" தொழிலாளர் பகைச் சட்டத் திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
தொழிலாளர் பகைச் சட்டத் திருத்தத்தைமுற்றிலும் திரும்பப் பெற வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
=====================================
உழைப்பாளிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது.
ஆயினும் படு பிற்போக்கான – கொடுமையான இந்த சட்டத் திருத்த த்தை முழுமையாகத் திரும்பப் பெறாமல், அதன் செயல்பாட்டை மட்டும் நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பது – அந்தக் கொலைவாள் தொழிலாளர்களின் தலைக்கு மேல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், போலி கௌரவம் பார்க்கிறாரா, அல்லது வாய்ப்பு கிடைக்கும்போது செயல்படுத்திவிடலாம் என நேரம் பார்க்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.
தொழிற்சாலை சட்டத்தில், 65A என்ற சட்டத்திருத்தம், எந்தக் கோணத்திலும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு படுபிற்போக்கான இச்சட்டத் திருத்த த்தை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இணையப் பராமரிப்பு - தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095, 9841949462 | முகநூல் : https://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : https://www.kannottam.com இணையம் : https://www.tamizhdesiyam.com
சுட்டுரை : https://www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : https://www.youtube.com/tamizhdesiyam
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment