கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மான்சாண்டோவின் காலடியில் மண்ணின் மக்களை வைக்க இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் – 2013 - தோழர் கி.வெங்கட்ராமன்

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி எப்படியாவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கம்பளம் விரிப்பது என்பதில், இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
மான்சான்டோ, சின்ஜென்டா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு, பாடுபடும் பணியாளராக இந்திய அரசு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏப்ரல் 22 - 2013 அன்று, ஒரு சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளது.
“புவியைக் காப்போம், மண் வளம் போற்றுவோம்” என்ற முழக்கத்தை புவிநாளில்(Earth day) காலையில் அறிக்கையாக வெளியிட்டுவிட்டு, அதன்பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் மண்ணை மலடாக்கும் ஏற்பாட்டுக்கான, இந்த சட்ட முன்வடிவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் – 2013(Bio Technology Regulatory Autority of India Act 2013) என்ற சட்டத்தின் முன்வடிவே அது.
கடந்த 2006 தொடங்கி, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வடிவங்களில் இந்த சட்ட முன்வடிவு, முன்வைக்கப்பட்டு உழவர்களிடமும், நுகர்வோரிடமும், அறிவியலாளர்களிடமும் சில எதிர்க்கட்சிகளிடமும் எழும்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக அவ்வப்போது பின்வாங்கப்பட்டு வந்தது.
பி.ட்டி கத்தரி பயிருக்கு ஏற்பிசைவு வழங்கியதையொட்டி, இச்சிக்கல் பெரிதாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வேளாண்மைத்துறை, ”மரபீனி மாற்ற உயிரிகள் – வாய்ப்புகளும் சிக்கல்களும்” என்ற பொருள் குறித்து ஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழுவை நிறுவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா தலைமையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நிலைக்குழு, கடந்த 2012 ஆகத்து 9 அன்று அளித்த ஆய்வறிக்கை மிகச்சிறப்பு வாய்ந்த அறிக்கையாகும். குறிப்பாக, வாசுதேவ் ஆச்சார்யாவின் கடும் உழைப்பும் பங்களிப்பும் இதில் முக்கியமானது.
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி, உலகின் பல நாடுகளிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து நடந்துள்ள ஆய்வுகளை பரிசீலித்து 506 பக்க விரிவான அறிக்கையை இந்தக்குழு அணியப்படுத்தி அளித்தது.
”இப்போதையத் தேவை உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையமல்ல. பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் ஆணையம் தான். விரிவான ஆய்வு ஏதுமின்றி பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என்று இந்நிலைக்குழு அரசிற்கு தெளிவான பரிந்துரை அளித்தது.
ஒருமித்த பரிந்துரையை அளித்த இக்குழுவில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.
ஆனால், இப்பரிந்துரையை ஆய்வு செய்யாமலேயே குப்பைக் கூடையில் வீசும் வகையில், இப்போது உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டத்தை இந்திய அரசு முன்வைத்துள்ளது.
ஏற்கெனவே, பல கட்டங்களில் முன் வைக்கப்பட்ட உயிரித் தொழில்நுட்ப ஆணைய சட்ட வரைவுகளில் மேம்போக்கான சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவே அன்றி, மற்றபடி சாரத்தில், மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட பழைய சட்டமே இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது.
பி.ட்டி. பருத்தி பயிரிட்டப் பகுதிகளில் பெருகிவிட்ட உழவர்களின் தற்கொலைச் சாவுகளும், பி.ட்டி. கத்தரி குறித்து எழுந்த கடுமையான எதிர்ப்பும் சேர்ந்து பல மாநில அரசுகளை நிர்பந்தித்தது. அதன் காரணமாக, கேரளம், ஜார்கண்ட், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றுப் பயிர்கள் விற்பனை செய்வதோ, மரபீனி மாற்றுப் பயிர்களுக்கான கள ஆய்வுகள் மேற்கொள்வதோ கூடாது என தடை விதித்தன. இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் கூட, பி.ட்டி. கத்தரிக்கு தற்காலிகத் தடை விதித்தது.
இப்போது முன் வைக்கப்பட்டுள்ள, உயிரித் தொழில்நுட்ப சட்ட வரைவு சட்டமாக்கப்பட்டால், மேற்கண்டத் தடைகள் தானாகவே நீங்கிவிடும். ‘வேளாண்மை’ என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும், வேளாண்மை தொடர்பான மாநில அதிகாரத்தில், ஏற்கெனவே இந்திய அரசு குறுக்கிட்டு வருகிறது. இப்போது பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப சட்டம், மாநில அதிகாரத்தை இன்னும் வெட்டிக் குறுக்கி சிதைக்கிறது.
இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டத்தின் பிரிவு 4(1), அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொண்ட உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை நிறுவ வகை செய்கிறது. மாநில அரசுகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இந்திய அரசின் பிறத்துறைகளையும் மேலாண்மை செய்யும் சர்வாதிகார நிறுவனமாக, இந்த ஒழுங்காற்று ஆணையம் இருக்கப் போகிறது என்பதை இச்சட்ட முன்வடிவைப் படிக்கிற யாரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஆணையத் தலைவர், இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாக இந்த ஒழுங்காற்று ஆணையம் இருக்கும் என இவ்வரைவின் விதி 5 குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு மாநில அரசும் இந்த ஒழுங்காற்று ஆணையத்துக்குப் பணிந்து சேவை செய்ய, “மாநில உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று மதியுரைக்குழு” ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை இச்சட்டத்தின் விதி 35(1) கூறுகிறது. இந்த மதியுரைக்குழு ஒழுங்காற்று ஆணையத்துக்கு இணைப்பு முகமையாக(Nodal agency) அம்மாநிலத்தில் செயல்பட வேண்டுமென இவ்விதி பணிக்கிறது.
அதாவது, மாநில அரசுகள் பயிர்கள் மற்றும் விதைகள் தொடர்பான வேளாண்மைத் தறை அதிகாரத்தை இழப்பது மட்டுமின்றி இந்திய அரசின் இந்த ஒழுங்காற்று ஆணையத்திற்கு சேவை செய்யும் அமைப்பாக, தாழ்ந்து போக வேண்டும் என்பதே இச்சட்டம் விதிக்கும் நிலை.
இதுவரை, மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிக வகைப் பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கும் அதிகாரம் “மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு”(Genetic Engineering Aறிறிroval Committee - GEAC) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏற்பிசைவுக்குழு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மெலிதான ஒருசில கட்டுத் திட்டங்களையாவது விதித்து வந்தது. அவற்றில் ஒன்றாகத்தான், பி.ட்டி. கத்தரிக்கு, தற்காலிகத் தடையும் வழங்கியது.
இந்தச் சிறு சிராய்ப்பு கூட, மான்சாண்டாவுக்கோ, சின்ஜென்ட்டாவுக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் தில்லி அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே, உருவாகப்போகும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் இந்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் உள்பிரிவாக உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறைக்கு உட்பட்டதாக அமைக்கப்படுகிறது. உயிரித் தொழில்நுட்பத் துறையே, வேளாண்மையிலும் மருந்துத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் நவீன உயிரித் தொழில்நுட்ப உத்தியான மரபீனி மாற்ற உயிர்களை இந்தியாவில் பரப்புவதே, தமது துறையின் முதன்மையான நோக்கம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதன் கீழ், மரபீனித் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ஒழுங்காற்று ஆணையம் நிறுவப்படுகிறது என்றால், அதுவே சட்டநெறிக்கு எதிரானது. இந்த ஒழுங்காற்று ஆணையம், மரபீனி மாற்ற உயிர்கள் தொடர்பான எதையும் ஒழுங்கு படுத்தாது என்பதையே இது காட்டுகிறது.
சுற்றுச்சூழல் துறை, வேளாண்மைத் துறை, மருந்துத் துறை போன்ற பல துறைகளிடம் இன்றைய நிலையில் மரபீனித் தொழில்நுட்பத்தில் கோலோச்சும் நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டிய நிலையுள்ளது. இதனால், மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் தங்கள் மரபீனி மாற்ற விதைகளை சந்தைக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. மான்சாண்டோ நிறுவனத்தின் கொள்ளைக்கு, எந்த சிறுத் தடங்கலும் வரக்கூடாது என்பதில் மன்மோகன் சிங் அரசு கவனமாக இருக்கிறது. எனவே, வேறு எந்தத் துறையின் அனுமதியும் இன்றி இந்த ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதி பெற்றாலே போதும், மரபீனி மாற்ற விதைகளை சந்தைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று இச்சட்டவிதி 18 வரையறுக்கிறது. இதற்கிசைய நடப்பிலுள்ள, மருந்து மற்றும் புனைவுப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 போன்றவற்றின் விதிகள் முற்றிலும் மாற்றியமைக்கப்படுகின்றன.
மரபீனி மாற்று உயிரிகளைப் பொறுத்த அளவில், உணவு, மருந்து, வேளாண்மை போன்ற அனைத்துத் துறைகளையும் விட இந்த ஒழுங்காற்று ஆணையமே மேலாதிகாரம் கொண்டதென்று விதி 81 வரையறுக்கிறது.
அதாவது, மான்சாண்டோ, சின்ஜென்டா போன்ற நிறுவனங்கள் ஒற்றைச் சாளர இசைவு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஒழுங்காற்று ஆணையத்தின், உத்தரவின் மீது மேல் முறையீடு செய்வதற்கு, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்(Bio Technology Regulatory aறிறிellate Tribunal) ஒன்றை நிறுவ, இச்சட்டத்தின் அத்தியாயம் 11 வகை செய்கிறது. இம்மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம், பெரிதும் கேள்விமுறையற்ற நிறுவனமாக அமைக்கப்படுகிறது. இத்தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து, எந்த உயர்நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே செல்ல முடியும். அதுவும், தீர்ப்பு வந்த மூன்று மாதங்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். உச்சநீதிமன்றமும், இத்தீர்ப்பாயத்தின் ஆணைகள் அனைத்தையும் மேலாய்வு செய்ய முடியாது. மிகவும் வரம்புக்குட்பட்ட வகையில், சட்டநெறிகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பது பற்றி மட்டுமே உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். பிரச்சினையின் தன்மைக்குள்(Merit) தலையிட முடியாது.
இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எதிலும் பெருமளவு சிக்கிவிடாத திறந்த வெளிச் சந்தை, விதை நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வளவு கொடுமையான சட்டத்தை பலமுறை பின்வாங்கிய பிறகும், இந்திய அரசு மீண்டும் கொண்டு வர முயல்வதற்கான காரணம், அமெரிக்காவுடன் மன்மோகன் சிங் அரசு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம் தான். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2005, சூலை 18ஆம் நாள் அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்-உடன் செய்து கொண்ட பல ஒப்பந்தங்களில், இந்திய – அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி (Indo-US Knowledge Initiative) என்ற ஒப்பந்தம் முக்கியமான ஒன்று.
இதன்படி, பல துறைகளில், வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை இந்தியாவில் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 1. வேளாண் ஆய்வு மற்றும் கல்வி, 2. வேளாண் பொருள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல், 3. புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், 4. நீர் மேலாண்மை ஆகிய முக்கியக் கூறுகளைக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த, இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பேராளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைக் கொண்ட அறிவு வாரியம்(Knowledge Board) நிறுவப்பட்டுள்ளது. மான்சாண்டோ, வால்மார்ட் பிரதிநிதிகள் இதில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனங்களுக்கு சேவை செய்ய துறை தோறும், புதிய புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒப்பந்தத்தின், மூன்றாவது கூறாகக் கூறப்பட்டுள்ள புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், மரபீனி மாற்றத் தொழில்நுட்பமும் ஒன்று. அதற்கான சட்டம் தான், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்.
இதற்கு முன்னர், 2009 வரை முன் வைக்கப்பட்ட சட்ட முன் வடிவுகளை விதைச்சட்டம் போன்ற பிற சட்டங்களையும், விரிவாக ஆய்வு செய்து தான், வாசுதேவ் ஆச்சார்யா குழு அரசுக்கு அறிக்கையளித்தது.
ஏற்கெனவே செயல்பட்டு வரும், மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு(GEAC) முறையான ஆய்வின்றி, அவசர அவசரமாக மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கியதை, வாசுதேவ் ஆச்சார்யா குழு மட்டுமின்றி வேறு சில அமைப்புகளும் அம்பலப்படுத்துகின்றன.
இவற்றுள், புஷ்பா பர்காவா என்ற புகழ்பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் உச்சநீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் முக்கியமானது.
ஆந்திராவில், பி.ட்டி. பருத்தி விதைகளைத் தின்ற ஆடுகள் தொகை தொகையாக மடிந்து வீழ்ந்தன. இது பி.ட்டி. நுட்பம் குறித்தே கேள்விகளை முன் கொண்டு வந்தது. இதன் மீது பல பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வாறான வழக்கு ஒன்றில், பர்காவா உச்சநீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் முக்கியமான ஒன்று. அவர் கூறுவதாவது:
“ஆடுகள் சாவுக்கு பி.ட்டி. பருத்தி இலைகள் காரணமல்ல; பருத்திக்கு அடிக்கப்பட்ட, பூச்சுக் கொல்லிகளில் இருந்த சயனைடு மற்றும் நைட்ரைட் நஞ்சுகளேக் காரணம் என்று ஏற்பிசைவுக்குழு வாதம் செய்கிறது. தன்னுடைய இந்த முடிவுக்கு ஆந்திர அரசின் கால்நடைத்துறை ஆய்வறிக்கை, உத்திரப்பிரதேசம் இசாத் நகரில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலைய ஆய்வறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் காட்டுகிறது. ஆனால், இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே அவ்வாறு கூறவில்லை. ஏற்பிசைவுக்குழு பொய் சொல்கிறது. ஹைட்ரஜன் சைனைடு எச்சங்களோ, கரிம பாஸ்பேட்டுகளோ நைட்ரைட்டுகளோ, க்ளைமோ சைடுகளோ பி.ட்டி. இலைகளில் இல்லை என்று தான் இந்த ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, இறந்த ஆடுகள் மீது நடத்தப்பட்ட உடற்கூறாய்வில் இந்த நச்சுகள் புலப்படவில்லை. எங்களுடைய ஆய்வகம், வேதியியல் ஆய்வகம் மட்டுமே ஆகும். அதனால் பி.ட்டி. நச்சு குறித்த உயிரி வேதியியல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்பட முடியவில்லை என்று இந்த அறிக்கைகள் கூறின. ஆனால், இதை அப்படியே நேர்மாறாக மாற்றி, மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு, பொய்யான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது” என்று பர்காவா சாட்சியம் கூறினார்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏற்பிசைவுக்குழுவே, மான்சாண்டோவுக்கு சேவை செய்வதற்கு, இவ்வளவு பித்தலாட்டம் செய்கிறதென்றால், நேரடியாக உயிரித் தொழில்நுட்பத்துறையின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம், எந்தளவு நடுநிலையோடு செயல்படும் என்பது மிகப்பெரியக் கேள்விக்குறி.
இச்சிக்கல் குறித்து, வாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது. பி.ட்டி. கத்தரிக்கு, ஏற்பிசைவு வழங்கிய போது, மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழுவுக்கு இணைத் தலைவராக(Co-chariman) இருந்த முனைவர் அர்ச்சுளா ரெட்டி அவர்களிடம் இந்த நிலைக்குழு சாட்சியம் பெற்றது.
தனது சாட்சியத்தில் அர்ச்சுளா ரெட்டி, மரபீனி மாற்று விதைக் கம்பெனிகள் ஆட்சியாளர்கள் மூலமாக, கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாகவே, தாங்கள் உரிய ஆய்வின்றி, அவசர அவசரமாக பி.ட்டி. கத்தரிக்கு இசைவு வழங்கினோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ஏற்பிசைவுக்குழு பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்கியதில், பித்தலாட்டம் செய்வதற்கென்றே திட்டமிட்டு கே.கே. திரிபாதி, மதுரா ராய், வசந்தா முத்துசாமி, பி.சசிகரன், பி.ஆனந்தகுமார், திலீப்குமார் ஆகிய மான்சாண்டோ ஆட்களைக் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்துக் கொண்டது என்பதை தில்லியிலிருந்து வெளிவரும் டவுன்டுஎர்த்(DownToEarth) ஏடு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. (காண்க: Down To Earth, 2009 December 16-31).
வாசுதேவ் ஆச்சார்யா குழுவும் நாட்டின் உயராய்வு மையங்கள், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் அறிவாளர்களால் நிரப்பப்பட்டுள்ளதை சான்றுகளோடு காட்டி இடித்துரைத்தது. அது மட்டுமின்றி, இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஐ.நா. மேற்கொண்ட “பன்னாட்டு வேளாண் அறிவியல் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி மீளாய்வு”(International Assessment of Agricultural knowledge, Science and Technology develoறிment) அறிக்கையை மிக விரிவாக மேற்கோள் காட்டி விவாதிக்கிறது.
இந்த மீளாய்வு அறிக்கை, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர்களைக் கொண்டது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, பிரேசில், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் கள ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு அணியப்படுத்தப்பட்ட ஆய்வறிக்கை அது. மரபீனி மாற்ற உயிரிகள் ஆபத்தானவை என்றும், இந்த ஆபத்தின் அளவு அறுதியிட்டு அளக்கப்படவில்லை என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இவற்றையெல்லாம் காரணமாக எடுத்துக்கூறி, பொதுவாக மரபீனி மாற்ற உயிரிகள் பொதுவாக வேண்டாம், குறிப்பாக வேளாண்மைத் துறையில் வேண்டவே வேண்டாம் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்திக் கூறுகிறது.
நாடாளுமன்றமே நியமித்த அனைத்துக்கட்சி நிலைக்குழுவின் அறிக்கையில் கூறியுள்ளவற்றை, கொஞ்சமும் எதிர் கொள்ளாமலேயே போகிற போக்கில் புறந்தள்ளிவிட்டு மான்சாண்டோ - சின்ஜென்டாவுக்கு ஆதரவான உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டத்தை தடித்தனமாக இந்திய அரசு முன் வைக்கிறது.
மரபீனி மாற்று விதைகள், இவ்வளவு கேடானவை என்று தெரிந்த பிறகும் அனுமதிக்கப்படுவது, உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும், மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும். மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும். உணவு இறையாண்மையை சிதைக்கும். மான்சாண்டோவின் காலடியில் மண்ணின் மக்களை வைக்கும்.
எனவே, இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் – 2013ஐ உழவர்களும், அறிவியலாளர்களும் அக்கறையுள்ள எதிர்க்கட்சியினரும் ஒன்றுபட்டு எதிர்த்து, வரைவு நிலையிலேயே இதை மண்ணில் புதைத்துவிட வேண்டும். - தோழர் கி.வெங்கட்ராமன்

0 கருத்துகள்:

ஈழத்தமிழர் இனச்சிக்கலில் நாம் இனி என்ன செய்ய வேண்டும்? - தோழர் கி.வெங்கட்ராமன்

இந்திய அரசை ஒரு சிறிதும் நம்ப முடியாது என்பது மீண்டும் மெய்பிக்கப்பட்டு விட்டது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன் வைத்த இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் விவாதத்திற்கு வரும் போது, அதில் இந்தியா உரிய திருத்தத்தை முன் மொழிந்து ஏற்கச் செய்யும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுதி கூறினார்.
ஆனால் நாட்டு மக்களுக்கு உறுதிய ளித்தவாறு ஒரு மெல் லிய திருத்தத் தைக் கூட சேர்க்க முனை யாமல் ஏற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆத ரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன் றத்தில் வாக்களித்தது.
இந்திய நாடாளு மன்றத்தில் நிறை வேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப் படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008 – 2009 இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித குலத் திற்கெதிரான குற்றங்கள் மீது தற்சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறானதொரு தீர்மானத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற மறுத்தது. காங்கிரசு கட்சி மட்டுமல்ல. பாரதிய சனதா, சமாஜ்வாதி, திரிணமூல், பகுசன் சமாஜ், மார்க்சிஸ்ட், ஐக்கிய சனதாதளம் போன்ற எதிர்க் கட்சிகளும்தான். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.
“இறையாண்மையுள்ள இலங்கை நாட்டிற்கு பாதகமான எந்தத் தீர் மானத்தையும் இந்திய நாடா ளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்” என்று, பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொக்கரித் தார். “ஒரு நட்பு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது" என்று, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறினார். “தி.மு.க. வோடு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக் கொள்ள எங்களை அழைக்கா தீர்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மக்களை வைக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார். இவ்வாறு பல காரணங்கள் கூறி அனைத் துக் கட்சிகளும் தட்டிக் கழித்த தால். நாடாளுமன்ற அவைத் தலைவர் மீராக்குமார் தலை மையில் 20.3.2013 அன்று நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் கலைந்தது.
ஐ.நா. மனித உரிமை மன்றத் தில் 21.3.2013 அன்று அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் எதையும் இந்திய அரசு வலியுறுத்தாதையும் இக்கட்சிகள் கண்டு கொள்ள வில்லை.
ஆளும் காங்கிரசும் வட நாட்டுக் கட்சிகளும்:
தமிழினத்திற்கெதிராக வன்மம் பாராட்டுவதில் இந்திய ஆளுங்கட்சியும் அனைத்திந்திய எதிர்க்கட்சிகளும் ஒரே நிலை யில்தான் இருக்கின்றன. எனத் தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி சொல்லி வருவது. உண்மை நிலைதான் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதே நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக 7.3.2013 அன்று விவாதம் நடந்த போது இக்கட்சிகளின் தலைவர்கள் இலங்கைப் படை அப்பாவித் தமிழர்களை பல்லாயிரக் கணக் கில் கொன்று குவித்ததையும், தமிழர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த அட்டூழி யங்களுக்கு இந்திய அரசு துணை செய்தது என்றும் பேசியதை தொலைக்காட்சியின் வழியாக மக்கள் பார்த்தார்கள்.
குறிப்பாக முதன்மை எதிர்க் கட்சியான பாரதிய சனதா கூற்று கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்ற மக்களவையில் பா.ச.க. சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்கா பேசினார். அவர் தனது பேச்சைத் தொடங்கும் போதே “மிகக் கனத்த நெஞ்சோடு இந்த விவாதத்தில் கலந்து கொள்கி றேன். இலங்கையில் தமிழர் களுக்கு நேர்ந்த பேரழிவு நம் காலத்தில் நடந்த கொடுமையான பேரவலமாகும்" என்றார். “வெளி யுறவுத்துறை அமைச்ச ராக சில காலம் பணியாற்றிய பட்டறி விலிருந்து சொல்கிறேன் இலங் கையைக் கையாள்வது மிகக் எளிதான செயலாகும். அதனை இந்திய அரசு செய்யத் தவறி விட்டது" என்று குற்றம் சாட்டி னார்.
என்.டி.டிவி ஊடகவியலாளர் நித்தின் கோக்கலே எழுதிய “போரிலிருந்து அமைதி வரை இலங்கை" (srilanka from war to peace) என்ற நூலை மேற்கோள் காட்டி பேசிய யஸ்வந்த் சின்கா 2008 -2009 இல் அங்கு நடந்த போரை நடத்திய ஆறுபேர் கொண்ட உயர் மட்டக் குழுவில் மூன்று பேர் இந்திய அரசின் உச்சமட்ட அதிகாரிகள் ஆவர் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதுகெலும்பாக விளங்கிய கடற் புலிகளை அழித்தது இந்தியா தான் என்றும் கடற்புலிகளுக்கு உரிய ஆயுதக் கப்பல்களை அழித் ததன் மூலம் எல்.டி.டி.ஈ இயக் கத்தின் முதுகெலும்பை முறித்து இலங்கையின் வெற்றிக்கு வழி சமைத்தது இந்தியாதான் என்றும் விளக்கினார்.
“இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டுக்கு இராணுவ தீர்வுக் கிடையாது என்று அது வரை இருந்த இந்திய அரசின் மையமான கொள்கை கைவிடப் பட்டது. புலிகளை வெல்ல அப் பாவி மக்கள் எவ்வளவு பேரைக் கொன்றாலும் தாழ்வில்லை என்ற நிலைக்கு இந்திய அரசு சென்று விட்டது. இப்படியான அடிப் படைக் கொள்கை மாற்றத்திற்கு என்ன காரணமென்பது நாட் டிற்கு விளக்கப்படவே இல்லை.
அது மட்டுமல்ல 2011 ஜூன் 1 அன்று இலங்கையின் படைத் துறை அமைச்சர் (கோத்தபய இராசபட்சே) ஒரு நேர்காணலில் கூறியது கவனிக்கத்தக்கது. அவர் கூறினார் ‘1987 இல் வடமராட்சி போரின் போது இலங்கை அரசு செய்த தவறை இந்த முறை எங்களது குடியரசு தலைவர் செய்யவில்லை. இப் போரில் இறங்குவதற்கு முன்பா கவே இந்திய ஆட்சியின் உச்ச மட்டத் தலைவர்களோடு பேசி இந்திய அரசின் ஒத்துழைப்பைப் பெற்றோம். அரசியல் வழியிலும் பொருளியல் வழியிலும் வேறு நாடுகளின் அழுத்தம் இலங்கை யின் மீது பாயாமல் இந்தியா பார்த்துக்கொண்டது’ என்றார்.”
“இந்த கொள்கை மாற்றத் திற்கு இந்திய ஆட்சியாளர்கள் சொல்லக்கூடிய ஒரே காரணம் நாம் ஒதுங்கினால் சீனா வந்து விடும் சீனா வந்து விடும் என்பது தான். அச்சத்தின் அடிப்படை யில் அயலறவுக்கொள்கை வகுக் கப்படக் கூடாது. இந்தியா என்ற நமது மிகப் பெரிய நாடு தன்னம் பிக்கையின் அடிப் படையில் தனது வெளியுறவுக் கொள் கையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.”
“தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நண்பர்கள் இங்கே எடுத் துக் காட்டியது போல் போரின் போது மட்டுமின்றி போர் முடிந்த பிறகும், இப்போதும், அங்கு வாழும் தமிழ்ச் சகோதரர்களுக்கு எதிராக அக்கிரமங்கள் தொடர் கின்றன. இனப்படுகொலைத் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதும் இலங்கை அரசுதானே ஒரு தற்சார்பான பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணை நடத்த முன் வரவேண்டும். அதன் முடிவுப் படி குற்றவாளிகள் என அடையாளம் காணப்படுவோர் களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.” என்று யஸ்வந்த் சின்கா பேசினார்.
சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் பாலச்சந்திரன் படுகொலைப் பற்றி உருக்கமாக எடுத்துரைத்து இதற்கு நீதி கிடைக்க அழுத் தங்கள் தர வேண்டும் என்று கூறினார்.
திரிணமுல், இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் உறுப்பினர் களும் போருக்குப் பிந்தைய நிலைகளை சுட்டிக்காட்டி தமி ழர்கள் இலங்கையில் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படு வதைக் கண்டித்தனர்.
ஆனால் தாங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு மனதான தீர் மானம் ஒன்றை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண் டிய சூழல் வந்த போது இக் கட்சிகள் தங்களது உண்மை முகத்தை காட்டிவிட்டன.
காங்கிரசுக் கூட்டணியிலி ருந்து தி.மு.க. விலகி, மன்மோகன் சிங் ஆட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்டம் கண்ட சூழலில் கூட இந்த ஆட்சிக் கவிழ்ந்து விடாமல் முட்டுக் கொடுத்து நிற்கின்றன.
தமிழர்களின் இனப் பிரச் சினை காரணமாக இந்த ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ப தில் வடநாட்டுக் கட்சிகள் கண் ணும் கருத்துமாக இருக்கின்றன. அனைத்திந்தியக் கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆதர வான கருத்துக் கொண்டிருந் தாலும் அது அக்கட்சிகளின் அனைத்திந்திய முடிவாக வராது. என்பது மீண்டும் வெளிப்பட் டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை யில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை யும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்திந்திய செயலாளர்களில் ஒருவரான தோழர் து.இராசாவும் அக்கறைக் காட்டினாலும் அக் கட்சியின் நாடாளுமன்ற மக்க ளைவைக் குழு தலைவர், அக் கட்சியின் அனைத்திந்திய தொழிற்சங்கத் தலைவர் குரு தாஸ்தாஸ்குப்தா இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் மக்களவையில் அனுமதிக்க முடி யாது என்று கூறினார்.
இதற்கு முன்னர் அக் கட்சி யின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் பரதனோ, இப் போதைய தோழர் சுதாகர் ரெட்டியோ இதை ஒரு அனைத் திந்திய பிரச்சினையாக உரிய அழுத்ததோடு சொல்வதே கிடையாது.
இதே தோழர் குருதாஸ் தாஸ்குப்தா கேரள மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு மாலுமிகளை இந்தியாவுக்கு கொணர்வதில் சிக்கல் நேர்ந்தபோது நாடாளு மன்ற மண்டபம் அதிர குரல் எழுப்பினார்.
பா.ச.க. தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத் தீர்மானத்தை கோரிய போதும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவ்வாறான தீர்மானம் வருவதைக் கடுமை யாக எதிர்த்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் அதன் அனைத் திந்தியத் தலைமையும், அதன் தமிழகக் கிளையும் ஈழத்தமிழர் களுக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்திற்கு ஆதரவாக ஒரே குரலில் பேசி வருகின்றன.
இலங்கையில் தமிழின அழிப்பு நடந்ததை அவர்களுக்கு நாம் உரியவாறு எடுத்துக் கூறா ததால் ஏற்பட்ட நிலை அல்ல இது. ஏனெனில் இதே தலைவர் கள் 7.3.2013 அன்று நாடாளு மன் றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பி னர்களோடு இணைந்து அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் பற்றி உரத்துப் பேசியவர்கள்தாம். தமிழ்நாட்டு உறுப்பினர்களோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தவர்கள் தாம்.
உண்மையில் இச்சிக்கலில் இவர்களுக்கு அக்கறை இருந் திருக்குமானால் மன்மோகன் ஆட்சி பெரும்பான்மை இழந் ததை சாதகமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால் நேர் மாறாக நடந்து கொண்டார்கள்.
கட்சி சிக்கலா? இந்தியத்தின் இனப்பகையா?
தமிழர்களுக்கு எதிரான கொள்கை ஒரு கட்சி சார்ந்த அல்லது சோனியா என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் உணர்ச் சியை மட்டுமே சார்ந்த சிக்கலல்ல. இராசீவ் காந்தியின் கொலையை சாக்கிட்டு சோனியா மேற் கொள்ளும் பழிவாங்கும் அரசிய லுக்கு இச்சிக்கலில் முக்கியப் பங்குண்டு என்பதை மறுப்ப தற்கில்லை.
நாடாளு மன்றத்தி லேயே இலங்கையில் எனது கணக்கு இன்னும் தீர்க்கப்பட வில்லை என்று இராகுல் காந்தி கொக்கரித்ததை தமிழர்கள் மறந்து விடமுடியாது. ஆனால் ஈழத்தமிழர் தொடர் பான இந்திய அரசின் அணு முறையை வெறும் காங்கிரசுக் கட்சியின் பிரச்சினையாக அல்லது சோனியா காந்தி என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் அரசியலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. இவ்வாறான அணுகு முறை காங்கிரசுக்கு எதிரான தேர்தல் அரசியல் அணி வகுப்பில் இந்த இனச்சிக்கலை பயன்படுத் திக் கொள்ள சிலருக்கு உதவுமே அல்லாமல் இப்பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற உதவாது.
அதேபோல் இதை வெறும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலாக தாழ்த்திவிடக்கூடாது.
கருணாநிதியும், அவரது தி.மு.க.வும் ஈழத் தமிழர் இனப் படுகொலையில் செய்திருக்கிற துரோகம் மன்னிக்கப் பட முடியாத இரண்டகம் என்பதில் இருவேறு கருத்திற்கு இட மில்லை. 2009 இல் இன அழிப் புப்போர் உச்சத்தில் இருந்த போது சிங்கள – இந்திய கூட்ட ணிக்கு ஆதரவாக கருணாநிதி ஒரு உளவியல் போர் நடத்திக் கொண்டிருந்தார்.
தமிழீழமே பிணக்காடாய் மாறியிருந்த அந்த மே மாதத்தில், தமிழர்கள் இல்லங்களெல்லாம் இழவு வீடாக மாறியிருந்த சூழ லில் அவர் குடும்பத்தோடு தங்கி தில்லியில் பதவி பேரம் பேசிக் கொண்டிருந்தார். இதைச் சுட் டிக் காட்டி சில செய்தியாளர் கள் கேட்ட போது “ஓரில் நெய்தல் கறங்க, ஓரில் ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப.." என்று தொடங்கும் புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டி தமிழர் கள் அமைதியாக இருக்கு மாறு கூறினார்.
ஒரு வீட்டில் சாவுப் பறை ஒலித்துக் கொண்டிருக்க இன்னொரு வீட்டில் திருமண குதூகலத்தோடு மணவிழாப்பறை ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு வீட்டில் தலைவி பொருள் தேடிச் சென்ற தலைவன் வீடு திரும்பாததால் கண்ணீரோடு நிற்க, இன்னொரு வீட்டில் புது மணத்தில் இணைந்த ஆணும் பெண்ணும் கொஞ்சிக் கொண்டிருந்தனர். இந்த இரு வேறு சூழலும் உலகத்தின் இயற்கை இந்த இயல்பை உணர்ந்து அமைதி அடைய வேண்டும் என்று மாபெரும் மெய்யியியலைக் கூறிய பாடல் அது.
ஆனால் இப்பாடலைத் தனது தன்னலத்திற்குத் துணையாக்கிக் கொண்டார் கருணாநிதி.
தமிழர்களின் இல்லங்கள் இழவு வீடாக இருந்த போதும் என்னுடைய வீடு பதவி ஏற்பு விழாவில் மகிழ்ச்சிக் கொண்டி ருப்பதைக் கண்டு கலங்காதீர்கள். இதுதான் உலகத்தின் இயற்கை. எனக்கூறி தமிழகத்தில் கணிச மான மக்களை மடைமாற்றம் செய்ய ஒரு உளவியல் போர் நடத்தியவர்தான் கருணாநிதி.
“போரை நிறுத்து" என்ற ஒற்றை முழக்கத்தில் தமிழகமே கொந்தளித்த போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தனது தோழமைக் கட்சியான விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட தமிழின உணர்வாளர் கள் மீது கடும் அடக்கு முறை யைக் கட்ட விழ்த்து விட்டது தான் தி.மு.க. ஆட்சி.
காங்கிரசுக் கூட்டணியிலி ருந்து அன்றைக்கு விலகுவதாக அறிவித்திருந்தால் மன் மோகன் ஆட்சிக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ற வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அவ்வாறு செய்யாமல் பதவி அரசியலில் மூழ்கித் திளைத்தார் கருணாநிதி. என்றக் குற்றச்சாட்டு சரியானது.
ஆனால் தி.மு.க. விலகியிருந் தால் அந்த ஆட்சிக் கவிழ்ந் திருக்கும் என்ற கணக்கு வட நாட்டு தலைவர்களின் கொள்கை களை சரியாக அறிந்து கொள் ளாததால் போடுகிற கணக்கு. இப்போது நேர்ந்தது அப்போதும் நிகழ்ந்திருக்கும். உடனடியாக மீண்டும் ஒரு தேர்தலை நாடு தாங்காது. என்ற கூடுதல் காரண மும் அப்போது சொல்லப் பட்டி ருக்கும். தமிழர்களின் இனப்பிரச் சினை காரணமாக இந்திய ஆட்சிக் கவிழ்வதை வட நாட் டுக் கட்சிகள் ஒரு போதும் அனு மதிக்க மாட்டா.
எனவே இது ஒரு கட்சி சார்ந்த சிக்கலல்ல. இன உறவு தொடர்பான சிக்கல். இந்தியா என்ற கட்டமைப்பே தமிழினப் பகைக் கட்டமைப்பு.
புவிசார் அரசியலும், இனப் பகையும்:
கட்சிக் கடந்து இந்தியா ஈழத்தமிழர்களுகெதிராக பகைப் பாராட்டுவதற்கு என்ன காரணம்? கட்சிகள், கூட்டணிகள் என்ற வேறுபாடு மேம்போக்கான சிற் சில அழுத்த மாறுபாடுகளை அளிக்கக் கூடுமென்றாலும், ஈழத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் அணுகுமுறை கட்சி மற்றும் கூட்டணி கடந்த ஒன்று என் பதை மேலே பார்த்தோம்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கை தீவின் புவிசார் இருப் பிடம் முகாமையானது. எனவே இந்தியப் பெருங்கடலில் தங்க ளது புவிசார் ஆதிக்க நலனை பாதுகாத்துக் கொள்ள சீனா, பாகிஸ்தான், இரஷ்யா, அமெ ரிக்கா போன்ற நாடுகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியா களமிறங்கு கிறது. என்ற மதிப்பீடு இங்கு சில தோழர்களால் முன் வைக்கப்படுகிறது.
புவிசார் ஆதிக்க நலன்கள் இந்திய வெளியுறவுக் கொள்கை யில் பொதுவாகவும், இலங்கை தொடர்பான அணுகு முறையி லும் செயலாற்றுகின்றன. என் பதை முற்றிலும் மறுப்பதற் கில்லை. ஆனால் ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இந்தியாவின் அணுகு முறைக்கு அதன் புவிசார் அரசியல்தான் முதன்மைக் காரணமா என்பது விவாதத்திற் குரியது.
‘புவிசார் அரசியல் நலன்களுக் காகத்தான் இலங்கை அரசோடு இணைந்து போகிறோம்’ என வேறுவேறு சொற்களில் இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு எதிராக பொருளா தார தடை விதித்தால் அந்த இடத்தை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்றும், படை வகையில் இலங்கைக்கு உதவி செய்ய வில்லையென்றால் சீனா அங்கு இராணு வழியில் காலூன்றி விடும் என்றும், பன்னாட்டு அரங்கில் இலங் கைக்கு ஆதரவாக நாம் நிற்க வில்லையென்றால் சீனா இலங் கையோடு நெருங்கிவிடும் என் றும் இந்திய ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். இந்தியாவின் புவி சார் நலன்கள் என் பதைத் தான் ஆட்சியாளர்களும் கூறுகிறார்கள்.
இலங்கை குறித்த இந்தியா வின் கொள்கைக்கு அதன் புவி சார் ஆதிக்க நலன் ஒரு கார ணமாக இருந்தாலும் அது ஈழத் தமிழர்களுக்கு எதிராக வடிவம் கொள்வதற்கு புவிசார் அரசியல் முதன்மைக் காரணம் அன்று.
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் புவிசார் நலன்களுக்கு எதிராக இருந்ததே இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க சுடுமலை உரையிலிருந்து 2008 மாவீரர்நாள் உரை வரை தமிழீ ழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இதனை மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
கடற்புலிகள் வலுவாக இருந்த வரை இந்தியாவுக்கு எதிரான எந்த சக்தியும் இலங்கை கடற் பரப்பில் தலை நீட்ட முடிய வில்லை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் புவிசார் நலன் களை பாதுகாக்கும் நட்பு சக்தி யாக தமிழீழம் விளங்கும் என் பதை விடுதலைப்புலிகள் மீண் டும் மீண்டும் உறுதி கூறியி ருக்கிறார்கள். இந்திய வணிக நிறுவனங்களுக்கு, தொழில் நிறு வனங்களுக்கு முற்றிலும் எதிரான பொருளியல் கொள்கையை விடுதலைப்புலிகள் கொண்டிருக்க வில்லை. போரில் தரை மட்டமான ஒரு நாட்டை, பொருளி யல் முற்றுகையில் வைக்கப்பட்ட ஒரு நாட்டை புலம் பெயர் தமிழர்களின் நிதியை வைத்து மட்டும் மீளமைத்து விடமுடி யாது என்ற உண் மையை அறியா தவர்களல்ல புலிகள்.
எந்த விடுதலை இயக்கத் தையும் போல தற்சார்பான ஒரு தேசத்தை புலிகளும் கட்டி எழுப்ப முயல்வார்கள் என்பது உண்மையே ஆயினும் 1991 இல் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட புதிய நிலைமை களைக் கருத்தில் கொண்டு கலப்பு பொருளியலே சுதந்திர தமிழீழத்தின் பொருளியல் கொள்கையாக இருக்கும் என விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் பல முறை தெளிவுப்படுத்தியிருக்கிறார். எனவே இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கோ, புவிசார் அரசியல் நலன்களுக்கே எதிராக புலிகள் இல்லை என்பது தெளிவு.
மறுபுறம் இந்தியா எவ்வள வுதான் உதவி செய்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவின் பக்கமே அதிகமாக சாய்ந்தார்கள் என்பதும் வெளிப்படை உண்மை.
இந்திய அரசுக்கு இந்த உண்மைகள் தெரியாததல்ல. இந்திய பெருங்கடலில் தங்களது பொருளியல் நலன்களையும், புவிசார் நலன்களையும் விடு தலைப்புலிகளின் துணையோடே அவர்கள் பாதுகாத்துக் கொண்டி ருக்க முடியும். சிங்கள ஆட்சி யாளர்களை விட விடுதலைப் புலிகள் நம்பகமான நண்பர் களாக இருந்திருப்பார்கள்.
இவ்வளவு இருந்தும் தமிழினப்படுகொலைக்கு இந்தியா துணை செய்ததற்கு முதன்மைக் காரணம் இந்தியாவின் தமிழினப் பகைக் கொள்கையே ஆகும். எந்த ஒரு அரசுக்கும் ஒரு வர்க்கச்சார்பு இருப்பது போலவே இனச்சார்பும் இருக்கும். வரலாறு நெடுகிலும் இது தவிர்க்க முடியாதது. இந்திய அரசானது இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு சார்பான வர்க்க கொள்கை மட்டும் கொண்ட அரசு அன்று. ஆரிய இனச்சார்பான இனக் கொள்கைக் கொண்ட அரசும் ஆகும்.
அரசமைப்புச் சட்டத்தில் இந்தியாவிற்கு சூட்டப்பட்டுள்ள பாரதம் என்ற பெயரும், சக்கரம், சிங்கம், பத்மபூஷன், ஆரிய பட்டா, போன்ற குறியீடுகளும் ஆரிய இனச்சார்பானவையே. இந்தியாவின் அடையாளமாக ஆரியக் குறியீடுகளும், சமற் கிருத மயமான இந்தியும் முன்வைக் கப்படுகிறது. ஆரியப் பெருமை களே இந்தியாவின் வரலாற்று பெருமைகளாக வலியுறுத்தப் படுகிறது.
பார்ப்பன வேத மதம் மட்டுமின்றி ஜைன, புத்தமதங் களும், ஆரிய மதங்களாக இருப் பதால்தான் வடநாட்டவர்கள் சாதி பேதமின்றி தமிழினத்திற்கு எதிராக அணி திரளமுடிகிறது.
ஆரிய அடையாளங்கள் ஒட்டு மொத்த இந்தியாவின் அடையாளங்களாக மேலாண்மை செய்து தமிழின அடையாளங்களை, தமிழ் மொழியை நசுக்குகின்றன. வரலாறு நெடுகிலும் ஆரிய ஆதிக் கத்திற்கும், சமற்கிருத மேலாண் மைக்கும் எதிராக தமிழினமும், தமிழ்மொழியும் மட் டுமே இந்த துணைக் கண்டத்தில் போராடி வந்திருக்கிறது. மற்ற மொழியினங்கள் பெரும்பாலும் ஆரியத் தோடும், சமற்கிருதத் தோடும் வெவ்வேரு அளவுகளில் கலந்து விட்டதால் இந்தியத் தோடு அவர்களால் சமரச வாழ்வு நடத்த முடிகிறது.
இந்தியத்தோடு மோதிக் கொண்டிருக்கிற காசுமீர், நாகா, மணிப்பூரி போன்ற தேசிய இனங்கள் ஆரிய வளையத்திற்கு வெளியில் இருப்பவை என்பது தற்செயலானதல்ல.
ஆரிய இந்தியத்தின் உள் நாட்டுத் தமிழினப்பகைக் கொள் கையின் நீட்சியே. ஈழத் தமிழர் களுக் கெதிரான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகும். காவிரி, முல்லைப்பெரியாறு, மூன்றுதமிழர் சாவுத்தண்டனை, போன்ற பல சிக்கல் களிலும் அது தெளிவாக வெளிப்படுகிறது.
நர்மதை ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கல், கிருஷ்ணா ஆற்று நீர்ச் சிக்கல் ஆகியவற்றில் சட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய அரசு காவிரிச் சிக்கலில் சட்ட விரோதமாக செயல்படுவதைப் பார்க்கிறோம். தமிழினப் பகை அணுகுமுறை இது.
மீனவர் சிக்கலில் அது மேலும் துல்லியமாகத் தெரிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொலை தொடர்பான பிரச்சினையில் இத்தாலியோடு தூதரக உறவைக் கூட துண்டிக்கத் துணிந்துள்ள இந்திய அரசு, இத்தாலித் தூதரை பிணைக் கைதி போல் வைத்த இந்திய அரசு 600 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைப்படை கொன்ற பிறகும் அசையவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக “கண்டனம்” என்ற சொல்லைக் கூட உச்சரிக்க முன்வராதவர் தான் இந்தியப் பிரதமர். கேரள மீனவர் சிக்கலில் இத்தாலிக்கு எதிராகக் கூச்சல் எழுப்பிய வட நாட்டுத் தலைவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங் கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதே இல்லை.
உள்நாட்டு தமிழர் தொடர்பான பகைப்போக்கே வெளியுறவிலும், ஈழத்தமிழர் சிக்கலிலும் வெளிப்படுகிறது. ஆரியத்தின் இன்றைய நவீன வடிவம் இந்தியா. ஆரியத்தின் இன்னொரு கிளை சிங்களம். எனவே ஆரிய இந்தியாவோடு, இலங்கை சிங்களமும் இயல்பான கூட்டாளியாக செயல்பட்டு தமிழினத்தை அழிக்கிறது.
இந்த இந்தியத்திற்கும் சிங்க ளத்திற்கும் இடையிலான இன உறவு பல்வேறு வரலாற்று ஆய்வுகளால் மெய்பிக்கப் பட்டி ருந்தாலும் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் இணையங் களில் வெளிப்படுத்தியுள்ள கருத்து இதற்கு அண்மைய சான்றாகும். “சிங்களர்கள் வட இந்திய பூர்வீக வாசிகள்" என்று குறிப்பிட்டுள்ள கரியவாஸம் சிங் களர்களின் உரிமைகளுக்காகவே இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டும் என்று உரிமையோடு இந்தியாவை கேட்டுக் கொண் டுள்ளார்.(காண்க: தினமணி, சென்னை, 27.3.2013)
எனவே தமிழின உணர் வாளர்கள் தமிழர் சிக்கல்களை ஒரு கட்சி சார்ந்த அல்லது ஒரு கூட்டணி சார்ந்த சிக்கலாகப் பிறழ்ச்சியாக புரிந்துகொள்ளக் கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத்தின் இனக்கொள்கை என்ற உண்மையை உணர வேண்டும். இந்தியத்தின் இந்த தமிழினப்பகைப் போக்கு கட்சிக் கடந்தது. எனவே எக்காரணம் கொண்டு தேர்தல் பதவி அரசியலுக்குள் வைத்து இனச் சிக்கலுக்கு தீர்வுகாண முயலும் உதவா தப் பாதைக்கு தமிழர்கள் சென்று விடக்கூடாது.
இந்தியா தமிழினத்தைப் பகையாகப் பார்க்கிறது. எனவே ஏதாவது கூட்டணித் தந்திரங்கள் செய்து இந்தியாவைப் புரிய வைப்பது இயலாது. இந்தியா வைப் பணிய வைக்க முடியுமே தவிர, புரிய வைக்க முடியாது.
இந்த அடிப்படை உண்மை யைப் புரிந்து கொண்டால்தான் உடனடிக் கோரிக்கைகளை அடைவதற்கு உத்தி வகுக்கவும் முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடிமை நிலைக்கு எதிரான விடுதலைப் போராட்டமும், ஈழத் தமிழர்கள் விடுதலை போராட்டமும் ஒரு சேர நடைபெற வேண்டும்.
இதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவிக்கை நீட்ட வேண்டும்.

0 கருத்துகள்:

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் அ.தி.மு.க. அரசின் முடிவை கண்டிக்கிறோம்! - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில், தமிழின உணர்வாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் உளவுத்துறையின் துணையோடு, சென்னை மாநகர இணை ஆணையர் தலைமையில், தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படுவதாக இன்று இந்து நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.  
சமூக வலைத்தளங்களில் செயல்படுகின்ற தமிழக இளைஞர்கள், அதில் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதுடன், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசு இழைத்தக் குற்றங்களை மற்றவர்களுக்கு தெரியவைக்கும் வகையில் பரப்புரையும் மேற்கொள்கின்றனர்.
பெரும் ஊடகங்கள் இன்றைக்கு அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், இது போன்ற சமூக வலைத்தளங்கள்தான் மக்களின் உண்மையான கருத்துகளை பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்கிவருகின்றது. இதனால் தான், உலகெங்கும் வெவ்வேறு சிக்கல்களில் போராடுகின்ற மக்கள், இயல்பாக சமூக வலைத்தளங்களில் தங்கள் போராட்டங்களின் ஞாயம் குறித்து பரப்புரை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு மாணவர்கள், இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசு மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும், தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், தமிழீழ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்து வெளியில் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இது இந்திய அரசமைப்புச் சட்ட விதி வழங்கியுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை அடிப்படையிலான உரிமையாகும்.
இந்நிலையில், தமிழகக் காவல்துறையின் இவ்வறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் இயங்கும் மாணவர்களையும், தமிழின உணர்வாளர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கலையும், னி உரிமை இயக்கங்களையும் ஒடுக்குவதற்காக விடுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கின்ற சர்வாதிகாரச் செயலுமாகும். இத் தாக்குதலில் தமிழின உணர்வு அரசியலை நோக்கி கூர்மைப்பட்டு உள்ளதை தமிழர்கள் கவத்தில் கொள்ள வேண்டும்.
ஒருபுறம், சட்டப்பேரவையில் தமிழீழத்திற்கான பல தீர்மானங்களை இயற்றுகின்ற .தி.மு.. அரசு, இன்னொருபுறம் போராடும் மக்களை கண்காணிக்கும் நயவஞ்சக செயலிலும் டுப்படுகிறது. தமீழீழம் தொடர்பான போராட்டங்களையும் வெளிப்பாடுகளையும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள  செயலலிதா அரசு விரும்புகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
எனவே கருத்துரிமையைப் றிக்கின்ற தமிழினப்பகை நடவடிக்கையை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் உடனடியாக கவனம் செலுத்தி, அரசின் இம்முடிவுக்கு எதிராக கரம் கோத்துப் போராடவும் அழைப்பு விடுக்கிறோம்.
இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்: