” என்று ஒப்பந்தத்தின் பத்தி 2 தொளதொளப்பாக பேசுகிறது.

“வளர்ச்சியடைந்த நாடுகள் 2020க்குள் வரம்புகட்ட வேண்டிய கார்பன் அளவு குறித்து தனித்தனி நாடுகளாகவோ அல்லது கூட்டாக சேர்ந்தோ வரையறுக்கும். அந்த வரையறுப்பு அறிக்கை வரும் 31.01.2010க்குள் ஐ.நா. பருவநிலை மாநாட்டுத் தலைமைச் செயலகத்திற்கு ஒரு தகவல் அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும். இந்த முடிவு கியோட்டோ ஒப்பந்தத்தில் கட்டுப்பட்டுள்ள நாடுகளையே உறுதியாக கட்டுப்படுத்தும்’’ என்று ஒப்பந்தத்தின் பத்தி 4 கூறுகிறது.

கியோட்டோ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. எனவே, இந்த பத்தியில் கூறப்படும் நிபந்தனையை அமெரிக்கா கட்டாயம் ஏற்க வேண்டியத் தேவையில்லை. அதுவாக விரும்பி அறிக்கை அளித்தால் உண்டு. இதே போல், வளர்முக நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளில் கார்பன் வெளியீட்டை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 31.01.2010க்குள் தலைமைச் செயலகத்திற்கு தகவல் அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடுகளை தங்கள் சொந்த நிதியிலிருந்து அந்தந்த நாடுகள் செய்து கொண்டாலும் “அவை அனைத்து நாட்டு கலந்தாய்வுக்கும், கூராய்வுக்கும் உட்படுத்தப்படும். அதற்கான உறுதியான வழிமுறைகள் இறுதி செய்யப்படும்’’ என்று கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் பத்தி 5 கூறுகிறது.

அமெரிக்க வல்லரசின் கண்காணிப்புக்கும் கட்டுத்திட்டங்களுக்கும் உட்பட்ட இளையப் பங்காளியாக இந்தியா இருப்பதை உறுதி செய்யும் விதியே இது. “கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட ஒப்பந்த நாடுகள் மேற்கொள்ளும் திட்டங்களை தலையிட்டுக் கண்காணிப்பதற்கு அமெரிக்கா உரிமை பெற்றுள்ளது” என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அறிவியல் ஆலோசகர் டேவிட் ஆக்சல்ராடு கூறுவது இதனை உறுதி செய்கிறது.

கோபன்ஹேகன் ஒப்பந்தம் சட்டப்படியாகக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமல்ல என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகள், வல்லரசுகளின் பணபலத்தாலும் படை பலத்தாலும் இணங்கச் செய்யப்படும் என்பது தெளிவு. இந்தப்புவியை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையை வல்லரசுகளும் அவற்றின் பங்காளிகளும் இந்தப் புவிப்பந்தை பங்கு போட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே கோபன்ஹேகன் கூத்து.

கோபன்ஹேகன் தோல்வி சில செய்திகளை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

ஒன்று: புவிவெப்பமடைவதால் தீவு நாடுகள் விழுங்கப்படுவதையோ கடற்கரை நாடுகள் அழிக்கப்படுவதையோ, புவி நடுக்கோட்டு நாடுகள் வறட்சியில் சிக்குவதையோ இவ்வகை நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள் மெல்லச் செத்தொழிவதையோ பற்றி ஏகாதிபத்தியங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மக்கள் பேரழிவில் சிக்கினாலும் இந்த ஏகாதிபத்திய முதலாளிகள் தங்கள் இலாபங்களில் சிறு சிராய்ப்பை ஏற்றுக் கொண்டு கூட அந்த அழிவை தடுக்க முன்வர மாட்டார்கள்.

இரண்டாவது: இந்த பேரழிவுக் கூட்டணியில் உறுதியான பங்காளியாக இந்தியா இணைந்திருக்கிறது. இயற்கையைப் பாதுகாக்க இந்தியா என்ற கட்டமைப்பு உதவாது.

மூன்றாவது: புவியைக் காக்கும் போராட்டம் இந்த ஏகாதிபத்தியக் கூட்டணியை எதிர்க்கும் போராட்டத்தில் மையம் கொண்டுள்ளது.

நான்காவது: இந்தியாவையோ சீனாவையோ அல்லது வேறு வளர்ச்சி அடையும் நாடுகளையோ நம்பி வல்லாதிக்கத்திற்கெதிரான வளரும் நாடுகளின் கூட்டணி சாத்தியமில்லை. தங்கள் தங்கள் தேசிய இறையாண்மை, தேசியப் பொருளியல், தேசிய வாழ்முறை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கான மாற்று வழியை - மாற்றுப் போராட்டங்களை கண்டறிவதே ஒரே வழி. இதன் பொருள் பலமுனை உலகம் தேசியங்களின் எழுச்சியில் உருக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
சனவரி 2010 இதழில் வெளிவந்த கட்டுரை)

0 கருத்துகள்:

குழப்ப முயலும் இந்தியாவும் வணங்காமண் தமிழீழமும்


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் உரை நிகழ்த்தாத மாவீரர் நாள் 26.11.2009. தான். தமிழீழ மண்ணில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படாத மாவீரர் நாளும் இதுதான். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. நிலவும் நெருக்கடியின் ஆழத்தை இது எடுத்துக் கூறியது.

ஆயினும் உலகெங்கும் பரவிக்கிடக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும். தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களும் பெரும் எண்ணிக்கையில் உணர்ச்சிப் பெருக்கோடு இந்த மாவீரர் நாளைக் கொண்டாடினார்கள். நிகழ்ந்துவிட்ட மனிதப் பேரவலத்தை எண்ணி விம்மி, வெடித்தாலும் அடுத்து நடக்க வேண்டியது என்ன, அதில் தமது பணி என்ன என்பதை ஒவ்வொருவரும் திட்டமிடும் செயலூக்க நாளாகவும் இம் மாவீரர் நாள் அமைந்தது.

தலைவர் பிரபாகரன் நேரில் தோன்றி உரை நிகழ்த்த முடியாத சூழல் நிலவுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இரண்டு மாவீரர் நாள் உரைகள் இணையங்களில் உலா வந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளிவந்தது. இதில் எந்தத் தனிப்பட்டப் பொறுப்பாளர் பெயரும் இடம்பெறவில்லை. எழுத்து வடிவில் மட்டுமே வெளியானது.

நிகழ்ந்து விட்டப் பேரழிவிற்கு இந்தியா எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதை இவ்வறிக்கை தெளிவுபடப் பேசவில்லை என்றாலும், தமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் தலைமையில், மாவீரர்கள் காட்டிய பாதையில் தமிழீழத் தனியரசு நிறுவுவதற்கான தங்களது போராட்டம் தொடரும் என்று உறுதிபடக்கூறியது.

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் என்பவர் பெயரால் ஒலிவடிவிலும், வரி வடிவிலும் இன்னொரு மாவீரர் நாள் உரை வந்தது. கூர்ந்து கவனிப்பவர்கள் இக்குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே இது செம்மாந்த புலிகளின் குரல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டனர்.

காட்டுப்பகுதிக்குள் இருந்து உரையாற்றுவதாக ராம் சொல்லிக் கொண்டார் . அதனை உண்மையென நம்பவைக்கும் நோக்கில் அவர் பேசும்போது ஒரு குருவி கத்துவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீரான இடைவெளியில், ஒரே விதமாகவும், ஒரே அளவிலும் அவ்வொலி கேட்டதுதான் இவர்களது ‘திறமைக் குறைவை’ வெளிக்காட்டி விட்டது.

ஒருவேளை ராம் சிங்கள இராμஷீத்தின் பிடியில் இருக்கக்கூடும். சிங்கள அரசின் வரைவை உரை என்ற பெயரில் அவர் படித்திருக்கக்கூடும். பிரபாகரன் மரணம் அடைந்தார் என்றும், கடைசி நேரத்தில் தன்னிடம் தலைமையை ஒப்படைத்துச் சென்றார் என்றும் ராம் கூறிக்கொண்டார். அவரது பேச்சில் ஓரிடத்தில் கூட இராசபட்சே பற்றிய குறிப்பு இல்லை.

இவையெல்லாம் ‘மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட பாட்டு’ என்பதை அம்பலப்படுத்தி விட்டன. முகாம் மக்களின் நல்வாழ்வுக்கு பணம் அனுப்புங்கள் என்று புலம் பெயர் தமிழர் களிடம் வேண்டுகோள் வைத்தார். வீரர் நாள் உரையில் எந்தக் காலத்திலும் இவ்வாறு பிரபாகரன் வேண்டுகோள் விட்டதில்லை. மக்கள் தாங்களாகவே வாரி வழங்கினர். புலிகள் அவற்றைத் திரட்டி அமைப்பில் சேர்த்தனர்.

ராம் பேச்சைக் கவனித்தால், தமிழீழச்சிக்கலை இந்திய - சிங்கள உளவு அமைப்புகள் எவ்வாறு திரிக்க முயல்கின்றன என்பது புரியும். அவர் ஈழத் தமிழர் களை “சிறுபான்மை இனத்தினர் “ என்று குறிப்பிட்டார். தமிழீழச் சிக்கலை சிறுபான்மை இனச்சிக்கலாகக் காட்டுகிறார். முள்வேலி முகாமுக்குள் முடக்கப் பட்டிருக்கும் தமிழர்களின் அவலங்களை எடுத்துக்கூறி, இதனைத்தீர்க்க சிங்கள அரசு முன் வந்தால் “எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் அணியமாக இருப்பதாக” அறிவித்தார்.

இந்திய அரசு எப்போதும் ஈழத் தமிழர்களை இனச் சிறுபான்மையினர் (Ethnic Minorities) என்றே வரையறுத்து வருகிறது. இலங்கையின் தமிழ் முஸ்லீம்களையும், வேறு சில மதமக்களையும், இவ்வாறே அழைக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னமேயே ‘பிரபாகரனுக்கு பிந்திய நிலைமைகள் (Post .Pirabakaran scenerios) என்று பேசிய இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘இந்து’ ராம், எம்.கே.நாராயணன் போன்றவர்கள் தமிழீழச்சிக்கலை ‘இனச்சிறுபான்மையினர் சிக்கல்’ என்றே விவாதித்தனர். கடந்த 4.12.2009 அன்று ஈழச்சிக்கல் பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் அவ்வாறே கூறினார். இன்று இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர் தலில் போட்டியிடும் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் ‘தமிழ்ச் சிறுபான்மையினர்’ (Tamil Minorities) என்றே பேசுகிறார்.

இலங்கைத் தீவில் எண்ணிக்கை அளவில் தமிழீழ மக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள் என்பது உண்மையே. தனி அரசு நடத்தி, தனித்தன்மையோடு வாழ்ந்த ஈழத்தமிழினத்தை, அதனுடன் தொடர்பற்ற சிங்கள இனத்துடன் தன்னுடைய நிர்வாக வசதிக்காக வெள்ளை ஏகாதிபத்தியம் ஒரே ஆட்சியில் கட்டிப்போட்டதால் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டது தமிழினம். ஆனால் அதைவைத்து ஈழத்தமிழர் பிரச்சினை என்பது இனச்சிறுபான்மையினர் சிக்கல் என்று கருதிவிடக்கூடாது.

மேலோட்டமாகப் பார்த்தால் இதன் ஆழம் புரியாது. உலகச் சட்டங்களின் பின்னணியில் புரிந்து கொண்டால்தான் இனச்சிறுபான்மையினர் என்று இவர்கள் தமிழர்களைச் சுட்டுவதன் உள் நோக்கம் தெளிவாகும்.

Ethnic Community என்றால் குடிவழி இன மக்களைக் குறிக்கும். சில மரபுச் தொடர்ச்சியைக் கொண்ட ஒரு மக்கள் சமூகத்தைத்தான் ‘குடிவழி இனம்’ என்று அழைப்பர். குடிவழி இனமும் தேசிய இனமும் ஒன்றல்ல. தேசிய இனம் என்பது வரலாற்று வளர்ச்சியின் விளைவு. பொதுமொழி, வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட வரலாற்று தாயகம், தனித்தப் பண்பாடு, தனித்த வரலாறு கொண்டு தனி அரசு அமைத்து நிலைத்து வாழும் அல்லது வாழ்ந்த சமூகம்தான் தேசிய இனம் ஆகும்.

தேசிய இனத்திற்குதான் தன்னுரிமை (Right to Self. determination) உண்டு என உலகச் சட்டங்கள் கூறுகின்றன. இது தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்ளும் உரிமை. ஓர் ஆட்சிப்பகுதியில் இத்தேசிய இனம் எண்ணிக்கையில் சிறுபான்மையா அல்லது பெரும்பான்மையா என்ற கேள்வியே எழாது. சிறுபான்மையோ பெரும்பான்மையோ அது தனித்த தேசிய இனம் என்றால் தனக்கான தனி அரசை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு.

மாறாக குடிவழி இனம் என்றோ சிறுபான்மை மக்கள் என்றோ குறிக்கப்பட்டால் அம்மக்கள் அரசுரிமைக்குப் பொருத்தமானவர்கள் அல்லர். அதிகாரப்பகிர்வு, பண்பாட்டு அங்கீகாரம் ஆகியவற்றை மட்டுமே அம்மக்கள் கோர முடியும். எடுத்துக்காட்டாக வட அமெரிக்காவில் (அதாவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில்) கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குடிவழி மரபுத் தொடர்ச்சி உள்ள மக்கள். இவர்கள் அமெரிக்க நாடு முழுவதும் பரவி வாழ்கிறார்கள். ஆயினும் இவர்களுக்கென்று வரலாற்று வழிவந்த தனித்த தாயகம் ஏதும் வட அமெரிக்காவுக்குள் இல்லை.

எனவே இம்மக்களுக்கு தேசியத் தன்னுரிமை கிடையாது. தனி அரசுரிமை கோர முடியாது. தங்களது பண்பாட்டுக்கு அங்கீகாரம், ஆட்சி- வேலை- கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றில் தங்களுக்கான பங்கு அல்லது ஒதுக்கீடு ஆகியவற்றை மட்டுமே கோரலாம்.

இவ்வாறான குடிவழி இனச் சிறுபான்மையினராக ஈழத் தமிழர்களைக் குறிக்கும் சூழ்ச்சியே அரங்கேறி வருகிறது. ‘இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள். இங்கு வாழும் மக்கள் அனைவரும் இலங்கையர் தான். நமக்குள் மொழி, மத வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒரு மக்கள்தாம்’ என்று சிங்கள இன வெறியன் ஃபாசிஸ்ட் இராசபட்சே கூறுவதன் உள்நோக்கம் இதுதான். அதற்கேற்றாற்போல் தமிழீழத் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றி அதனைக் கலப்பினத் தாயகமாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழீழ மண்ணில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றை அழிப்பது, வருங்காலத் தலைமுறையினருக்கு வரலாற்றைத் திரித்துக்கூறி “மகாவம்ச” இருட்டுக்குள் அழைத்துச் செல்வது என்ற இனப் பண்பாட்டு அழிப்பை (Structural Genocide) நடத்தி வருகிறது இராசபட்சே அரசு. இன்றைய உலகச் சட்டங்கள் குடிவழி இனச் சிறுபான்மையினரை ‘ஒருமக்கள்’ (A People) என அதாவது ஒரு தேசிய இனம் என்பதாக ஏற்றுக்கொள்வதில்லை.

மாவீரர் நாள் அன்று ராம் வழியாக ஈழத் தமிழர்களை ‘சிறுபான்மை மக்கள்’ என்று குறித்ததன் மூலம் விடுதலைப் புலிகளே தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு விட்டார்கள். “விட்டுக்கொடுப்புகளுக்கு” தயாராகி விட்டார்கள் என்று காட்டுவதற்கு இந்திய - சிங்கள உளவு அமைப்புகள் முயல்கின்றன.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தங்கள் நிலைபாட்டிற்கு இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன. 2010 சனவரியில் நடக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழர் கட்சிகளின் சார்பில் என்ன நிலை எடுப்பது, யாரை ஆதரிப்பது என்பன குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இக்கட்சிகள் ஒருமித்த நிலை எடுக்க முடியாமலும் போகலாம். சிவாஜிலிங்கம் தனி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் தமிழீழத் தனியரசேத் தீர்வு என வலியுறுத்துகிறார்.

மகிந்த இராசபட்சே- சரத்பொன்சேகா போட்டி உறுதியான ஒன்று. சிங்கள இடதுசாரிகள் சார்பில் விக்ரமபாகு கருணரத்னே நிறுத்தப்படுகிறார். இச்சூழலில் இராசபட்சே, பொன்சேகா இருவரில் ஒருவர் தான் வெற்றி பெற வாய்ப்புண்டு. இருவரில் யார் வென்றாலும் அவர் பக்கம் இருந்துகொண்டு காய் நகர்த்துவதையே இந்தியா விரும்பும்.

அதே நேரம் இந்த இருவரில் யாருக்கும் தமிழர் வாக்கு கிடைக்காது. ஒரு வேளை தமிழர்கள் வாக்களிப்பிலேயே கலந்து கொள்ளாமல் தேர்தலைப் புறக்கணித்து விட்டால் உலக அரங்கில் தமிழீழப் பிரச்சினைக்குப் புத்துயிர்ப்பு கிடைத்துவிடும். ஏனெனில் 2009, ஆகஸ்டில் நடந்த யாழ்ப்பாண நகர்மன்றத் தேர்தலில் 20% வாக்குகளே பதிவாயின. 80% தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். புலிகள் துப்பாக்கி முனையில் மக்களைத் தடுத்து விட்டனர் என்று இப்போது பொய் சொல்ல முடியாது. இதே நிலை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வந்துவிடக் கூடாது என இந்தியா அஞ்சுகிறது.

தமிழர்கள் கணிசமாக வாக்களிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இலங்கையின் தேர்தல் அரசியலுக்குத் திரும்பி விட்டார்கள் என்று காட்ட வேண்டும் என இந்திய ஏகாதிபத்தியம் விரும்புகிறது. தேர்தல் அறிக்கையை அணியப்படுத்தும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதன் சில கூறுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. தேசியத் தன்னுரிமை (National Self determination) என்ற கோட்பாட்டையே தனி அரசு அமைக்கும் உரிமை என்பதிலிருந்து பிரித்து, உயிரற்றதாக திரித்து முன் வைக்கும் முயற்சிகள் அவ்வறிக்கையில் தெரிகின்றன.

மாமேதை லெனின் காலத்திலிருந்தே தன்னுரிமை என்பதை, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ((Right to self - determination with the right to Seceede) என்று தெளிவுபடுத்திச் சொல்வது வழமையாக இருக்கின்றது. தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) என்பதிலேயே தனி அரசு அமைக்கும் உரிமையும் உண்டு என்றாலும், இது திரிபு அடைந்துவிடாமல் இருக்க மேற்கொள்ளும் முயற்சியே பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்று விரிவாகச் சொல்வது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசைப் பார்த்து “தமிழர்களின் தேசியத் தன்னுரிமையை ஏற்றுக்கொண்டால் பிரிந்துபோகும் கோரிக்கை எழாது. இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு நேராமலேயே தன்னுரிமையை ஏற்கலாம். இலங்கையின் அரசமைப்பு உள் தன்னுரிமையை (Internal Self- determination) உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்பட்டால் இதனைச் சாதிக்கலாம் “ என்று கூறுகின்றனர்.

புகழ்பெற்ற உலகச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே ஆண்டன் பாலசிங்கம் சொன்னதுதான் உள் தன்னுரிமை (Internal Self- determination) என்று கூட்டமைப்பினர் வாதிடலாம்.
ஆனால் எந்த ஒரு முன்மொழிவும் அல்லது நிலைப்பாடும் அது முன் வைக்கப்படும் சூழலைப் பொருத்தே அமைகிறது. அன்று சிங்களப் படையைத் தோற்கடித்து, தமிழீழத்தின் 80 விழுக்காட்டுப் பரப்பை மீட்டு, நிழல் அரசுக் கட்டமைப்பை நிறுவிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் உலக சமூகத்தின் முன் அமைதி முயற்சிக்கான தமது இணக்கத்தைக் காட்ட முன்வைக்கப்பட்டது தான் உள்தன்னுரிமை என்ற நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தையில் உரிய பயனை அளிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் அதனை மீண்டும் பொதுவான முறையில் வலியுறுத்திச் சொல்வதை புலிகள் கைவிட்டனர்.

மாறாக 2003 அக்டோபர் 31 அன்று இடைக்கால தன்னாட்சி ஆணையம் (Internal Sel f- Governing Authority) என்ற குறிப்பான மாற்றுத் திட்டத்தை முன் வைத்தனர் . இது முன் வைக்கப்பட்டதும் குறிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான். இதனைத் ‘தமிழர் கண்ணோட்டம்’ தெளிவுப்படுத்திக் கூறியது.

சிங்கள அரசோடு படை வலுவில் சமநிலை, இலங்கை தீவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பெரும் பகுதியில் நிர்வாகம் நடத்தி வரும் மெ.நிலை, தமிழீழ மக்களின் பேராதரவு என்ற புறநிலை - போன்ற சாதகமான கூறுகளில் ஊன்றி நின்று விடுதலைப் புலிகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.

சிங்கள அரசியலில் தீவிர இனவெறி. ச.திக. ‍ சந்திரிகா ஆகியோரிடையே இனவெறியில் ஏற்பட்டுவரும் இணக்கப்போக்கு, ஈழத்தில் தலையெடுக்கும் இசுலாமியப் பிரச்சினை, நேரடியாக. படைவகையி. தலையிடுவது என்ற இந்திய அரசின் புதிய அணுகு முறை, அமெரிக்க வல்லரசின் அச்சுறுத்தல்கள் ஆகிய பாதகமான நிலைமைகளை எதி. இந்தியாவும், சீனாவும் மட்டுமன்று, உலக வல்லரசுகளெல்லாம் ஒன்றுகூடி படை நடத்தி தமிழீழத்தில் பேரழிவைத் திணித்தன. அதன் எதிர்வினையாக இன்று தமிழினத்தின் எதிர்ப்பும் உலகு தழுவியதாக மாறி வருகிறது. புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பேரெழுச்சி கொண்டு தமிழீழ விடுதலையின் இன்றியமையாமையை உணர்த்தி வருகின்றனர். இப்போராட்டங்களில் இளையோர் ஈடுபாடு தீர்மானகரமானதாக வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போராட்டங்கள், இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை அந்தந்த நாட்டு அரசுகளை அசைக்கத் கொ.ளு. வகையில் தமிழீழ தொடங்கி உள்ளன. விடுதலைப்புலிகள் இடைக்கால நிர்வாகம் குறித்த தங்களது முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். . . (காண்க: இடைக்கால நிர்வாகம்: விடுதலைப் புலிகளின் முன்மொழிவு - கி. வெங்கட்ராமன் - தமிழர் கண்ணோட்டம் , நவ- 2003).

இந்த முன் மொழிவிலும் மக்கள் ஏற்பிசைவு பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - அதாவது தனி அரசு அமைக்கும் முடிவை- வலியுறுத்திக் கொண்டேதான் இடைக்கால ஏற்பாடாக இந்தத் திட்டத்தை முன் மொழிந்தனர் விடுதலைப்புலிகள்.

வலுவான நிலையில் இருந்து கொண்டு புலிகள் பேசியதை, இன்று மூச்சுமுட்ட முடக்கப்பட்டச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்களும் பேசுவது, அதுவும் ஈழத்தமிழர் சிக்கலைத் தீர்ப்பதற்கான இறுதியான சட்ட ஏற்பாடாகச் சொல்வது கழுத்தறுப்பு வேலையே தவிர வேறன்று.தோல்வி மனப்பான்மையைத் தமிழர்கள் மீது திணித்து, இனிமேல் போராட முடியாது என்ற மனநிலையை உருவாக்கி, சிங்களர்களுக்குக் கீழ் இரண்டாந்தரக் குடிகளாகத் தமிழர்களைத் தாழ்த்தும் சூது இதில் உள்ளது. உண்மையில் அவநம்பிக்கை கொள்ள ஏதுமில்லை. நிரந்தரமான தோல்விக்குள் தமிழினம் புதையுண்டு போய்விடவில்லை. வரலாறு காணாத பேரிழப்பும், பெரும் சோகமும் தமிழர்களுக்கு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் முள்ளி வாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. உற்று நோக்கினால் தமிழின வரலாற்றில் புதிய அத்தியாயம் வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பது புலனாகும். இன்னொருபுறம் சீனா, இந்தியா ஆகியவற்றின் அதிகாரப் போட்டிக்களமாக இலங்கைத் தீவு மாறிவருகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது கையடக்கமான கூட்டாளியாக இந்தியாவை வைத்துக் கொள்ள அமெரிக்க வல்லரசு விரும்புகிறது. சீனா வலுப்பட்டு வருவதைத் தடுக்கவும் அது விரும்புகிறது. அதற்கேற்ப இலங்கையில் காய் நகர்த்தலில் அமெரிக்கா ஈடுபடுகிறது. சீனா சிங்களத்தோடு கைகோப்பதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியா தமிழர்களைக் காட்டி அழுத்தங்கள் கொடுத்து தனது செல்வாக்கு மண்டலத்தில் சிங்களத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியைக் கடைப் பிடிக்கிறது. அதற்கேற்ப சிற்சில சலுகைகளைத் தமிழர்களுக்குத் தருமாறு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டு உணர்வுக்கும் மதிப்பளிப்பதாகக் காட்டிக் கொள்ள இந்த உத்தி இந்திய ஏகாதிபத்தியத்திற்கு உதவும். இந்த உலக வல்லாதிக்கப் போட்டியைப் பயங்கரவாத எதிர்ப்பு என்ற முழக்கத்தின் கீழ் தனக்குச் சாதகமாக சிங்கள ஆட்சி பயன் படுத்திக்கொண்டது. ஆனால் அதே வேகத்தில் அந்த உத்தி இனி பயன்தராது.

இன்னொருபுறம் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை வலுப்படுவது, ஆப்கானிஸ்தானில் மீண்டும் பேரழிவுப் போரைத் திணிக்கும் அமெரிக்காவின் முயற்சி, அப்போரில் அமெரிக்காவுடன் விருப்பக் கூட்டாளியாக இந்தியா இணையும் நிலை போன்றவையும் புதிய புவி அரசியல் நிலைமைகளைத் தோற்றுவித்து வருகின்றன. எப்போதும் புவி அரசியல் ஒரே நிலையில் நீடிக்காது; மாறிக் கொண்டே இருக்கும்.

இவற்றினூடாக சரியான உத்தி வகுத்தால் தமிழீழச் சிக்கலை உலக அரங்கில் சாதகமான நிலைக்கு உயர்த்த முடியும். இன்றைய நிலையில் களத்தில் புலிகள் இல்லை. எனவே முதன்மைப் போராட்ட சக்தியாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். ஆயினும் புலித்தலைமை உரிய நேரத்தில் களத்தில் வெளிப்பட்டே தீரும்.

இன்னொருபுறம் சிங்களம் போர்ப் பொருளாதாரப் பயனாளி களின் சண்டைக்களமாக மாறி சிங்கள அரசியல் பிளவுபட்டுச் சிதறும். எனவே எல்லாம் முடிந்துவிட்டது என்ற தோல்வி மனப்பான்மையில் சிங்களத்திற்குக் கீழ்ப்படும் அடிமை நிலையை ஏற்க வேண்டியதில்லை.

நார்வேயில் வாழும் ஈழத் தமிழர்கள் 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தங்கள் உறுதிபாட்டைத் தெரிவிக்கும் கருத்து வாக்குப்பதிவு நடத்தி உள்ளனர். இதில் மிகப் பெரும்பாலோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். பிரான்சிலும், கனடாவிலும் இது போன்ற வாக்கெடுப்பு நடந்து, அவற்றில் மிகப்பெரும்பாலோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும். இது, 1976 மே 14-ஆம் நாள் வட்டுக்கோட்டை தொகுதி பண்ணாகம் என்ற ஊரில் நடைபெற்ற தமிழர் ஐக்கியக்கூட்டணி மாநாட்டில் ஆரவாரமான பேராதரவோடு நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகும். .தன்னுரிமையின் (சுய நி.ணய உரிமை) அடி.படையி. ஒரு சுத.திர, இறைமையு.ள, மத.சா.ப.ற, சோசலிச. தமிழீழ அரசை மீ.வி.து புனரை.பு செ.வது. என்று அ.தீ. மான. அறிவி.தது.

இத்தீர்மானத்தைத் தேர்தல் மூலம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி இப்போதைய தலைமுறையினர் மறு உறுதி செய்வது சிறப்பானது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் தமிழீழத் தனி அரசு என்ற தமது இலட்சியத்தை இறுகப் பற்றி நிற்பது, அதுவும் புலம் பெயர் இளையோர் உறுதிப்பட்டு நிற்பது இந்திய - சிங்கள இனவெறிக் கூட்டணிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதனால்தான் பொருத்த மில்லாத சூழலில் உள் தன்னுரிமை பேசி, தனி அரசு கோரிக்கையைக் கைவிடச் செய்ய ஆள் பிடிக்கிறது இந்த இனவெறிக் கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டணியினர் சிலர் இதற்கு ஆளாவது வருத்தம் அளிக்கிறது.
நாம் ஏற்கெனவே கூறியதுபோல் முள்ளி வாய்க்காலோடு வரலாறு முடிந்து விடவில்லை. புலிகள் ஆயுதத்தை மவுனித்திருக்கிறார்கள். முற்றாக அழித்து விடவில்லை. தமது கட்டமைப்புகளை அவர்கள் சீரமைத்து வருகிறார்கள். புலம் பெயர் இளையோர் தமிழீழப் போராட்டத்தை சனநாயக வடிவில் உலக அரங்கில் விரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுதியான ஆதரவுச் செயல்பாட்டில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தியா தமிழினத்தின் எதிரி என்ற புரிதல் அதிகமாகி வருகிறது. உலகம் இப்போதுதான் கண் விழித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இராசபட்சே - பொன்சேகா கும்பலைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்கவேண்டும் என்ற கருத்து உலக மனித உரிமை அரங்கில் வலுப்பெற்று வருகிறது.

சிங்களத்தோடு தமிழர்கள் ஓர் அரசின் கீழ் சேர்ந்து வாழ முடியாது தனி அரசுதான் தீர்வு என்பதை உலக சனநாயக சக்திகள் புரிந்து கொண்டு வருகிறார்கள். ஆயினும் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகின் புவி அரசியல் நிலைமை வேகமாக மாறிவருவது உண்மைதான். இந்திய - சீன முறுகல் நிலை தீவிரப்படுவதும் உண்மைதான். ஆனால் இந்த மோதலில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும் என்று மனக் கணக்குப் போடுவது பெருந்தவறாகி விடும்.

எவ்வளவுதான் புவி அரசியல் கூட்டுகள் மாறினாலும் சிங்களம் ஒரு போதும் தானே முன்வந்து தமிழீழத்தை ஏற்காது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் இந்தியா தற்சார் பானத் தமிழீழத் தனி அரசை ஏற்காது என்பதும். ஏனெனில் சிங்கள ஆரியத்தைப் போலவே இந்திய ஆரியமும் தமிழினத்தோடு தீராப்பகை கொண்டது. ஹிμம்முறையில்தான் வேறுபாடு. ஹிμம்முறை வேறுபாட்டை அடிப்படை வேறுபாடாகப் பிறழப்புரிந்து கொள்ளக் கூடாது.

உலக அரங்கில் புவி அரசியலும், இன அரசியலும் ஊடாடிச் செயல்புரிவதைக் கவனித்து, இடைவிடாது போராடினால் தமிழீழம் விடுதலை அடைவது திண்ணம். எத்தனை ராம்களும், கூட்டணிகளும் வந்தாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

0 கருத்துகள்: